”மனிதனை வழிகாட்டும் மார்க்கம் சினிமாவுக்கு சீல் வைக்கிறதா?”

ன்று நடைமுறையில் அதிக தீமையை உண்டாக்குவதில் சினிமாவின் தனிப் பங்கு பற்றி பல செய்திகளை முன்னைய ஆக்கங்களில் மிகச் சுறுக்கமாக ஞாபகமூட்டிய சந்தோசத்துடன் சினிமா தொடர்பான இஸ்லாமிய நிலைப்பாட்டையும் வெளிக்கொண்டுவருவது காலத்தின் தேவையாக இருக்கிறது. அதனை கவனத்தில் கொண்டு அது தொடர்பான சில விடயங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
 
14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடைசி தூதர் முகம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் தூதுச் செய்தியை பூரணப்படுத்திச் சென்றுவிட்டார்கள் என்பது ஒவ்வொரு உண்மையான முஸ்லிம்களதும் நம்பிக்கையாகும், ஆனால் அந்த தூதுச் செய்திகள் சுமந்துவந்த அல் குர்ஆன் அல்லது ஹதீஸில் சினிமா கூடும் அல்லது கூடாது என்பதற்கான நேரடியான எந்த செய்திகளையும் பார்க்க முடியவில்லை. 


ஆனால் இஸ்லாமிய சட்ட திட்டங்களை சரிவர படிக்கின்ற போது, இஸ்லாத்தில் சினிமாவின் நிலையை சரிவர புரிந்துகொள்ள முடியும்.
அறியாமையில் புதைந்துகிடந்த அறபு தீபகற்ப மக்களுக்கு, மனித வாழ்க்கையின் ஆரம்பம் முதல் இறுதி வரை தேவையான அனைத்துப் போதனைகளையும் கற்றுக்கொடுக்கப்பட்டது. அந்த போதனைகள் இன்றளவும் உலகின் பெறும்பான்மை மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கிறது. அந்த மாற்றத்திற்குரிய முக்கிய காரணம் என்ன என்றால் நடைமுறைச் சாத்தியாமான, அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியுமான வகையில் அந்த தூதுச் செய்திகள் அமைந்ததுவேயாகும்.

அந்த அறியாமைச் சமூகத்தில் சினிமா கூடாது, அது சமூகத்தை வழிகெடுக்கும் என்று ஒரு செய்தி நேரடியாக அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டால் அல்லது முகம்மது (ஸல்) அவர்களால் சொல்லப்பட்டால் மக்கள் ஒன்றும் புரியாதவர்களாக திகைத்து நின்றிருப்பார்கள். காரணம் இந்த சினிமா என்ற துறை அந்த சமூகத்தில் அறிமுகமற்றுக் காணப்பட்டதுவேயாகும்


அதனால் தான் இஸ்லாமிய சட்டதிட்டங்களை சரிவர ஆராய்வதன் மூலம் அதற்கான தீர்ப்பை தேட வேண்டி இருக்கிறது.


இன்றைய சினிமா 95 வீதம் தீமைகளையே சமூகத்திற்கு வழங்குகிறது என்பதால் இதனை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்காது என்பதை நடைமுறையில் பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


நடைமுறையே அப்படி இருக்கும் போது வாழ்க்கை வழிகாட்டிகளான அல் குர் ஆனும் அல் ஹதீஸும் எப்படியான தீர்ப்பை வழங்கும் என்பதை பிரத்தியோகமாகச் சொல்லத் தேவையில்லை. ஆனாலும் எப்படி இஸ்லாம் இந்த சினிமாவுக்கும் அது போன்ற தீமைகளைத் தரக்கூடிய ஏனைய செயல்களுக்கும் சீல் வைக்கிறது என்பதை ஒரு சில பந்திகளில் சொல்லியே ஆக வேண்டும்.


அதனை கீழ்வரும் விதத்தில் பட்டியலிடலாம்:

1.  இஸ்லாம் ஆபாசத்தை தடுக்கிறது.

A.   வீட்டில் வயது வந்த சிறுவர் சிறுமிகளை பிரித்து வைக்க இஸ்லாம் ஏவுகிறது.
பெற்றோர்களுடன் பிள்ளைகள் வீட்டில் இருக்கும் போது கூட அவர்களின் ஒழுக்க நெறிகளை இஸ்லாம் மிக அழகாகக் கற்றுத்தருகிறது.


இந்த சட்டத்தை இஸ்லாம் மட்டுமே ஏவுகிறது. இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படாத சமூகம் சந்திக்கின்ற பிரச்சினைகளை இன்று செய்திகளாக நாம் படித்துக்கொண்டிருக்கிறோம்.


தாயும் மகனும், தந்தையும் மகளும், சகோதரனும் சகோதரியும் என்ற ஆபாச செய்திகள் தான் அவைகள்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنكُمْ ثَلَاثَ مَرَّاتٍ مِن قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُم مِّنَ الظَّهِيرَةِ وَمِن بَعْدِ صَلَاةِ الْعِشَاء ثَلَاثُ عَوْرَاتٍ لَّكُمْ لَيْسَ عَلَيْكُمْ وَلَا عَلَيْهِمْ جُنَاحٌ بَعْدَهُنَّ طَوَّافُونَ عَلَيْكُم بَعْضُكُمْ عَلَى بَعْضٍ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ]
وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِن قَبْلِهِمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ [النور : 58و59]


நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பக-ல் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இக்ஷாத் தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.”  (அல் குர் ஆன் 24 : 58-59)

B.   சகோதரனுடைய மனைவி தனிமையிலிருக்கும் போது அந்த சகோதரனின் வயது வந்த சகோதரர்களுடன் தனிமையில் இருக்கக்கூடாது.
ஒரு பெண் கனவன் இல்லாது தனிமையிலிருக்கும் போது கனவனுடைய சகோதர்ரர்கள் பிரவேசிப்பதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டித்தார்கள்.

C.   ஒரு பெண் திருமணம் செய்துகொள்ள அனுமதியற்ற எந்த ஆடவருடனும் தேவையற்ற முறையில், தேவையற்ற விதத்தில் தொடர்பை வைத்துக்கொள்ளக் கூடாது.

قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ [النور : 30]
(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர் ஆன் 24 : 30)

وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاء بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاء بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُوْلِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاء وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعاً أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ [النور : 31]


தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!
அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்.


தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள்,பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.


அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.”                                                (அல்குர் ஆன் 24: 31)

 இந்தியாவில் அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் தான் சில தினங்களுக்கு முன் திரையிடப்பட்ட எந்திரன். இதன் கதாநாயகன் ஒரு குடும்பத் தலைவன், இதன் கதாநாயகி வேறு ஒருவரின் மனைவி. இவர்கள் இருவரும் பகிரங்கமாக கட்டியணைத்து முத்தமிட்டுகொள்கிறார்கள். சரளமாக நடனமாடுகிறார்கள்.


இவர்களது இந்த செயலை எந்த வகையில் அனுமதிக்கத்தக்கது என்பதை ஜந்தறிவுள்ள ஒரு சமூகம் இருந்தால் சிந்தித்துத் தெரிந்து கொள்வார்கள்.
நான் கெட்டால் ஊரையும் கெடுப்பேன் என்பது இவர்களது சபதம்
இந்த நாகரீகமற்றவர்களுக்கு உபதேசமாகத்தான் மேலே நான் சொன்ன அல் குர்ஆனிய வசங்கள் பேசுகிறது.

2.  வீண் விரயங்களை கண்டிக்கிறது. 
 
சினிமாத்துறையில் செயலாற்றுவதன் மூலம் அல்லது அதனை பார்ப்பதற்கு எமது நேரத்தை ஒதுக்குவதன் மூலம் செல்வம் மற்றும் நேரம் வீண்விரயம் செய்யப்படுகிறது.

1.  செல்வம்:
ஒரு படத்தை எடுப்பதற்கு கோடிக்கனக்கான தொகையை செலவிடல்.
அல்லது படத்தை பார்ப்பவர் தினந்தினம் அதற்கு செலுத்துகிற தொகை.

2.  நேரம்:
ஒரு படத்தை பல மாதங்களை செலவிடுகிறார்கள்.
பார்ப்பவர் கிட்ட்த்தட்ட 3 மணித்தியாளத்தை இதற்காக ஒதுக்குகிறார். ஒரு மாத்த்திற்கு 90 மணித்தியாளங்கள் வீணடிக்கப்படுகிறது.

பார்த்த படத்தை பற்றி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள பல மணித்தியாளங்கள் ஒதுக்கப்படுகிறது.

ஓய்வு நேரங்களை போக்க சினிமாப் படங்களை பயன்படுத்துவதாக அதிகமான இளைஞர்களும் பெண்களும் காரணம் சொல்லுவர், ஆனால் சரியாகப் பார்த்தால் படம்பார்ப்பதற்காகவே ஓய்வு நேரங்களை உறுவாக்குகிறார்கள்.

வீண் விரயத்தை அல்லாஹ் வெருக்கிறான்,

وَهُوَ الَّذِي أَنشَأَ جَنَّاتٍ مَّعْرُوشَاتٍ وَغَيْرَ مَعْرُوشَاتٍ وَالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفاً أُكُلُهُ وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ مُتَشَابِهاً وَغَيْرَ مُتَشَابِهٍ كُلُواْ مِن ثَمَرِهِ إِذَا أَثْمَرَ وَآتُواْ حَقَّهُ يَوْمَ حَصَادِهِ وَلاَ تُسْرِفُواْ إِنَّهُ لاَ يُحِبُّ الْمُسْرِفِينَ [الأنعام : 141]


படர விடப்பட்ட, மற்றும் படர விடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்று பட்டும் (தன்மையில்) வேறு பட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒ-வ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும் போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.                      (அல் குர்ஆன் 06: 141)

يَا بَنِي آدَمَ خُذُواْ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ وكُلُواْ وَاشْرَبُواْ وَلاَ تُسْرِفُواْ إِنَّهُ لاَ يُحِبُّ الْمُسْرِفِينَ [الأعراف : 31]


ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.                                                                   (அல் குர்ஆன் 07: 31)


3. அநாகரியமான, அசிங்கமான செயல், நடத்தைகளை வெறுக்கிறது.

إِنَّ اللّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالإِحْسَانِ وَإِيتَاء ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاء وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ [النحل : 90]


‘நீதி, நன்மை, மற்றும் உறவினருக்குக் கொடுப்பதை அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுவதை உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். (அல்குர் ஆன்  16 ; 90)

4.  சமூக பிளவுகளை உண்டுபண்ணும் காரியங்களை தவிக்கிறது, தவிர்க்கும்படியும் கட்டளையிடுகிறது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَومٌ مِّن قَوْمٍ عَسَى أَن يَكُونُوا خَيْراً مِّنْهُمْ وَلَا نِسَاء مِّن نِّسَاء عَسَى أَن يَكُنَّ خَيْراً مِّنْهُنَّ وَلَا تَلْمِزُوا أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ بِئْسَ الاِسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ وَمَن لَّمْ يَتُبْ فَأُوْلَئِكَ هُمُ الظَّالِمُونَ]
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيراً مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضاً أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتاً فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ [الحجرات : 11و12]


நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள். நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.” (அல்குர் ஆன் 49 :11-12)


சினிமாக்களில் ஒரு மத்த்தை இன்னுமொரு மதம் விமர்சிப்பதையும் ஒரு சமூகத்தை இன்னொரு சமூக தால்த்தி சித்தரிப்பதும் மலிவாகவே காணப்படுகிறது.
5.   
தீங்கு தரக்கூடிய எல்லா வகையான போதைகளையும் வேண்டாம் என போதிக்கிறது.

قُل لاَّ يَسْتَوِي الْخَبِيثُ وَالطَّيِّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيثِ فَاتَّقُواْ اللّهَ يَا أُوْلِي الأَلْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ [المائدة : 100]


"கெட்டதும், நல்லதும் சமமாகாது என்று கூறுவீராக! கெட்டது அதிகமாக இருப்பது உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே. அறிவுடையோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!” ( அல்குர் ஆன் 05 : 100)

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ [آل عمران : 104]


“நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.(அல்குர் ஆன் 03: 104)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ وَمَن يَتَّبِعْ خُطُوَاتِ الشَّيْطَانِ فَإِنَّهُ يَأْمُرُ بِالْفَحْشَاء وَالْمُنكَرِ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ مَا زَكَا مِنكُم مِّنْ أَحَدٍ أَبَداً وَلَكِنَّ اللَّهَ يُزَكِّي مَن يَشَاءُ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ [النور : 21]


நம்பிக்கை கொண்டோரே! க்ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! யார் க்ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாரோ (அவர் வழி கெடுவார்). ஏனெனில் அவன் வெட்கக்கேடானவற்றையும், தீமையையும் தூண்டுகிறான். அல்லாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாதிருந்தால் ஒரு போதும் உங்களில் எவரையும் அவன் பரிசுத்தமாக்கியிருக்க மாட்டான். எனினும் தான் நாடியோரை அல்லாஹ் பரிசுத்தமாக்குகிறான். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.”                                    (அல் குர்ஆன் 24 : 21)

இன்றைய சினிமாவில் குறிப்பாக மூன்று விடயங்கள் ஞாபகமூட்ட்த்தக்கது,

1.   இசை – ‘இசையில்லா சினிமா இல்லை என்கிற போது அது சமூகத்திற்கு தேவையற்றதாகும் என்று வடிவமைக்கப்பட்டுவிட்டது.

2.   3. புகைத்தல், மது அருந்துதல்........- எல்லா மத்தைச் சார்ந்த வைத்தியர்களாலும் அறிஞர்கர்களாலும் வேண்டாம் என்று எடுத்துரைக்கிற செயல் தான் புகை மற்றும் போதை தரக்கூடிய குடிபாணங்களும்.
அந்த வைத்தியர்களும் அறிஞர்களும் சொல்லுவது; சமூக ஒழுக்க விழுமியங்களை சீரழிப்பதுடன் தனிமனித சிந்தனை மற்றும் உடல் உள ஆரோக்கியத்துக்கும் ஆப்பு வைக்கிறது என்பதாகும்.

இதைத்தான் இஸ்லாமும் மிகத் தெளிவாகச் சொல்லுகிறது.
சினிமாவில் அதிகமாக எல்லா நடிகர்களும் வில்லன்களும் போதியளவு இசை மயக்கத்திலும் போதை, புகை மயக்கத்திலும் பாதி படத்தை கடத்துகிறனர்.

அதிலும் வேடிக்கை பெண்களின் அட்டகாசம் தான்.
கதாநாயகியாக வரக்கூடிய அல்லது அவளுக்கு துணைவியாக வரக்கூடிய யுவதிகள், குமரிகள் போதையில் தாராளமாக தல்லாடுகிறார்கள்.
பாடல் காட்சிகளில் இவர்களின் ஆடையும் சாடையும் சமூகத்தை நரகத்தில் தள்ளிவிடுவதில் தலைமை வைக்கிறார்கள்.

கல்லூரி மாணவ, மாணவியாக வேடம் தரித்தாலும் இதே நிலைதான். சமூக தலைவலான, சீர்திருத்தவாதியாக பாத்திரம் கிடைத்தாலும் இதே ஆட்டம்தான்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالأَنصَابُ وَالأَزْلاَمُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ [المائدة : 90]


அவர்களில் அதிகமானோர் (ஏக இறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஏற்படுத்திக் கொள்வதை நீர் காண்கிறீர். தமக்காக அவர்கள் செய்த வினை கெட்டது. அவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். வேதனையில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.” (அல் குர்ஆன் 05 : 90)

சீனிமாவை ஏன் இஸ்லாம் கூடாது என்கிறது என்பதற்கு ஒரு சில விடயங்களை பதிந்திருக்கிறேன், இதனைக் கொண்டே எமது சமூகத்தில் மாற்றங்களை கொண்டுவர ஒன்றுபடுவோம்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

தொடர்வது சினிமாவுக்கு எனது மகுடி



எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

3 comments:

Anonymous said...

//அதிலும் வேடிக்கை பெண்களின் அட்டகாசம் தான்.
கதாநாயகியாக வரக்கூடிய அல்லது அவளுக்கு துணைவியாக வரக்கூடிய யுவதிகள், குமரிகள் போதையில் தாராளமாக தல்லாடுகிறார்கள்.
பாடல் காட்சிகளில் இவர்களின் ஆடையும் சாடையும் சமூகத்தை நரகத்தில் தள்ளிவிடுவதில் தலைமை வைக்கிறார்கள்.

கல்லூரி மாணவ, மாணவியாக வேடம் தரித்தாலும் இதே நிலைதான். சமூக தலைவலான, சீர்திருத்தவாதியாக பாத்திரம் கிடைத்தாலும் இதே ஆட்டம்தான்.//
மதுரை ராஜா

Anonymous said...

அன்பின் ரிழ்வான் அவர்களுக்கு, இஸ்லாத்தில் சினிமா பற்றி அதிகமாகச் சொல்லி இருக்கிறீர்கள்,
இன்றைய பல இணையத்தளங்கள் தராத செய்திகள் தான் இவைகள்.

அதே நேரம், மதங்களுக்கிடையில் ஒப்பீட்டாய்வு செய்பவராக நீங்கள் இருப்பதால், இந்து, கிறிஸ்துவ மதங்கள் சினிமா தொடர்பாக என்ன சொல்லுகிறது என்பதையும் தெளிவுபடுத்தவும்.

உங்கள் அறிவு வலர்ச்சிக்கு எங்கள் பிரார்த்தனைகள்.

முஹம்மத் பஷால்

Issadeen Rilwan said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்,

மதுரை ராஜா, முஹம்மத் பஷால் மற்றும் எமது அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்,

சகோ. பஷால் சொல்லுவது போல் முயற்சிக்கலாம் இன்ஷா அல்லாஹ்.

எப்போதும் உங்கள் ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் எம்மை வழுப்படுத்தும்.