தேசிய ஷூறா சபை என்பது ஒரு பக்கச்சார்பு தலைமைத்துவ ஆசையின் வெளிப்பாடு மாத்திரமே!
Father: K M Issadeen.
Born in Vanni District, Srilanka.
College: University of Wolverhampton, Uk
Traveled countries: Qatar, UAE, Saudi Arabia, kish Island, Thailand, and Georgia
Speaking languages: English, Arabic, Sinhalese, Hindi, Malayalam, and Tamil.
Author for
1. ‘Tri villages of Musali Division’
2.என் மகன் ஒரு லீடர் (My son is a leader)
Upcoming - அதிர்ஷ்டசாலிகள் யார் ? (Who is lucky?)
இலட்சிய கதாநாயகர்களை உருவாக்குவோம் (Make our children winners)
Won first prize in all island Essay competition conducted by Srilanka - Thailand Society.
Others: conduct open discussion under topic of ‘changes – it’s possible
Researching, speaking, and writing about society’s new challenges.
Issadeen Rilwan
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உத்தேச தேசிய ஷூரா சபை குறித்து :
சுருக்கமாக கூறின் இது ஒரு 1001 ஆவது அமைப்பு அல்ல, தற்போது இருக்கின்ற அமைப்புக்களை முஸ்லிம் தேசிய விவகாரங்களை கையாள்வதற்காக உயர் மட்டம் முதல் அடிமட்டம் வரை ஒருங்கிணைக்கின்ற ஒரு பொறிமுறையாகும்.
தேசிய அளவில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சன்மார்க்க வழி காட்டலுடனும் ஒத்துழைப்புடனுமேயே உத்தேச தேசிய ஷூரா அமையும். அதேபோன்று முஸ்லிம் கவுன்ஸில் உற்பட தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள சகல் அமைப்புக்களையும் தேசிய ஷூரா ஒருங்கிணைக்கும்.
சமூகத்தில் பல்வேறு துறைகளையும் சார்ந்தவர்களையும் தேசிய ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் உள்வாங்குகின்ற ஒரு பொறிமுறையுமாகும்.
உத்தேச தேசிய தற்பொழுது சமூகத்தில் இருக்கும் எந்தவொரு சன்மார்க்க,சிவில் அரசியல் தலைமைகளையோ ,இஸ்லாமிய தாவா அமைப்புக்களையோ தொண்டர் நிறுவனங்களையோ பிரதியீடு செய்யும் புதியதொரு அமைப்புமல்ல.
எந்தவொரு உள்நாட்டு வெளிநாட்டு அமைப்பின் கட்டுப்பாட்டிற்கு கீழோ அல்லது மேலோ அல்லது அரசியல், இயக்க நிகழ்ச்சி நிரல்களின் ஆதிக்கத்தின் கீழோ தேசிய ஷூரா அமைய மாட்டாது.
நேரடியாக அரசியலில் ஈடுபாடு கொண்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் இதில் இடம் பெற மாட்டார்கள், ஆனால் குழுநிலை பிரதிநிதித் துவத்தை அவர்கள் பெறுவதற்கான ஏற்பாடுகள் ஆராயப் பட்டு வருகின்றன.
பொதுவாக தற்பொழுது சமூகத்தில் இருக்கும் அமைப்புக்களினால் தனித்து முகம் கொடுக்க முடியாத அல்லது சுமக்க முடியாத விவகாரங்களை சகல தரப்புக்களும் இணைந்து பொறுப்பேற்கின்ற ஒருங்கிணைப்புப் பொறிமுறையாகும்.
தேசிய ஷூரா மஹல்லா மட்டத்திலிருந்து ஆரம்பித்து , சனத்தொஅகி செரிவிற்கேற்ப பிரதேச செயலாளர் பிரிவு அல்லது மாவட்ட மட்டம் முதல் தேசிய மட்டம் வரை ஒருங்கிணைப்புப் பொறிமுறையினை கொண்டிருக்கும்.
இந்த இடைக்கால ஏற்பாட்டுக் குழுவினர் உத்தேச தேசிய ஷூரா சபை அமையப் பெறின் தமது பணியை நிறைவு செய்துகொள்வர், பணியின் தூய்மை கருதி தேசிய ஷூராவில் இடம் பெறுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஷூராவின் கட்டமைப்பு, யாப்பு, நிர்வாகம், செயலகம், நிதிநிர்வாகம், உறுப்பினர் தகைமைகள் போன்ற இன்னோரன்ன விவகாரங்கள் தற்பொழுது நிபுனர்த்துவ ஆலோசனைகளுக்கு உற்படுத்தப் பட்டு விரிவாக பல்வேறு தரப்புக்களுடனும் ஆராயப்படுகின்றன. இறுதி வரைவு விரைவில் அமைய விருக்கும் இடைக்கால தேசிய ஷூரா சபையிடம் கையளிக்கப் படும். இன்ஷா அல்லாஹ்.
இறுதியாக தனிப்பட்ட முறையில் இடைக்கால ஏற்பாட்டுக் குழுவில் உள்ள ஒருசிலரை அல்லது இதற்கு ஆதரவு வழங்கும் பிரபலங்களை அல்லது தரப்புக்களை காரணமாக வைத்து உத்தேச தேசிய ஷூரா எனும் மகோன்னதமான வரலாற்றுப் பணியை விமர்சிக்க வேண்டாம் என சிலரையும் வேண்டிக் கொள்கின்றேன்.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் நல்ல உயரிய பணிகளுக்கு முட்டுக் கட்டைகளாக விழுந்து விடக் கூடாது . ஸூரத் ஹூத் 88, 89 ஆவாது வசனங்கள் நினைவுக்கு வருகின்றன.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, தப்லீக் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி, தரீகாக்கள் எனப் பல்வேறு அமைப்புக்களோடு, துறைசார் வல்லுனர்கள், புத்தி ஜீவிகள், வியாபாரிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர், ஆலோசனை செய்வதற்கு இஸ்லாம் வழங்குகின்ற முக்கியத்துவத்தை தனது ஆரம்ப உரையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவைச் சேர்ந்த அஷ்ஷெய்க் யூசுப் முப்தி விளக்கினார். ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம். முபாரக், ஷரீஆ கவுன்ஸில் தலைவர் மௌலவி ஹஸ்புல்லாஹ், ஷெய்க் முப்தி யூஸுப் ஹனீபா, பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் எம். சித்தீக், இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் அமீர் ஏ.எல்.எம். இப்றாஹீம், உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர், ஈரானுக்கான முன்னாள் தூதுவர் எம்.எம். ஸுஹைர், சவூதி அரேபியாவிற்கான முன்னாள் தூதுவர் ஜாவித் யூசுப், ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம், ஷெய்க் இஸ்மாஈல் (ஸலபி), மௌலவி ஏ.எல்.எம். ஹாஷிம், மற்றும் மன்ஸூர் தஹ்லான் எனப் பலரும் இதன் போது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் சில தகவல்களுக்கு:http://www.latheeffarook.com/index.php/my-articles/other-countries-articles/604-national-shoora-council
Post a Comment