இலங்கை தேசத்தால் முடியும், ஆனால்……..


(Sri Lanka, a leading nation, but........)

இலங்கை தேசத்தால் முடியும், ஆனால்……..

ளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இலங்கையும் ஒன்று, வளர்ந்த வல்லரசுகளில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும் அது.

கடந்த, நீண்ட யுத்தப் பிடியில் மூன்று தசாப்தங்கள் சிக்கி வெளிவரமுடியாமல் திகைத்து நின்றது, யுத்தம், பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டின் அதிக பொருளாதாரம் செலவிடப்பட்டது. யுத்தத்தின் போது பாரிய சொத்துக்கள் நக்ஷ்டமாகிப் போகின.

இப்போது நம் நாடு முழுப்பாதுகாப்புடனும் மக்கள் முழு சுதந்திரத்துடனும் வாழுவதாக பேசப்படுகிறது, ஆனால் இது எவ்வளவு தூரம் உண்மை என்பதை அன்றாடம் வெளியாகும் செய்திகள் சொல்லிக்கொண்டிருக்கின்ற.
தினசரி பத்திரிகைச் செய்திகளை வாசிக்கும் போது சில செய்திகள் உண்மைதானா என்று என்னையே சந்தேகிக்கச் செய்தாலும் தேசிய, சர்வதேச மட்டத்தில் வெளியிடப்படும் செய்திகள் உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்றும் நம்பச் செய்கிறது.

ஒரு இனம் இன்னொரு இனத்தால் நசுக்கப்படல், ஊழல், மோசடி, கொலை, கொள்ளை என்று அதன் பட்டியல் தொடர்கின்றது.

இன்னொரு பக்கம், ஏற்பட்டிருக்கும் விலையேற்றம், விலைவாசியின் வீக்கம் இனி இங்கு வாழ முடியாதா என்று அங்கலாய்க்கச் செய்து வருகின்றது.

சர்வதேச மட்டத்தில் இலங்கை நாணயத்திற்கு ஏற்பட்டிருக்கும் பண வீக்கம், மக்களின் மனங்களில் சந்தேக உணர்வையும் சந்தோசமின்மையையும் தோற்றுவித்து வருகின்றது.

யுத்தம் நாட்டை பீடித்த போது வருடாந்த வருமானத்தின் பாரிய தொகையை பாதுகாப்பிற்காக வேண்டி செலவிட்டது நியாயம், ஒரு இனம் இன்னொறு இனத்தால் பாதிக்கப்பட்டது நியாயமாக பார்க்கப்பட்டிருக்கலாம், அன்றாட பாவணைப் பொருட்கள் மீது விலையேற்றம் நியாயமானதாக இருந்திருக்கும்.
ஆனால் யுத்தத்தின் பின் நாடு சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கின்றது, அந்நிய நாட்டு செலாவணி அதிகரித்து வருகின்றது, சுற்றுலாத்துறையின் வருமானம் பாராட்டத்தக்கதாக மாறியிருக்கின்றது என்று சர்வதேச மேடைகளில் வாய் திறந்து பேசுகின்றது நமது அரசியல் வட்டாரங்கள்.

யுத்தத்தின் பின் பாதைகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுவருகின்றன, பாராட்டத்தக்க செய்திதான்.

ஏன் விலைவாசி தலைக்கு மேல் குமுறுகின்றது? பெற்றோல், டீசல், கோதுமையின் விலை உயர்த்தப்படுகின்றது என்று பத்திரிகையில் செய்தி பிரசுரமாகிறது, ஆனால் இந்த குறித்த பொருட்களில் சிறிய அளவிலான விலையேற்றம் வாழ்க்கைக்குத்தேவையான அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் பாரியளவில் தாக்கம்செய்து வருகின்றது.

பஸ் கட்டணங்கள் மீது எல்லையற்ற விலையேற்றம், அதை சாட்டாக வைத்து மீதிக் காசுகளைக் கூட சரியாக பெற முடியாத பஸ் பணியாளர்களின் செயல்,
கடைகளில் விற்கப்படுகின்ற ஒவ்வொரு பொருட்கள் மீதும் விலையுயர்த்தப்பட்டிருக்கின்றது,
அரச, அரச சார அலுவலகங்களில் செய்யப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரித்திருக்கின்ற.

எது உத்தியோகபூர்வமான விலையேற்றம்?
அங்கீகரிக்கப்பட்ட விலையுயர்வு எவ்வளவு?
தேவையற்ற, முறையற்ற விலையுயர்வு குறித்து எங்கு முறையிடுவது?
இது குறித்து பொது மக்கள் அறிந்துவைத்திருக்கின்றார்களா?
இது குறித்து யார் கவனம் செலுத்த வேண்டும்?

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தங்களுக்கு தனித் தாயகம் வேண்டும் என்று போராட்டத்தில் குதித்தார்கள், அது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது,
இப்போது அவர்கள் வாழும் பிரதேசத்தில் கோவில்களுக்கு பதிலாக பெளத்த தூபிகள் கட்டப்படுவதாக அன்றாட பத்திரிகை மற்றும் இணையத்தளச் செய்திகள் வெளிவந்தமுள்ளன,

அவர்கள் வாழும் கிராமங்களில் பாலியல் வல்லுரவுகள் அதிகரித்துவருவதாக சொல்லப்படுகின்றன, இது குறித்து யார் பதில் சொல்லுவது?

அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்பு நிலையங்கள் இயங்குவதாக அங்குள்ள வட்டாரங்கள் கவலைதெரிவிக்கின்றன.
அப்படியென்றால் நம் நாடு எப்படி சுதந்திர, பாதுகாப்புள்ள நாடாக இருக்க முடியும்?

யுத்தத்தின் பின் அனைத்தின மக்களும் சுதந்திரமாக, ஒற்றுமையாக வாழுவதாக வெளியுலகிற்கு பாடம்புகட்டும் நம் அரசியல் வாதிகள் இங்கு பள்ளிகள், மத்ரஸாக்கள் குறிவைக்கப்படுவது குறித்து என்ன பதில் சொல்லுகிறார்கள்?

இப்படியான பிரச்சினைகளுக்கு மத்தியில் இலங்கை தேசத்தில் மிகத்துரிதமான வளர்சியை எப்படி எதிர்பார்க்கமுடியும்?
மக்கள் சந்தோசமாக வாழ்கின்றார்கள் என்று எப்படி உறுதியாகச் சொல்லமுடியும்?
ஆனால் இலங்கைத் தேசம் பல உலக நாடுகளை மிகைத்துக்கொண்டு முன்னேறிச்செல்ல வேண்டிய நாடாகும்.

யுத்த காலத்தில் பாதுகாப்புக்காக வேண்டி ஒதுக்கிய பணம் இப்போது அதே நோக்கத்திற்காக ஒதுக்க தேவை இல்லை என்றால் அந்த பணம் எதற்காக செலவிடப்படுகின்றது?

ஏன் எல்லையற்ற விலையேற்றம் குறித்து உரியவர்கள் கவனம் செலுத்தாமல் இருக்கும் சூழல் இன்றுவரை நிலவுகின்றது?
ஏன் இனப்பிரச்சினைக்கான யுத்தம் முடிந்த பின்பும் இனப்பிரச்சினை முடியாமல் இருக்கின்றது?
ஏன் இப்போதும் இனப்பழிவாங்களுக்கான புகைமூட்டம் இன்னும் வெளிவந்தமுள்ளன?
பாதைகள் விஸ்தரிப்பு, பாடசாலைகள் தரமுயர்த்தல்கள் மற்றும் சில வேளைத்திட்டங்கள் இந்த அரசால் முன்னெடுத்துச்செல்லப்படுவது குறித்து சந்தோசப்படும் நாம் அதே அரசிடமிருந்து இன்னும் பல சமூகநலத்திட்டங்களை எதிர்பார்த்தவண்ணம் காத்திருக்கின்றோம்.

இலங்கை தேசம் அதிரடி மாற்றங்களையும் புரட்சிகர முன்னேற்றங்களையும்  காண வேண்டுமானால்?
1.   விலையேற்றம் இல்லாதொழிக்கப்படல் வேண்டும்

2.   இனவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

3.   ஒவ்வொரு இனமும் தங்களது கலாச்சாரத்தை பின்பற்ற தேவையான சுதந்திரத்தை முழுமையாக வழங்க வேண்டும்.

4.   பாகுபாடின்றி எல்லாக் கிராமங்கள், நகரங்களும் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும்.

5.   சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பாகுபாடு காட்டப்பட கூடாது.

6.   பதவிகள், சலுகைகள் வழங்கப்படும் போது விகிதாசார முறைமை பேணப்பட வேண்டும்.

7.   அரசியல் இலாபங்கள், காய்நகர்த்தல்கள் என்பதைவிட சமூக நோக்கு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

8.   வேலைவாய்ப்புக்களை அதிகப்படுத்துவதற்கு தேவையான தொழிவாய்ப்புக்களுக்கு அடித்தளமிட வேண்டும்.

9.   ஊழலில் ஈடுபடுகின்றவர்களுக்கு சரியானமுறையில் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

10. நீதிமன்றன்களில் வருடக்கணக்கில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளுக்கு நீதமான தீர்ப்பு வழங்குவதுடன் வழக்குகளை தாமதப்படுத்தாமல் இருக்கத்தேவையான ஏற்பாடுகளைச் செய்தல்.

11. தடுக்கப்பட்ட பொருட்களை, சேவைகளை விற்பனை செய்யும், சந்தைப்படுத்தும் நிலையங்களை தடைசெய்தல் வேண்டும்.

12. பெண்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு நிமிர்த்தம் அனுப்புவதை முழுமையாக தடுத்தல்.

13. ஏழைக் குடும்பங்களுக்கு அன்றாட வருமானம் ஈட்டித்தரும் தொழிமுயற்சிகளை செய்துகொடுத்தல்.

14. கிராமிய பாடசாலைகளை தரமுயர்த்தல்.

15. செல்வந்தர்கள், பணக்கார நிருவனங்கள் ஏழைமாணவர்களுக்குத் தேவையான புலமைபரிசில்களை வழங்குவதற்குரிய சட்டங்களை வகுக்கவேண்டும், அதற்குரிய ஊக்குவிப்பு நடவடிக்களைகளை மேற்கொள்ள வேண்டும்.

16. பல்கலைக்கழக கற்பித்தல்முறைமையை மாற்றுவதுடன் பல்கலைக்கழகங்களின் எண்ணிகையையும் அதிகரிக்க வேண்டும்.

17. அந்நிய செலாவணியை அதிகரிக்கத்தேவையான திட்டங்களை துரிதப்படுத்த் வேண்டும்.

இங்கு பட்டியலிடப்பட்டவைகள் முழுமையாக நம் தேசத்தில் இப்போது நடைமுறையில் இல்லை என்பதல்ல பொருள், நடைமுறையில் இருக்கின்ற செயற்திட்டங்கள் பல இன்னும் பாரிய துரிதகதியை அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கம் மாத்திரம் தான் இந்த பதிப்பின் முழுநோக்கம்.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

Anonymous said...

யுத்த காலத்தில் பாதுகாப்புக்காக வேண்டி ஒதுக்கிய பணம் இப்போது அதே நோக்கத்திற்காக ஒதுக்க தேவை இல்லை என்றால் அந்த பணம் எதற்காக செலவிடப்படுகின்றது?