லிபிய மக்கள் புரட்சியும் அமெரிக்காவின் ஆயுத நகர்த்தலும்



நேரம் for கருத்துப் பரிமாற்றம், கருத்து - 05


தூனிசியாவில் தொடங்கிவைக்கப்பட்ட மக்கள் புரட்சி பல தலைவர்களை பீதியில் ஆழ்த்தி இருப்பது அனைவரும் அறிந்ததே.

கடந்த 42 வருடங்களாக ஆட்சி செய்து வரும் முஅம்மர் கதாபி பதவி விலக வேண்டும், நாட்டை எங்கள் கையில் தரவேண்டும் என்ற சத்தமாக கோசத்துடன் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருவது தெரிந்த செய்தியே.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை கட்டுப்படுத்தி மீண்டும் அவர்களின் வீடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்காக கதாபி தரப்பால் ஆயுத பிரயோகம் நடாத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் Arab League அமர்வு கூட்டப்பட்டு லிபியா தொடர்பான கலந்துறையாடல் நடாத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கதாபியை கட்டுப்படுத்துவோம், கதாபியின் சர்வதிகார போக்கை முடிவுக்குக்கொண்டு வந்து அங்குள்ள மக்களை காப்பாற்றுவோம் என்ற விளம்பரத்துடன் அமெரிக்கா தனது ஆயுத படையை பிரயோகிக்க துடிப்பதும் அதற்கெதிராக சில நாடுகள் குரல் கொடுப்பதும் இன்றைய செய்தியாக இருந்துகொண்டு இருக்கின்றது.

தலைப்பு:
லிபிய மக்கள் புரட்சியும் அமெரிக்காவின் ஆயுத நகர்த்தலும்

மாற்றங்கள் தேவையின் கருத்துப் பரிமாற்றம் 05

மாற்றங்கள் தேவையின் கருத்துப் பரிமாற்றம் நிகழ்ச்சியினூடாக,
>  கதாபி பதவி துறப்பது தான் லிபியாவுக்கு நல்லதா?
> கதாபியின் பதவி நீடிப்பு நாட்டின் எதிர்காலத்தை குட்டிச் சுவராக மாற்றுமா?
> அமெரிக்க ஆயுத முனைப்பு அடுத்த சதாமின் கதையை தோற்றூவிக்குமா?
> எண்ணை வளம் கொண்ட லிபியா சோமாலியாவாக மாறுமா?
> பல நாடுகளில் மக்கள் புரட்சி வெடுத்திருக்கும் போது ஏன் லிபியாவை மட்டும் உலக நாடுகள் கவனம் செலுத்துகின்றன?
> லிபியாவின் எதிர்காலம்?
உங்கள் கருத்துக்களை எங்களுக்கு எழுதுங்கள்.

   **************
 நேரம் for கருத்துப் பரிமாற்றம்” மாற்றங்கள் 
தேவை யின்புதிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு 
நிகழ்ச்சி நிரலாகும்.

முஸ்லிம் உலகம் சிக்கத்தவிக்கும் நவீன பிரச்சினைகள் 
தொடர்பாக அனைவரதும் கருத்துக்களை சேகரிப்பதற்காகவும் 
அதன் மூலம் மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் 
சாத்தியமான மாற்றங்களையும் உண்டு பண்ணுவதற்கான ஒரு 
விஷேட திட்டமே இது.

இந்த கருத்துப் பரிமாற்ற பகுதியில் வெளியிடப்படும் தலைப்பைக் 
கவனத்தில் கொண்டு, அது தொடர்பான சாதக பாதகங்கள், தவிர்க்க 
வேண்டியவை, பின்பற்ற 
வேண்டியவை குறித்து உங்கள் கருத்துக்களை பின்னூட்டலில் பதியவும்.

கொடுக்கப்பட்ட உங்கள் கருத்தைக் கொண்டு முழுமையான கட்டுரையாக 
வடிவமைக்கப்பட்டு மாத முடிவில் உங்கள் பார்வைக்கு வழங்கப்படும்.

இன்ஷா அல்லாஹ், மாதா மாதம் புதிய புதிய தலைப்புக்களில் கருத்துச் 
சேகரிப்பு நடைபெரும்.

சமூகத்தின் தேவை கருதி உங்கள்  ஆலோசனைகளை இங்கு பதியும் படி
தயவாய் வேண்டிக் கொள்கிறோம்.




எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: