மேற்குலகை சிந்திக்க தூண்டிய ஒரு மனிதர்..04

  Part - 04
 சந்தித்த விவாத மேடைகள்



அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் பல விவாத களங்களை சந்தித்து சந்துபொந்துகள் முழுதும் சத்திய முலக்கமிடச் செய்தவர்

அவைகள் அனைத்தும் வரலாற்றில் மைற்கற்கல்  (Mile stones) எனலாம், அவைகள் உலக மக்களுக்கு பாரிய பிரயோசனங்களை வகுத்துக் கொடுக்கக் கூடியவைகளாக இருந்து வருகின்றன.

அந்த விவாதங்களில் ஒரு சில இங்கு குறிப்பிடத்தக்கவை:

1. ஏ. டபுல்யு. ஹாமில்டன் (A.W. Hamilton of Kimberle) என்பவருடன் 1961ம் ஆண்டு செய்த விவாதம்.

2. பேராசிரியர் சிரில் சிம்கின்ஸ் (Cyril Simkins - Professor of New Testament Exegesis from Tennessee) என்பவருடன் ஒரு விவாதம் 1963ம் ஆண்டு நடந்தேரியது.

3. 1966ம் ஆண்டு பிரபல பைபிள் அறிஞர் டேவிட் லூகெல் (David -  prominent Seventh Day Adventist)  என்பவருடன் ஒரு விவாத மேடையில் சந்தித்தார்.
 
4. பாலஸ்தீன அமெரிக்க அறிஞர்களில் ஒருவரான  கலாநிதி.  அனிஸ் சரோஸ் (Dr. Anis Sarrosh) என்பவருடன் இரு தடவைகள் விவாதம் செய்யப்பட்டன.
 
1985ம் ஆண்டு  டிசம்பர் மாதம்இயேசு கடவுளா?” (is Jesus God?) என்ற தலைப்பிலான விவாதம் Royal Albert hall – UK” ரோயல்  ஆல்பர்ட் ஹாலில்  நடந்தேறியது,  
 
# 1988ம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம்  7ம் தேதி இங்கிலாந்திலுள்ள பிர்மிங்கம் (Birmingham- United statues)ல்  "இறை வேதம் அல் குர்ஆனா அல்லது புனித பைபிளா?" என்ற  (the Quran or Bible, which is God’s word?)" தலைப்பில்  ஒரு விவாதமும் அரங்கேற்றப்பட்டன.
 
# இவர்களால் நடத்தப்பட்ட விவாதத்தில் தான் முதன் முதலில் கேள்வி பதில் என்ற ஒரு நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டு விவாத மண்டபத்திற்கு சமூகமளிக்கும் பொதுமக்களுக்கு கேள்வி கேட்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
5. “சிலுவை மரணம் நிஜமா அல்லது கற்பனையா? (Crucifixion: Fact or Fiction.) என்ற தலைப்பிலான விவாதம் கலாநிதி இராபர்ட் டக்லஸ் (Dr. Robert Douglas, PhD) அவர்களுடன கான்சாஸ் பல்கலைக்கலகத்தில் (Zwimmer Institute) at the University of Kansas நவம்பர் 1986ம் ஆண்டு நடந்தேறியது.

§   
  இந்த விவாதத்தின் போது அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் சிலுவை மரணம் கற்பனை என்பதை தோலுரித்துக் காட்டியதுடன் இயேசுவின் நிலை என்ன? என்ற கேள்விக்கு விடை சொல்லத் தெரியாது திகைத்து தலைப்பை மாற்றிய கலாநிதி இராபர்ட் டக்லஸ் அவர்களின் காட்சி கவலைக்குரியத்தும் சிந்திக்கத்தக்கதுமாகும்.

·  அதே மேடையில் இயேசு யோனா போன்றுஎன்ற கீழ் வரும் பைபிள் வசனம் கூறும் யோனாவின் அடையாளம் என்பது எப்படியானது (WHAT WAS THE SIGN OF JONAH?) என்ற கேள்விக்கு தலை சிறந்த பல பெரிய பைபிள் அறிஞர்களால் பதிலளிக்க முடியவில்லை என்பதையும் அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் பகிரங்கமாக கூறினார்கள்.

(அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக; இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுக்ஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். (மத்தேயு 12 :39 -40)

  இந்த பைபிள் வசனத்தை விளக்கும் முகமாக யோனா வின் அடையாளம் என்ன? (WHAT WAS THE SIGN OF JONAH?) என்ற தலைப்பில் அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் ஒரு புத்தகமும் வெளியிட்டிருக்கிறார்கள். 

6. 1984ம் ஆண்டு வத்திகான் மாநகரில் பகிரங்கமான விவாதமொன்றுக்கு அறிஞர் தீதாத் அவர்கள் இரண்டாம் ஜான் பவுல் அவர்களுக்கு சவால் விட்டிருந்தார். அதற்கு அவர், விவாதம் நடப்பதாக இருந்தால் மூடப்பட்ட அரையில் தான் நடக்க வேண்டுமென்று மறுத்துவிட்டார். இவர் பின்வாங்கியதனால் 1985ம் ஆண்டு அது தொடர்பான துண்டுப்பிரசுரம் ஒன்றையும் அஹ்மத் தீதாத் அவர்கள் வெளியிட்டிருந்தார்.

7. 1991ம் ஆண்டு இரண்டு முக்கிய விவாதங்கள் இடம்பெற்றன,

§ கிறிஸ்துவ அறிஞர் பாஸ்டர் ஸ்டான்லிவ் ஸ்ஜோபர்க் (Pastor Stanley Sjöberg) என்பவருடன் சுவிடனில் ஸ்டொக்லம் (Stockholm) நகரில் புனித பைபிள் உண்மையான கடவுள வார்த்தைகளா?என்ற தலைப்பில் ஒன்றும்
 
அதே ஆண்டு டென்மார்க்கில் (Copenhagen - Denmark) பாஸ்டர் எரிக் பொக்  (Pastor Eric Bock) என்கின்ற அறிஞருடன் இயேசு கிறிஸ்து கடவுளா? (Is Jesus God?) என்ற மகுடத்தில் இரண்டாவது ஒரு விவாதமும் இடம்பெற்றது.

8. மேற்கத்திய தொலைக்காட்சி திரைகளில் அதிகம் பேசப்பட்ட,  கிறிஸ்து உலகம் நம்பிய பைபிள் பேரஞர்களில் ஒருவரான ஜிம்மி சுவேகாத் (Jimmy Swaggart) என்ற அமெரிக்கருடனான விவாதம், அறிஞர் அஹ்மத் தீதாதின் அறிவையும் அந்தஸ்தையும் உலக மக்களிடத்தில் மிக ஆழமாக படம்பிடித்து காட்டியது என்றால் மிகையாகாது. இந்த விவாதம் 1986ம் ஆண்டு பைபிள் அறிஞர் ஜிம்மி சுவேகாத் அவர்களின் சொந்த நகரில் லூசியான பல்கலைக்கழக மண்டபத்தில் (University of Louisiana) எட்டாயிரத்திற்கும் மேலான மக்கள் கலந்துகொள்ளும் விதத்தில் அறங்கேறின. இந்த விவாதத்தில் பைபிள் கடவுள் வார்த்தைகளா?  (is Bible Gods word?) என்ற தலைப்பில் இது அமைந்திருந்தது.

§  அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் இந்த விவாத்ததின் போது அறிஞர் ஜிம்மி சுவேகாத் அவர்கள் எழுதிய பல புத்தகங்கள் பற்றியும் மேற்கத்திய நாடுகள் சரியான வழிகாட்டல்கள் இல்லாமல் ஒழுக்க சீரழிவுக்குள்ளாகி இருப்பது பற்றியும் மக்களுக்கு மிகச் சுருக்கமாக விளக்கினார்.

§  இந்த விவாத்ததின் போது மேற்கத்திய கிறிஸ்தவ உலகம் (western Christian society) நம்பிய ஜிம்மி சுவேகாத் அவர்களால் பைபிள் கடவுள் வார்த்தைகள் என்பதை சரியான ஆதாரங்கள் என்பதை ஏற்றுக்கொள்ளத்தக்க, அறிவுப்பூர்வமாக விளக்கமுடியாமல் திகைத்த்துடன் இது கடவுள் வார்த்தைகள் தான் என்பதற்கு இந்த பைபிளை படிப்பதால் பின்பற்றுவதால் தான் நேர்மையான நல்ல மனிதனாக இருக்கிறேன் என்று சாதாரணமாக கூறி பார்வையாளர்களின் இழிபார்வைக்குள்ளானார். இவ்வாறு பகிரங்கமாக சொல்லி ஒரு சில மாதங்களில் இரு தடவை பாலியல் குற்றச்சாட்டில் மாட்டிக்கொண்டு சந்தி சிரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

§  இஸ்லாம் 4 திருமணத்தை அங்கீகரிப்பதாகவும் கிறிஸ்தவம் ஒரு திருமண முறையை அனுமதிப்பதாகவும் கூறிய அவர் தான் எனக்கு பிடித்த ஒரே ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்திருப்பதாகவும் கூறினார். கூறி சில மாதங்களில் பாலியல் குற்றவாளியாக மாட்டி உலகம் சிரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது இங்கு மறக்காமல் சொல்ல வேண்டிய அம்சமாகும்.

§  விவாதம் நடந்தேறிய திகதியிலிருந்து தொடர்ந்து வந்த ஜந்து வருட காலப் பகுதிகளில் 2 பெரிய பாலியல் சம்பவங்களில் சிக்கி சந்தி சிரித்தது உலகமறிந்த உண்மையே.

§ அல்ஹம்துலில்லாஹ், எல்லாப் புகழும் அல்லாஹூக்கே, இந்த விவாத்திற்கு பின் மேற்க்குலகில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு பாரிய மதிப்பும், கெளரமும் கிடைத்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

9.  A televised debate - channel SABC, Islam and Christianity - Cape Town - South Africa - 1984 

இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவம்என்ற தலைப்பில் ஒரு விவாதம் 1984ம் ஆண்டு தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் (Cape Town - South Africa) இயங்கிவரும் SABC என்ற தொலைக்காட்சி அலைவரிசையினால் ஏற்பாடு செய்யப்பட்டது, அதில் முஸ்லிம்கள் சார்பாக அஹ்மத் தீதாத் மற்றும் மெளானா ஏ. ஆர்.  சூபி அவர்களும் கிறிஸ்துவர்கள் சார்பாக  பாதர் பொனாவெந்தர் ஹின்வுட் (father Bonaventure Hinwood)  மற்றும் ஜான் கில்கிரிஸ்ட் ( John Gilchrist) ஆகியோரும் பங்கேற்றனர்.

10. 1985ம் ஆண்டு July 7அமெரிக்க கிறிஸ்தவ போதகர் Professor Floyd Clark ஒரு விவாதம் பிரித்தானிய ரோயல் ஆல்பர்ட் மண்டபத்தில் Royal Albert Hall - LONDON – Britain ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வழமை போல் இந்த விவாதத்திலும் கிறிஸ்தவ சகோதர்கள் கைசேதத்துடன் வீடு திரும்பினர்.

சிலுவை என்பது உண்மையா? (Is the crucifixion of Christ, right?) என்ற தலைப்பில் கனடாவில் (Maple Leaf Gardens - Canada.) கிறிஸ்தவ அறிஞர், போதகர் வெஸ்லி ஜெனரல் (ًwesley H. Wakefield General) அவர்களுடன் ஒரு விவாத்த்தில் அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் மேடையேறினார்கள்.

அறிஞர் அஹ்மத் தீதாத்  அவர்கள் கலந்துகொண்ட  விவாதங்களை மிக அமைதியா செவியுறுகின்ற போது புதுமையாக  அறிவுபூர்வமான பல தந்திரங்களும், வழிகாட்டல்களும், தேவையான வழிகாட்டல்களும் எமக்கு கிடைக்கும்.
 
பைபிளை கடவுள் வார்த்தைகள் அல்லது இயேசு கடவுள் அல்லது இயே கடவுள் மகன் என்று  நிரூபிக்க  வரும் எந்த கிறிஸ்துவ  சமூக பிரதிநிதிகளும்,  அல்லது கிறிஸ்துவ  உலகில்  பிரபல்யம்  பெற்றுள்ள எந்த  பைபிள்  அறிஞர்களும் விவாதத்தின் போது போதுமான அல்லது தேவையான இடங்களில் பைபிள் வசங்களையோ அல்லது அதற்கு எதிர்தரப்பில் இருக்கும், புனித இஸ்லாம் மார்க்கம் சார்பாக  பேச வந்த அஹ்மத் தீதாத் அவர்களால் வேத நூலாக  கொண்டுள்ள அல்குர் ஆனிலிருந்தோ எந்த வசனக்களையும் சரியான மக்கள் நம்புகின்ற அளவுக்கு வசன வாக்கிய எண்களுடன் கேடிட்டுக்காட்டியதாக அல்லது எதிர்தரப்பில் இருக்கும் இஸ்லாமிய அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் ஆதாரங்களாக காட்டும் எந்த பைபிள் வசங்கலையும் அல்லது அல்குர் ஆன் வசங்களையும் அல்லது ஏனைய வரலாற்று ஆதாரங்களை நியாயமாக மறுத்து பேச முடியாத சாதாரண பாமர மக்களை போன்று கலந்துகொண்டதை இன்று வரை அந்த காட்சி வீடியோக்கள் எமக்கு சான்றுபகர்வனவாக இருக்கின்றன.

எந்த விவாதங்களையும் கருத்தூந்திப்பார்க்கும் போது, ஒரு ஆச்சரியமான செய்தி புலப்படும். அதாவது, அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்களுக்கு எதிரணியில் விவாதிக்க வரும் எவரும் சுதந்திரமாக, ஆழமாக திடகாத்திரமாக தங்களது கருத்துக்களை, விவாத தகவல்களை அல்லது கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடையை வழங்கியதாக சரித்திரம் இல்லை.


இதிலிருந்து ஒரே ஒரு உண்மை மட்டும் தெரிகின்றது,  அதாவது சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது, அசத்தியம் எப்போதும் அழிந்துகொண்டே இருக்கும் என்ற அல்லாஹ்வின் புனித வாக்கியம் மட்டும் உலகில் உண்மைப்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே அதுவாகும்.

தொடரும்.......

 எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: