நாங்கள் வேற்று கிரக வாசிகள் இல்லை
எழிமையும் நேர்மையும் நிறைந்த ஜனாதிபதியின் மரிச்சிக்கட்டிக்கான தீர்வு மக்களுக்கு சாதமானதாகவே இருக்கும்
பல தசப்தங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிகள், வீடுகள் இன்னும் அத்தாட்சிகளாக பிரம்மிக்கின்றன மரிச்சிக்கட்டி மண்ணில்.
ஒரு நூற்றாண்டையும் தாண்டிய காணி பத்திரங்கள், அரச தஸ்தாவேஜுகள் ஊர் வாசிகளால் கவனமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மக்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த பூமியை யுத்தத்தினால் அகதிகளாக வெளியேற்றப்பட்டு அநாதரவாக 25 வருட வாழ்வை கடத்தும் நிலையில் சொந்த பூமியை வணப் பிரதேசமாக அறிவிப்பது இனத் துவேசத்தின் உச்சகட்டம் அல்லாது வேரு ஒன்றும் இல்லை.
மரிச்சிக்கட்டி எங்கள் பூமி இல்லை என்றால் நாங்கள் வேற்று வாசிகளோ என்று கேட்க தோன்றுகிறது இந்த இனவாதிகளிடத்தில்.
பரம்பரையாக மக்கள் வழ்ந்ததற்காக ஆதாரங்கள் இருக்கின்ற பூமியை ஜனாதிபதி மைத்திரி சிரிசேனஅவர்கள் உத்தியோக பூர்வமாக எங்களை குடியேற்றுவார் என்று நம்புகிறோம்.
No comments:
Post a Comment