தொட்டால் சினிங்கிக்கும் அரபு அரசுகளுக்கும் உள்ள சம்பந்தம் என்ன?


தூனிசியா தொடக்கி வைத்த போராட்ட தினம் தொட்டு முயற்சித்ததை சாதித்துவிட்டோம் என்று ஒரு கூட்டம் கைதட்டி சந்தோக்ஷப்படலாம்,
ஆனால் அதை தொடர்ந்து பல தேசங்கள் பத்தி எரிய ஆரம்பித்துள்ளன.

தூனிசியாவில் சர்வதிகார ஆட்சி தலைதூக்கியுள்ளது, அதை மக்கள் புரட்சி மூலம் தான் மாற்றலாம், இந்த புரட்சி மக்களுக்குத் தேவையான அரசாங்கத்தை உறுவாக்க உதவும் என்கின்ற மனோநிலை ஒரு சிலரால் நவீன தொடர்பு சாதனங்கள் மூலம் தூனுசிய இளைஞர் சிந்தனைகளை தூண்டிவிட்டு அந்த நாடு பல தினங்கள் எரிந்து அரசரே ஓடி ஒலிந்துவிட்ட நிலையில்.

இது சரியான முடிவாக இருக்குமோ என்று எகிப்து மக்கள் கூட்டம் ஒன்று திரண்டு பல நாட்களாக வீட்டு குமரிகளெல்லாம் பாதைக்கு வந்து மானம் மரியாதையை காற்றில் பரக்க விட்டு விட்டு போரட்டமாம் ……..?1

தொடர்ந்து ஏன்? எதற்கு? என்று தெரியாமலே சில குழுக்களால் இந்த போராட்டம் பஹ்ரைன், எமன், லிபியா, ஈரான் என்று பட்டியல் நீண்டு செல்கின்றது.

பக்கத்து நாட்டைப் பார்த்து, எழுச்சியுற்று பாதைக்கு வந்து பல காயங்கள், பல சாவுகள் என்று ஆர்பாட்டங்கள் இந்த நாடுகளில் இன்று வரை வீரியமாகி நிற்கின்றன.

இந்த மக்கள் எழுச்சி உண்மையில் அரசுகளின் அராஜகங்களையும் அடக்குமுறைகளையும் தட்டிகேற்பதற்கும் மக்கள் உரிமைகளை வெல்வதற்கும் தான் என்றால் இந்த எழுச்சியும் ஆர்பாட்டமும் இன்னும் பல நாடுகளில் 
தொடரலாம். அது அமெரிக்காவையும் விட்டு வைக்காது.

அமெரிக்க பிரஜைகளே அந்த நாட்டின் சர்வதேச கொள்கைகளுக்கும் இராஜதந்திர நடத்தைகளுக்கும் தீர்மானங்களுக்கும் எதிராக போராட நீதி தேடி பாதைக்கு வருவார்கள், இது வெகு தூரத்தில் இல்லை.
இந்த அரபு நாடுகளின் மக்கள் எழுச்சியை மூன்று வேற கோணத்தில் 
நோக்கலாம்.

ஒன்று:

இது அந்த நாட்டு மக்களே அவர்களின் அரசுகள் மீது கொண்டிருக்கும் அதிர்ப்தி.

உதாரணமாக தூனுசியா தொடர்பாக அண்மையில் வெளியான செய்திகளின் படி அரச குடும்பங்களைச் சேர்ந்த 10 சதவீதமானவர்கள் பணக்காரர்களாகவும் ஆடம்பர வாழ்க்கைக்கு சொந்தக்காரர்களாகவும் இருக்கும் அதே வேலை 80 சதவீதமானவர்கள் சாதாரண நிலையில் இருப்பதாகவும் தெரிய வருகிறது.

இந்த நிலை உண்மையில் மிக மோசமானதாகும்.

உலகம் பலவிதமான, பல துறைகளிலும் பாரிய வளர்ச்சியை கண்டிருக்கும் இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு ஆட்சியின் கீழ் மக்கள் அமைதியாக, மெளனமாக இருப்பது என்பது சகிக்க முடியாதது தான்.

ஆனால் உரிமைகளை மீட்டியெடுக்க வேண்டும் என்று முயற்சிக்கும் போது மக்கள் குறிப்பாக முஸ்லிம் நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகளின் பொதுமக்கள் பாதைக்கு வந்து போராட்டங்களை சந்தித்து பல உயிர் சேதங்களை அரங்கேற்றி உரிமையை வெல்ல வேண்டும் என்பது இஸ்லாமிய கோட்பாட்டுக்கு மாற்றமானதாகும்.

சாத்தியமான, சாத்வீகமான முறையில், உரியவர்களை அனுகி சாதிக்கலாம்.

இந்த நடைமுறையை அன்று தூனிசியா செய்திருந்தால் இன்று எகிப்தும் மற்றைய நாடுகளும் அதையே செய்திருக்கும்.

ஆனால் மக்கள் எழுச்சி என்ற போராட்டமானது அது எல்லா நாடுகளையும் கடுமையாக பீடித்து வருகின்றது.

இதனை எல்லா நாடுகளும் எல்லா குடிமக்களும் கவனத்தில் கொண்டு, இதனை படிப்பினையாக எடுத்து சாத்வீக பாணியில் நடைபோட முன்வர வேண்டும்.

இரண்டு:

தூரத்திலிருந்து கொண்டு தூண்டி விடும் சில தீய சக்திகளின் கைகளில் சிக்குண்டு சில அரபு இளைஞர்கள் பாதைக்கு வந்திருக்கலாம்.

சமூக தளங்கள் என்று பேசப்படும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற இந்த இலவச ஊடகங்களை பயன்படுத்தி முஸ்லிம்களை தீயிலிட துடிக்கும் சில தீய சக்திகள் குறித்த நாடுகளில் சில இளைஞர்களை தூண்டிவிடுவதன் மூலம் அரபு தேசங்கள் மக்கள் எழுச்சி என்ற பெயரில் ஆபத்தில் மிதப்பதாகக் கூட நினைக்கலாம்.

உண்மையில் இந்த நிலை ஒரு நாட்டுக்கு வருமாக இருந்தால் அந்த நாட்டை முழுமையாக நக்ஷ்டத்தில் வீழ்த்தி, நாட்டின் மொத்த வளர்ச்சியையும் தடுக்கும் மிகப் பெரிய சக்தியாக அது செயற்படும்.

இதனை குறித்த நாட்டின் அரசுகள் மிக கவனமாக கையாண்டு இதன் ஆணிவேரை துண்டித்து விட முன்வர வேண்டும்.

மூன்று:

அரபு தேசங்கள் தொட்டவுடன் தொட்டால் சினிங்கிகள் போல், மரணித்தது போல் போராட்டங்கள் தொடர்வதற்கும் அதனை ஆரம்பத்திலேயே அடக்கிவிட முடியமைக்கும் என்ன காரணம் என்று சிந்திப்பதில் மூன்றாவது ஒரு காரணமும் இருக்கலாம்.
அது தான்,

அரச, பணக்கார வர்க்கங்களின் ஆனாதிக்கத்திற்கு அல்லாஹ் வழங்கும் தண்டனை.

சில நாடுகள் சர்வதேசமட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்து, உள்ளாச பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்

சர்வதேச மட்டத்தில் தனது நாட்டின் சந்தையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கிலும் எல்லா வகையான அசிகங்களுக்கும் அனுமதி வழங்கி உயிர் ஊட்டக்கூடைய அரசாங்களாக இருந்தால் அந்த அரசாங்கத்தை அல்லது குறித்த குழுவை அல்லது தனிமனிதனை அல்லாஹ் ஏதோ ஒரு வகையில் தண்டிப்பான் என்பதை கடந்த கால வரலாறுகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

பல படிப்பினைகளை அல்லாஹ் தனது கடைசி வேத நூலில் படம்பிடித்துக்காட்டி அதனைக்கொண்டு படிப்பினை பெறும்படி வேண்டி இருக்கின்றான்.

சர்வதேச அல்லது மேற்கத்தைய விருந்தினர்களை கவனத்தில் கொள்ளும் நோக்கில் சிவப்பு வீடுகள், குடிபான பந்தல்கள், பிறந்த உடல் திறந்த நீச்சல் குளங்கள் என்று அசிங்களையும் தடுக்கப்பட்டவைகளையும் அனுமதித்திருக்கும் அரசுகள் அவைகளை முடக்குவதற்கு முன்வர வேண்டும்.

இந்த நோக்கங்களை கொண்டு அரசியல் நடாத்தும் அரசுகள் தங்களை மீள்பரிசீலனை செய்ய முன்வர வேண்டும்.

அந்த மீள்பரிசீலனைகளும் அதனால் ஏற்படும் மாற்றங்களும் தனிமனித, சமூக மாற்றங்களுக்கு துணைபுரியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எந்த நாடும் எந்த மக்களும் அநியாயம் செய்யப்படாமல் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு நாம் அனைவரும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்க வேண்டும்.
  
.எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்

No comments: