ஜனாதிபதியை புதிய பள்ளிக்கு அழைத்தவர்கள் ஏன் பழைய பள்ளிகளை பாதுகாக்க அழைக்கவில்லை.

இன்று (05/07/2013) வெள்ளிக்கிழமை புனரமைக்கப்பட்டு புதிதாக திறக்கப்பட்ட தர்கா நகர் சீன துறை பள்ளிவாயல் திறப்புவிழாவுக்கு நாட்டின் கெளரவ ஜனாதிபதி அவர்களை இந்த பிரதேச மக்களால் அழைக்கப்பட்டிருந்தது நாம் அனைவரும் அறிந்த, நடந்து முடிந்த நிகழ்வுதான்.

ஏனைய மத வழிபாடுகள் போன்று இந்த பள்ளிவாயலும் கோளா கலமாக, வெளிச்ச அலங்காரங்களுக்கு மத்தியில் பாரிய ஏற்பாட்டில் இந்த பள்ளிவாயல் திறக்கப்பட்டிருக்கிறது.

இந்த பள்ளியின் திறப்பு விழாவுக்கு அழைத்த ஜனாதிபதியை ஏன் ஆங்காங்கே உடைக்கப்பட்ட, எதிர்ப்புக்குள்ளான பள்ளிகளை பாதுகாக்க இதே ஜனாதிபதியை அழைக்க முடியவில்லை.

இந்த கேள்வியை இந்நிகழ்வை ஏற்பாடு செய்த, பங்கேற்ற அரசியல் மற்று மார்க்க அறிஞர்களிடத்தில் தொடுக்க ஆசைப்படுகிறேன்.

மற்றும்….
இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி “ஒரு இனத்துக்காக நாட்டை பிரிக்க முடியாது” என்று கூறினார்.

இதே ஜனாதிபதியிடத்தில் நமது மாற்றங்கள் தேவை சார்பாக “அப்படியென்றால் பெளத்த மதத்தை பாதுகாக்க ஏன் முஸ்லிம், கிறிஸ்துவ மற்றும் இந்து மக்களை பொதுபல சேனா போன்ற இனவாத அமைப்புக்கள் எதிர்க்க வேண்டும்?

ஏன் பொதுபல சேனா என்ற அமைப்பை வழக்கின்றீர்கள்?
அவர்களை உங்களால் கைதுசெய்ய முடியுமா?

பேச்சுக்கள் வேறு நடத்தைகள் வேறு என்பது நாட்டின் ஜனநாயம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வருவதை நாம் அனைவரும் அறிவோம்.

நேர்மையான ஆட்சியாளர்களை மட்டுமே மக்கள் அனுமதிப்பார்கள்,
எதிர்வரும் தேர்தல் இதற்கு பதில் சொல்லும் இன்க்ஷா அல்லாஹ்.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: