வினவும் விநாடிகள்:


பெண்களின் உரிமைகள் தேடி குரல்கொடுப்பதாக நடிக்கும் பெண் எதிரிகளிடமிருந்து பெண்களை பாதுகாப்பதற்காக எழுதப்பட்ட ஒரு சிறிய ஆக்கமே இது.

இஸ்லாமிய சட்டங்களின் தூரநோக்கு அறியா அறிவிளிகள், ஆய்வு என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் தன் மண்டைக்கு எது சரியென்று படுகிறதோ அதை சொல்லிக்கொண்டிருக்கும் அறிவிளிகளுக்கு சில செய்திகளை, இங்கு குறிப்பிடுவதே இக் கட்டுரையின் நோக்கம்.

அரண்டவன் கண்னுக்கு இருண்டதெல்லாம் பேயாக்தான் தோன்றும் என்பார்கள் (இஸ்லாத்தில் பேய் இல்லை) 

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்பவர்கள் படித்தவர்களில் அதிகம் என்பார்கள்………

அறபு தெரியாத முஸ்லிம் அறிஞர்கள் இஸ்லாமிய சட்டங்களைச் சொல்லி தர்கித்துக்கொண்டு சண்டை பிடிப்பதாக சொல்லிக்கொண்டே அறபு மொழியின் எழுத்துக்கள் என்னவென்றே தெரியாதவர்கலெல்லாம் விமர்சிக்க முன்வந்துவிட்ட சூழலில் தான் நாம் வாழ்ந்து வருகின்றோம்.

உலகம் நவீன பிரச்சினைகளுக்குள் சிக்குண்டிருக்கும் போது இன்னும் என்ன மார்க்ஷிசமும் கமீனிஷமும்? என்று தலையை பிய்த்துக்கொண்டு ஒரு இந்து சகோதரர்…….

சில அரசியல் வாதிகள் அல்லது சில பாமரர்கள் அந்த மார்க்ஷிச அல்லது கமீனிஷ சூழலில் வாழ்ந்து மூளைச்சலவை செய்யப்பட்டதால் ஆங்காங்கே வவ் வவ் என்று குரைக்கின்றார்கள்.

அதைவிட்டா சீரியசா பேசுவதற்கு அவர்களிடத்தில் வேரு ஒன்றும் இல்லை.

காட்டில் சிங்கம் இருப்பதை அறியாத முயல், தான் இந்த முழு காட்டுக்குமே ராஜா என்று பெருமூச்சு விடுவது இயற்கை தானே.
அடிமைச் சமூகத்தை பணக்கார வர்க்கத்திலிருந்து மீட்டி எடுக்க, ஏற்பட்ட மார்க்ஷிசமும் கமீனிஷமும் சமூகத்திலுள்ள ஏனைய ஆண்மீகம், அரசியல், குடும்பவியல், சமூகவியல், தனிமனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு என்ன வழி? என்று தேடும் லெனினிஷ, மார்க்கிஷ தோழர்கள் இன்று ஆங்காங்கே காலான்களாய்…..

ஆண்மீக சாமியார்களிடமிருந்தும், சங்கராச்சாரிகளிடமிருந்தும்  பெண்களை பாதுகாக்க நம் இந்துச் சமூகம் வழி தேடிக் கொண்டிருக்கின்றது.

பாதரியார்களிடமிருந்து சிறுவர்களையும் கன்னியாஸ்திரீகளிமிருந்து சிறுமிகளையும் ஓரிணைச் சேர்க்கை எனும் பாரிய தீமையிலிருந்து பாதுகாக்க கிறிஸ்துவ பெற்றார்கள் வழி தேடுகிறார்கள்.

இந்த நவீன உலக  முன்னேற்றத்திற்கு மத்தியில், நாம் தால்த்தப்பட்ட சமூகமா? என்று கேள்வி கேட்டுக்கொண்டே நமது தால்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள்……..

ஒரு கடவுள் அவதாரமா இந்த உலக மக்களை உயர்வு தாழ்வாய் வாழ வைத்திருக்கின்றது என்று, தான் வணங்கும் தலைசாய்க்கும் அந்த உருவத்தைக் கண்டு முகம் சுலித்துக்கொண்டு சிலர்…….

இதற்கிடையில் தான், உலகின் வேகத்திக்கு ஒத்தால் போல் ஒரு கடவுள் கொள்கையை நோக்கி மக்கள் கூட்டம் சாரை சாரையாக படையெடுக்கின்றார்கள்.

இஸ்லாம் என்ற ஒரு மார்க்கம் தான் அது, மேற்கத்தைய நாடுகளின் அரசாங்கங்கள் முஸ்லிம்கள் வாழும் நாடுகளை இனங்கண்டு குண்டுகளை தூவி அங்குள்ள மக்கள் தொகையை குறைத்து வருவது ஒரு பக்கம் இருக்க, அதே மேற்கத்தைய நாடுகளில் வாழும் மக்கள் நாளுக்கு நாள் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இஸ்லாத்தை நோக்கி படையெடுத்த வண்ணமுள்ளார்கள்.

இந்த செய்தி, ஒரு சமூகத்தின் மீது கொண்ட கால்புணர்வும், இன்னொரு சமூகத்தின் மீதுள்ள அதிக பற்றும் என்ற நோக்கில் அல்ல.

இவைகள் இன்றைய உலக மீடியாக்கள் வெளியிட்டுவரும் செய்திகளின் அடிப்படையில் அமைந்ததாகும்.

அப்படி ஏன் இந்த இஸ்லாம் என்கின்ற மார்க்கத்தை நோக்கி மக்கள் கூட்டம்……….?

உண்மையில் அதன் இரகசியத்தை உற்சென்று பார்க்க வேண்டும்.
பத்து என்ற இலக்கம் சிறிதா பெரிதா? என்று தீர்மானிப்பதற்கு இரண்டு வேறுபட்ட அளவு கோலை பயன்படுத்தலாம்.

அதில் மிக முக்கியமான ஒன்றுதான் பத்துக்கு முன்னுள்ள இலக்கத்தையும் பின்னுள்ள இலக்கத்தையும் ஒப்பிடுவது.

ஒன்பது மற்றும் பதினொன்று ஆகிய இலக்கங்கிளுக்கிடையில் பத்தை மையப்படுத்திப் பார்த்தால் இதன் உண்மைத்தன்மையை புரிந்து கொள்ளலாம். அதனால் தான் சில விடயங்களைச் சொல்லுவதற்கு ஒப்பீட்டாய்வு முறைமையை கைகொள்ள வேண்டி இருக்கின்றது.

இப்போது வாருங்கள் கொஞ்சம் உள்ளே செல்லலாம்……..
பெண்கள் சார்பாக பல தரப்பினராலும் அவர்களின் உரிமைகள் தொடர்பாக குரல் கொடுக்கப்படுகின்றன.

இதில் சில செய்திகளை முன்னைய ‘பார் சிறக்க படித்த பெண்கள் வேண்டும் என்ற கட்டுரையில் கூட சொல்லி இருந்தேன்.

பெண்கள் யார்?
அவர்களுடைய உரிமைகள் என்ன?
சமூகத்தில் அவர்களுக்கு எந்த வகையான உரிமைகளும் அந்தஸ்தும் இருக்கின்றது?
எந்த சமூகத்துப் பெண்கள் பாதுகாக்கப்படுகின்றார்கள்?
நவீன உலக நடப்புக்கு மத்தியில் தோன்றியிருக்கும் நோய்களுக்கும் கெடுபிடிகளுக்குமிடையில் பாதிக்கப்படும் பெண்கள் எந்த இனத்தை மதத்தைச் சார்ந்தவர்கள்? என்ற கேள்விகள் பதில் தேடப்பட வேண்டியவைகளாகும்.

இந்த கேள்விகளை மையமாக வைத்து உலக மதங்களையும் கோட்பாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அறிவுச் சமூகத்தில் சில கேள்விகளை தொடுக்க ஆசைப்படுகின்றேன்.

ஒரு பெண்ணின் கற்பு எந்த வகையில் பாதுகாக்கப்பட வேண்டும்?
பெண்ணின் உரிமை பற்றி எந்த சமூகம் முதலில் பேச ஆரபித்தது?
எந்த சமூகத்தில் பெண்கள் அதிக எய்ட்ஸ் நோயாளிகளாக பட்டியலிடப்பட்டிருக்கின்றார்கள்?

உலகில் ஊசி முதல் விமான விற்பனை வரை விளம்பரப் பொருளாக பெண்கள் பார்க்கப்படுவது இஸ்லாமிய மார்க்கத்தில் அல்லது இஸ்லாத்தை சரியாக பின்பற்றும் சமூகத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றதா? (தூண்டில் மூலம் மீன் பிடிக்கப் பாவிக்கப்படும் துண்டுப் புழுக்களாய் பெண்கள் இல்லையா?)

எண்டடைன்மெண்ட் (Entertainment), பன் (fun) என்று சொல்லிக்கொண்டு சினிமாத்துறை நாசகாரர்களால் பெண்கள் ஆபாசப் பொருளாக, காமப் பண்டமாக பார்க்கப்படுவது எந்த சமூகத்தில்?

ஒரு பெண் தனது கணவனால் துன்புருத்தப்பட்டு அந்த முறைப்பாடு நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டால், கமீனிஷ கொள்கையை கொண்ட நீதிமன்றத்தில் எந்த தீர்ப்பு வழங்கப்படும்? இந்த வழக்கை நீதமாக தீர்ப்பதற்கு இந்த கமீனிஷ கோட்பாட்டில் ஏதாவது சட்டம் ஏற்றப்பட்டு உலக நடைமுறையில் எடுத்துக்காட்டாக இருக்கின்றனவா?

அமெரிக்க ஜரோப்பிய நாடுகளில் கர்ப்பப்பையில் வைத்தே குழந்தையை கொலைசெய்வதும்? பிறந்த குழந்தைக்கு தந்தை யார் என்று தெரியாமல் உலகில் வாழ்வது அதிகமாக எந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள்? எந்த கொளையைப் பின்பற்றுகிறவர்கள்?

திருமணம் செய்து ஒரு சில மாதங்களில் இந்த பெண் ஸ்டவ் வெடித்து மரணிப்பது எந்த சமூகத்தில் உள்ளது?
இந்த கேள்விகளுக்கு விடை தேடிப்பாருங்கள், உண்மை எது என்பதும் உங்களின் தீராத விதண்டா வாதங்களுக்கான பதிலும் கிடைக்கும்.
வரலாறுகள் மூலம் பெண்களின் நிலையை சொல்லுவதற்கு கடந்த வரலாறுகளை சுருக்கமாக தொட்டுக்காட்டுகின்றேன்.

இந்தியா முதல் அமெரிக்கா வரை நேற்று பெண்கள் இவ்வாறுதான் பார்க்க, பாவிக்கப்பட்டிருக்கின்றார்கள், அது இஸ்லாம் அல்லாத பல சமூகத்திலும் பாவிக்கப்பட்டு வருகிறார்கள்.

’In India, subjection was a cardinal principle, day and night must women be held by their protectors in a states of dependence says Manu. The rule of inheritance was agnatic, that is descent traced through males to the exclusion of females’ (The Encyclopedia Britannica, 11th edition. 1911, Volume 28, page 782)

’Athenian woman ware always minors, subject to some male – to their father, to their brother, or to some of their male kin’. (Allen, E.A., History of civilization, Volume 3, page 444)

’A babe, a minor, a ward, a person incapable of doing or acting anything according to her own individual taste, a person continually under the tutelage and guardianship of her husband’. (Allen, E.A., History of civilization, Volume 3, page 443)

’In Roman law a woman was even in a historic times completely dependent. If married she and her property passed into the power of her husband….. The wife was the purchased property of her husband, and like a slave acquired only for his benefit. A woman could not exercise any civil or public office….. Could not be a witness, surety, tutor, or curator; she couldn’t adopt or be adopted, or make will or contract’. (The encyclopedia Britannica, 11th edition, 1911, op.cit., Volume 28 page 782)

Scandinavian races women were:
’Under perpetual tutelage, whether married or unmarried. As late as the code of Christian V. at the end of the 17th century, it was enacted that if a woman married without the consent of her tutor he might have, if he wished, administration and usufruct of her goods during her life. (The encyclopedia Britannica, 11th edition, 1911, op.cit., Volume 28, page 783)

 According to English common law;
………….. all real property which a wife held at the time of a marriage became a possession of her husband. He was entitled to the rent from the land and to any profit which might be made from operating the estate during the joint life of the spouses. As time passed, the English courts devised means to forbid a husband’s transferring real property without the consent of his life, but he still retained the right to manage it and to receive the money which it produced. As to a wife’s personal property, the husband’s power was complete. He had the right to spend it as saw fit. (Encyclopedia Americana International, volume 29, page 108).

John Stuart said ‘We are continually told that civilization and Christianity have restored to the woman her just right. Meanwhile the wife is the actual bondservant of her husband; no less so, as far as the legal obligation goes, then slaves commonly so called’.

‘To betroth a wife to oneself meant simply to acquire possession of her by payment of the purchase money; the betrothed is a girl for whom the purchase money has been paid’ (Encyclopedia Biblica, 1902, volume 3 page 2942)

‘in the Mosaic Law divorce was a privilege of the husband only…………..” (The encyclopedia Britannica, 11th edition, page 782)

கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு, இதன் அர்த்தம் புரியும் என்பதால் கட்டுரையை நீட்டாமல் இதன் மொழிபெயர்ப்பை தவிர்த்துள்ளேன்.
பெண்கள் இவ்வளவு மோசமாக பார்க்கப்பட்ட போதுதான் பெண்களை அவர்களுக்குத் தேவையான உரிமைகளையும் சுதந்திரங்களையும் அவர்களின் அந்தஸ்தையும் பகிரங்கப்படுத்திக் கொண்டு முஹம்மத் (ஸல்) அவர்களின் கடவுள் போதனைகள் மக்களை சீர்திருத்த வழிகோலியது.

பெண் பிள்ளைகள் வீடுகளின் சாந்தியின் அடிப்படை,
பெண்களின் கற்பு உலகில் பாதுகாக்கப்பட வேண்டும்,
வயது வந்ததும் அவர்களின் விருப்பம் போல் திருமணம் செய்து வைக்க வேண்டும்.

அவள் தாயாகும் போது அவளது பிள்ளைகள் அவளை சரியான தாயாக மதித்து கெளரவிக்க வேண்டும்.

வயது முதிர்ந்து மூதாட்டியாக இருக்கும் போதும் அவளை “சீ என்ற வார்த்தை கூட சொல்லி அழைக்கக் கூடாது.

இவைகளை இஸ்லாமிய போதனைகளாக சுருங்கச் சொல்லலாம்.
அதனால் தான் உலகில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் விகிதத்தில் பெண்கள் முன் நிற்கின்றார்கள்.

சுயமாக சிந்திக்கின்ற பெண்களும் தன் கற்பு பாதுகாக்கப்படும் பெண்களும் முஸ்லிமாகவே இருக்க விரும்புகின்றார்கள்.
உங்கள் வீட்டுப்பெண்களின் கற்புக்கும் இஸ்லாமிய சட்டங்கள் மட்டுமே பாதுகாப்பளிக்கும். 


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

2 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.ரிள்வான்,

மிக அருமையான சீரியசான ஆக்கம். நிறைய நிதர்சனமான கருத்துக்கள். மிக்க நன்றி சகோ.

அந்த தளத்தில் வந்த ஒரு அரைவேக்காட்டு ஆக்கத்திற்கான பதில் போல தோன்றுகிறது.

அடடா..! சகோ.ரில்வான், நீங்கள் சீரியஸாக வினவிய தளம் ஒரு காமெடி பீஸ் என்பதை முதலில் உணர்க.

என் தளத்தில் நான் போட்ட பின்னூட்டங்களை விட அங்கே... நெத்தியடியாய் (ஒருகாலத்தில்) நான் போட்ட பின்னூட்டங்கள் பலமடங்கு அதிகம். நாளாக ஆக, பல இடுகைகளில் அங்கே நடப்பதெல்லாம் முட்டாள்த்தனமான வீண் வெட்டி விவாதம் என்று ரொம்ப ரொம்ப ரொம்ப தாமதமாகத்தான் எனக்கு புரிந்தது.

இப்போது தமிழ்மணத்தில் அவர்கள் இழந்த முதலிடத்தை மீட்க போராடிக்கொண்டு இருக்கிறார்கள். என்ன போராட்டம்..?

பாகிஸ்தான் வெற்றி பெற வாழ்த்துகிறார்கள்.
அண்ணா ஹசாரவை இழிவு படுத்துகிறார்கள்.
வாக்களிக்க பணம் வாங்குவது குற்றமா என்கிறார்கள்.
இஸ்லாமிய சட்டம் மீது அவதூறு கூறுகிறார்கள்.

இஸ்லாம் பற்றி எழுத மட்டும் அங்கே மூவர் கொண்ட ஒரு சிறுபான்மைக்குழு உள்ளது. அவர்கள் கற்பனையில் நினைப்பது எல்லாம் இஸ்லாம் ஆகிவிடும் அங்கே.

நாட்டு அரசியல் சமூக நடப்புக்களை முன்பு ஒருகாலத்தில் நிறைய ஆய்வு செய்து ஓரளவு தரமாக மூன்று நாளுக்கு ஒரு பதிவு போட்டவர்கள்தான் அவர்கள்... ஆனால் இன்று...? ம்ம்ம்.... தான்தான் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என்று மண்டைகர்வம், எல்லாம் ஹிட்ஸ் படுத்தும் பாடு.

இழவு வீட்டிலும், பிணமாகவேனும் இருந்து முதல் மரியாதை பெற்றுக்கொள்ள போராட்டம்... புரட்சி.. புண்ணாக்கு!

அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளதீர்கள்.

Himma said...

Assalamu alaikkum.

//பெண் பிள்ளைகள் வீடுகளின் சாந்தியின் அடிப்படை,பெண்களின் கற்பு உலகில் பாதுகாக்கப்பட வேண்டும்,வயது வந்ததும் அவர்களின் விருப்பம் போல் திருமணம் செய்து வைக்க வேண்டும்.

அவள் தாயாகும் போது அவளது பிள்ளைகள் அவளை சரியான தாயாக மதித்து கெளரவிக்க வேண்டும்.

வயது முதிர்ந்து மூதாட்டியாக இருக்கும் போதும் அவளை “சீ” என்ற வார்த்தை கூட சொல்லி அழைக்கக் கூடாது.//

உண்மையில் பெண்க‌ளைப் பெண்க‌ளாய்ப் பார்க்கும் உன்ன‌த‌மான மார்க்க‌ம் தான் இஸ்லாம்.
உண்மை எங்கிருக்குமோ அங்கு தான் எதிர்ப்புக்க‌ள் அதிக‌மாக‌ இருக்கும், எது உண்மை எது பொய் என்று தெளிவாக‌ தெரிந்து கொள்வ‌த‌ன் மூல‌ம் ச‌ர்ச்சைக‌ளை விட்டும் எங்க‌ள் ஈமானைப் பாதுகாத்துக்கொள்ள‌லாம், பிற‌ரையும் பாதுகாக்க‌லாம்.

உண்மையில் அருமையான‌ ஆக்க‌மாக‌ தொகுத்து வ‌ழ‌ங்கியுள்ளீர்க‌ள், ஜ‌ஸாக்கல்ல‌ஹு ஹைர‌ன்.