Be careful !!!!!!

Need changes - Teste 21

உஷார் !!!!!!

அண்மைக்காலமாக சில கல்லக்கும்பல் 4 சுவர்களூக்குளிருந்து கொண்டு பல மைல்களுக்கப்பாலுள்ள எமது பணங்களை திருடுவதற்கு முனைகின்றார்கள்.
எமது E mail முகவரியை எப்படியாவது கண்டுபிடித்து கீழுள்ளது போல் ஏதாவது ஒரு செய்தியை அனுப்பி எம்மை வைத்து பணம் சம்பாதிப்பதை சிலர் தொழிலாகக் கொண்டுள்ளார்கள்.

அன்பின் நண்பர்களே எச்சரிக்கையாக இருந்துகொகள்ளுங்கள்.


Be careful !!!!!!


now a days some of criminal teams roaming to pocket out our money by sending fake mails to our email IDs.

saying like below mails and asking sum amount of our money to be deposited.

be careful on that.

1)
From: Ms. Lurie Segal
International Canada Lottery/Ontario 49 Soccer World Cup 2010
Promotional Draw
Ontario Lottery Corporation
Consumer Affairs
70 Foster Drive, Suite 800, Sault Ste. Marie, Ontario, P6A 6V2
Your Winning Reference Number is: IMP/73253CA/2009 and Batch
Number: 642376/CA/2009.
WINNING NOTIFICATION
KEEP THIS EMAIL,IT CONTAINS IMPORTANT INFORMATION ABOUT YOUR
WINNING NOTIFICATION.
The Canadian Government sponsors this lottery for the promotion of the 2010 Soccer
World cup to be hosted in South Africa .
We happily announce to you the draw of the Special Global 2010 World Cup
Promotional Draw held on the Wed.Sept.23, in Essex United Kingdom and Ontario
Canada . Your e-mail address attached to REF N; IMP/73253CA, with Batch
Number:642376/CA/2009 drew the winning numbers 11,18,21,31,39,40 Bonus - 13 for
Ontario 49 Lotto under the choice of the lottery in the 2nd category of bi-weekly six.
You have therefore been approved to claim a total sum of US$800,000.00 (Eight
Hundred Thousand United States Dollars )
This is from a total cash prize of US $18,100,000.00 Million dollars, shared amongst
the first One Hundred and-thirty (130) lucky winners in this category Worldwide.
Because this particular draw was selected to promote the 2010 World Cup to be hosted in
South Africa hence your winning information must be kept to enable you participate in
our subsequent draws which will see 500 participants traveling on an all expense paid trip to South Africa for the Soccer World Cup 2010.
In view of this, your US$800,000.00 (Eight Hundred Thousand United States Dollars)
would be released to you by following the directives of the claim agent. Our Canadian agent will immediately commence the process to facilitate the release of your funds as soon as you contact him.

All participants were selected randomly from World Wide Web site through computer
draws system and extracted from over 10,000,000 companies and personal e-mails. For
security reasons, you are advised to keep your winning information confidential till your claim is processed and your money remitted to you in whatever manner you deem fit to claim your prize. This is part of our precautionary measure to avoid double claiming and unwarranted abuse of this program by unscrupulous elements. Please be warned!
You are required to forward the following details to our claiming agent
to help facilitate the processing of your claim, your winning price is to
the tune of $800,000.00 (Eight Hundred Thousand United States
dollars) This correspondence officially confirms that we are in receipt
of Instructions relating to the payment of your lottery winnings.

YOUR WINNING REFERENCE NUMBER AS LISTED ABOVE:
BATCH NUMBER AS LISTED ABOVE:
FULL NAME:
OCCUPATION:
COUNTRY:
COUNTRY OF RESIDENCE:
AGE:
GENDER:
TELLEPHONE NO.:

Remember, you must contact your claim agent Mr. Austin Connor, to
claim your prize, send your reference and batch number and all the
above information to his email address and call him to let him know
that you have contacted him through email.
THE CLAIM AGENT CONTACTS ARE BELOW
Processing Manager: Mr. Austin Connor
Email; austinconnor@canada.com
Phone: +1 786 3758115

Note; your winning fund has been officially insured on your name(EMAIL
ADDRESS) for safety and security reason to avoid any party/parties or
organization have any access to tamper or touch your winning fund till it
arrives into your nominated bank account of your choice in any part of the
world. Therefore to file your claim, kindly contact our Claim Agent
immediately you read this message for quick and urgent guidance for the
procedures you have to follow to effect the release of your fund without
further delay.

Yours Sincerely,
Ms Lurie Segal.

NOTE To confirm that you have the winning number for the Wed.Sept.23 draw,
visit: http://www.canada.com/findit/lotteries/results.aspx?id=8 , ON-Ontario-49-
lottery-results.html confirm under Ontario 49.
NB: Any breach of confidentiality on the part of the winners will result to
disqualification. Please do not reply to this email address. Contact your claim agent.
(Mr. Austin Connor)

**************************
2)
roland jessica to me
show details Apr 16

Ok My Dear, i have been waiting for my information,but a friend i send to bring it for me was saying that one of my wicked uncles didn,t allow him to open my fathers house.i knew it earlier that such a thing will happen,that is why i want this money to be transfered in your country before i make any step.

i pray to GOD to tauch your heart,so that you can wake up to assist me in this bad condition of mine.since i was born,i never see GOD fell or change is only humanbeings that can fell i know that GOD is with me.i have told you to abandone everthing that you are doing and lets face this transaction so that this money will be transfered to your country,

then i will be confident enough and i can go my home to take my necessary traveling documents to prepare of coming to your country for the investment because this money is only my last hope thats why i want the money to be transfered to you for safety porpose. below is my photo.am still looking foward to hear a good news from you

thanks and GOD BLESS
yours

Jessica.

***************************
3)
Urgent Attention‏
From: Martins Anyanwu (martinsanyanwu12@yahoo.com)
Sent: Thu 9/24/09 4:08 PM
To: rilwan ridha (ridha27@hotmail.com)

Attention dear,
How are you today and your family I supposed every thing is in accordance to your anticipation thanks to God almighty? I thank you very much for your mutual correspondence to our enquiry, it is very greatly appreciated. I am impressed by the priority and serious attention you have given to this request and I assure you I will do all the best to ensure you receive this money as soon as possible.

You sound so trust worthy and I will do the deal with you. I took my time in making sure that a solid arrangement of receiving the fund successfully is guaranteed. You will be reasonably compensated as soon as the fund is cleared.

Please get in touch with me with the below details immediately you acknowledge the receipt of this message.
Full Name:
Address:
Telephone Number:
Mobile Number:
Private Email:
Age:
Occupation:
Country of Origin:
Sex:
Marital Status:
Your prompt response is highly imperative.

Yours sincerely,
Mr. Martins.

--- On Sat, 9/19/09, rilwan ridha wrote:

From: rilwan ridha
Subject: RE: Urgent directives
To: martinsanyanwu12@yahoo.com
Date: Saturday, September 19, 2009, 7:42 PM

Dear Sir,
I have no idea to visit to spain,
I have lot to do here.
please do the needful to get me.

thanks


--------------------------------------------------------------------------------
Date: Thu, 17 Sep 2009 05:27:17 -0700
From: martinsanyanwu12@yahoo.com
Subject: Urgent directives
To: ridha27@hotmail.com

Hi, This money was move from UK to SPAIN, There is progress as it effects the fund. I just receive directive that you will be paid in SPAIN. This, the official believe will be best suitable for the transaction.

It's okay by me as am well briefed that it will not attract much fees. Will you will be able to travel to (SPAIN) SPAIN for the final release order?
If this is okay by you then, let me know and send as well your contact address and your phone number.. This should be treated as top most priority.

Await your swift response
Martins.

--- On Wed, 9/16/09, rilwan ridha wrote:


From: rilwan ridha
Subject: RE: VERY GOOD
To: lisabenedict@sify.com, martinsanyanwu12@yahoo.com
Date: Wednesday, September 16, 2009, 7:24 PM

I got the advice from Mrs. Lisa Benedict,

I hope you can undersdant the information which is wrote by her.

please

> Date: Sun, 13 Sep 2009 09:03:27 +0100
> Subject: VERY GOOD
> From: lisabenedict@sify.com
> To: ridha27@hotmail.com
>
> Attn: Dear ,
>
> I write to acknowledge the receipt of your mail. The content is well
> assimilated however, am sad to notify you that i am on hospital
> admission as recommended by my physician. My health keep deteriorating
> every day, he suggest i keep away from making and answering calls. In
> lieu of this ugly development, i advise in the interest of the fund
> you contact my attorney. He has good knowledge of what we are doing
> and in a better position to make necessary changes in your favor.
>
> He is Martins Anyanwu,
> Email. martinsanyanwu12@yahoo.com
>
> He is reliable and should be trusted.
>
> Thank you so much for your understanding..
>
> Mrs Lisa Benedict.


--------------------------------------------------------------------------------
Share your memories online with anyone you want anyone you want.

*********************

4)
KTU/9023418808/04.
WEST AFRICAN CLAIMS UNIT:West African Fiduciary Agent for MICROSOFT AUSTRALIAN PROMOTIONS.
Name: REVEREND LARRY ROSSTEL:+2347068088175Email:larryross2009@hotmail.com
KINDLY FILL THE CLAIMS VERIFICATION/PROCESSING FORM BELOW AND SEND TO HIM:
FULL NAMES OF BENEFICIARY:..
CONTACT ADDRESS:.CITY/STATE:.COUNTRY:.
NATIONALITY:.
SEX:..
AGE:..
MARITAL STATUS:
TEL NO:..
FAX:...
OCCUPATION:...
AMOUNT WON:..
Our agent will immediately commence the process to facilitate the release of your funds as soon as you contact him on the email stated above. PLEASE DO NOT REPLY TO THIS EMAIL, BUT CONTACT YOUR CLAIMS AGENT DIRECTLY BY Email:larryross2009@hotmail.com Good luck from me and members of staff of the MICROSOFT AUSTRALIAN LOTTERY INC.

Yours Faithfully,
Mrs CAROL SMITH

****************************

5)
YOUR E-MAIL HAVE WON US$850,000(DOLLARS) TODAY‏
From: AUSTRALIA LOTTERY 2009 (chizy08@switched.com)
Sent: Wed 7/15/09 6:46 AM
To:
244 Canberra Ave Fyshwick ACT 1509Postal:
PO Box 147 Canberra City ACT 2701AUSTRALIA Attention Winner,
Today your e-mail id was selected through the computer ballot system,as a winner Of Australian International Lottery programmer Therefore, you hereby have been approved a lump sum of US$850,000(DOLLARS) in cash credit file ref ILP/HW 47509/02 from the total cash prize of US$6,800000 (DOLLARS) shared among eight lucky winners in this category .You have to contact our claim agent for your payment process and include your personal information for smooth transaction. For verification

purpose,Forward to him your claim details below;

(1)Your mailing address:
(2) Your Tel(Mobile):
(3) Your Nationality/Country:
{4} Your Full Names:
{5} Your Occupation
{6} Your Age. TICKET NUMBER: 4706172 507056490902SERIAL NUMBER: 7050490902/189 HOW TO CLAIM YOUR PRIZES;Simply contact our Claim agent with the below contact information:
Agent Name: Rev. Eamonn J. SweeneyPhone No: (+44) 704 577 6916Contact E-mail: rev.emonesweeney@universia.es Yours in service, Mrs. Liz MilfordAUSTRALIA LOTTERY(CO COORDINATOR

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

Study Tips for College Students

Need Changes taste 20

Your first college class may seem intimidating. Ease your stress by arriving prepared for any test, lecture, or presentation. Our study tips will help you start your year off on the right academic foot.

Reading Comprehension of a Difficult Book or Chapter
We all encounter textbook chapters or books that we just can't get into. There are many reasons, like difficult terms, bad writing, or boring material. If you try to read a chapter and realize you're not retaining any information, try these steps.
Seven Secrets to Success in English 101

Welcome to English 101--sometimes called freshman English or college composition. It should be one of the most enjoyable and rewarding courses in your college life. But to succeed in anything, it helps to be prepared. So, as an old college English instructor, I'm going to let you in on seven secrets to success.

Online Writing Labs
Many colleges and universities in the U.S. and Canada host exceptional online writing labs (OWLs). Here are five of the very best.

Tips for Taking Essay Exams
These tips you should help you to manage exam pressures and compose a strong essay.

Free Tools and Services for Students
Write your papers, keep in touch with your family, and find the local pizza joints. Here are the best free services and tools from Google to help you with your college life.

Learning Disabilities in College -
Successful Strategies for LDs in College
Is your child with a learning disability heading off to college? This is an exciting time in your young adult's life. Along with the regular concerns like finding a good roommate and a safe and affordable place to live, you will need to find new ways to help your him succeed in the college environment. These tips will help you learn about your rights in college, develop powerful study strategies, write better essays, and plan A+ presentations.

Study Groups - Forming a Study Group

Study groups are very common in undergraduate and graduate school. Many business schools encourage, and in some cases, require study groups. Gets tips on how to form and organize a study group.

When to Cite a Source
Cite sources when necessary. How many times have you heard a teacher say this? But many students might wonder what exactly counts as a fact, and what doesn't.

Using a Library
For some students, one of the biggest differences between high school and college is the amount and depth of research that is required for research papers. Learn about call numbers, using a card catalog, finding articles, exploring special collections, and more.

Picking a Topic for an Archaeological Essay
If your archeology or anthropology professor has assigned you an essay to write on a culture or site, how do you pick one? Luckily, there are several ways, located right here.

What Is Geology?
The whole of Earth sciences, compressed to a nutshell.

What Is Physics?
A brief description of the science of physics.
Major Laws of Physics
Physics is the study of the fundamental laws of nature. If you want to know what some of the most important and useful of those laws are, this is where you can find out.

What Is Psychology?
When you hear the word psychology, what comes to mind? While psychology is a popular subject, a lot of people are not aware of the many elements of this broad and fascinating subject. Learn about the early history of psychology, the official beginning of psychology and more about psychology today.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

இஸ்லாமிய பார்வைக்குள் படைப்பிலக்கியம் -11

21 April, 2010ன் தொடர்,

மாற்றங்கள் தேவை - சுவை 15

அபூ அனூத், இலங்கை.
சமய சார்பற்ற சிந்தனைத் தளத்தில் நின்று கொண்டு தலைகால் புரியாமல் இலக்கியம் படைப்போர், மதம் - கடவுள் பற்றிய எள்ளி நகையாடலை மலினப்படுத்தியுள்ளார். மதவாழ்வை கேள்விக்குட்படுத்தி, கொச்சைப்படுத்தும் நாவல்களும் கவிதைகளும் தற்போது, மிக அதிகமாகவே வெளிவரத் தொடங்கியுள்ளன.

இஸ்லாமிய இலக்கியம் இறைநெறிக்குட்பட்டுப் பேசும். ஆனால், அந்நிய இலக்கியங்கள் அந்தந்த சமூகம் சார்ந்த கலாசார, மரபுகளைப் பிரதிபலித்துக் கொண்டு செல்லும். அவை, அந்த இலக்கிய மரபுகளில் தவிர்க்க முடியாதவை. அங்கே, ஆண்-பெண் அந்தரங்கச் சதை வியாபார வெறியாட்டங்கள் என்பன அந்தந்த சமூக, பண்பாட்டுக் காலாசார மரபுகளின் சிந்தனைக்கேற்ப, கதைகளில், நாவல்களில், கவிதைகளில், பாடல்களில் வெளிப்படும்.

சிலபோது, வக்கிரத்தை வெளிப்படுத்துமாப்போலும் அமைந்துவிடுகிறது. பெற்ற தாய்-தந்தைக்குத் தெரியாமல், ஊரைவிட்டு ஓடிப்போகும் காதல் சமாச்சாரங்கள் பலவடிவங்களில் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. இதற்கு உடன் போக்கு என்று பெயர். உடன்போக்கு மேற்கொண்டவர்கள் பிறந்த இடத்துக்கு திரும்பி வரமாட்டார்கள். இதன் தாக்கத்தால், இன்றைய காதலர்கள் (?) சொல்லிக் கொள்ளாமல் போகிறார்கள். சொல்லாமலே வந்தும் விடுகிறார்கள் - சில பேர் ஏமாற்றப்பட்டதால் உலகத்தைவிட்டே ஓடி விடுகிறார்கள் என்பதை அன்றாடம் அறிகிறோம்.
சங்ககால இலக்கியக்காதலர்கள் மணம் முடிக்க ஓடினார்கள். அதன் இலக்கிய விரச ரசனைக்கு ஆட்பட்ட இன்றைய கால காதலர்கள் மணம் முடிக்காமல் வக்கிரத்தை வெளிப்படுத்த ஓடுகிறார்கள். இவர்கள் இதில் சேராமல் காதலர் தினம் (ஏயடநவெiநெ னுயல) என்று பெப்ரவரி 14ம் திகதியை, தமது வக்கிர எண்ணத்தை வெளிப்படுத்த ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். இந்தக் கேடு கெட்ட கலாசாரத்திற்கு தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும், தூபம் இட்டு வளர்த்தும் வருகின்றன.

உண்மையை மட்டும் பேசும், உள்ளாந்த இஸ்லாமிய இலக்கியங்கள் கிடைக்காத போது, இஸ்லாமிய இளைஞன் பிற இலக்கியங்களில் ரசனைத் தாகம் தணிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. அவற்றைப் படிக்கத்துவங்கும் போது, அவை வாசகன் மீது சிறுக சிறுக தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்த துவங்குகிறது. எனவே, அந்நிய இலக்கியத்தில் தாகம் தீர்க்கும் வாசகன், அவற்றைப் பிரதிபலிக்கும் பிரதிநிதியாகவே நாளடைவில் மாற்றமடைகிறான். நமது பெரும்பாலான மக்களுக்கு வழிகாட்டி தமிழ்ச் சினிப்பாடல்கள், படங்கள், சில புத்தகங்கள், சில நாவல்கள், விரசத்தைக்கக்கும் பத்திரிகைகள் என்பனவாகிவிட்டன. மிக மோசமான சினிமாப்படங்கள் அவற்றுக்கு கூஜா தூக்கி வயிற்றைக் கழுவும் பத்திரிகைகள் கல்லூரியில், கலாபீடங்களில், பல்கலைக்கழகங்களில், ஏன்? அரபு மத்ரஸாக்களில் படித்த அதிக இளைஞர்களிடம் அமெரிக்க, மேற்கத்திய ‘ஹிப்பி’ கலாசாரத்தையும், அரைகுறைபடிப்பாளர்களிடம் தமிழ்ச்சினிமாக் கலாசாரத்தையும், இலக்கியம் என்ற போர்வையில் திட்டமிட்டு இன்னும் பரப்பிவருகின்றன. இந்தப் பத்திரிகைகள்.
எனவே, அத்தகைய அந்நிய இலக்கியம் பற்றிய சில உதாரணங்களை இங்கே குறிப்பிட்டுக்காட்ட முனைகிறோம்.

அந்நிய இலக்கியத் தாக்கம் அகிலன் ஒரு பிரபல்யமமிக்க எழுத்தாளன். எனினும், அவர் தனது நாவல்களில் சமுதாயத்தில் நல்லவர்கள் என்று உலவும் கயவர்களை அடையாளப்படுத்த முனையும் போது, விபச்சாரத்தையும் வேசிகளையும் ஆதரிக்க முனைந்து, நாவலையே நாசப்படுத்திவிடுகிறார். இதற்கு ஓர் உதாரணத்தை கீழே தருகின்றேன். வேசித் தனத்தால் தன் உடலை மூலதனமாக்கிப் பொருள் குவிக்கு நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு பெண்ணை வேண்டுமென்றேதான் நான் இந்தக் கதைக்குத் தலைவியாக்கிக் கொண்டேன். சமுதாயப் பிரமுகர்கள் என்ற போர்வையில் உலவும் சிலர் அவளைவிடவும் சீரழிந்தவர்கள் காசுக்காகத் தங்கள் மனசாட்சி, சொல், செயல், ஆன்மா அனைத்தையும் விபச்சாரம் செய்யும் போலிகள் இவர்கள். சமுதாயத்தில் ஆங்காங்கே கயவர் இருக்கத்தான் செய்வர். ஆனால், கயவர்கள் வழிகாட்டிகளாகக் கொள்ளும் சமுதாயம் உருப்படுமா? என்பதுதான் நான் இந்த நாவலில் எழுப்பியுள்ள கேள்வி. ஜஅகிலன் (1973) நாம் எங்கே போகிறோம்? பக்கம் 05ஸ
கவிஞர் கண்ணதாசன் தனது தாயிடமும், தாரத்திடமும் அடையாத இன்ப அனுபவத்தை விலை மாதுகளிடமும் அனுபவித்ததாக தனது நூல்களில் குறிப்பிடுகிறார்.
என் அருகில் இருக்கும் பெண்கள், அவர்கள் விலைமகளிர் ஆயினும் பயபக்தியோடு என்னைக் கவனிப்பார்கள்; பணிவோடு எனக்கு சேவை செய்வார்கள்; “ஐயா” என்று தான் அழைப்பார்கள்.

விலைமாதர் உறவும், மதுப் பழக்கமும் எந்த நாட்டிலும் வேண்டாத பழக்கம் என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, “தர்ம விரோதம்” என்று கருதப்பட்டதில்லை.
இந்து வேதங்களும் அப்படிக் கூறியதில்லை.

தமிழகத்து விலைமாதர்கள், தங்கள் குடும்பங்களுக்காகத் தங்களை தியாகம் செய்து கொண்டவர்கள்.
பத்து ஆண்டுகளுக்கு முன் பெங்க;ர் ஹோட்டல் ஒன்றில் ஒரு விலைமகளைச் சந்தித்தேன்.
வெறும் ‘சேட்டைகளை மட்டுமே கண்டிருந்த அவள், இப்படி ஓர் அப்பாவியைச் சந்தித்ததில் ஆச்சரியப்பட்டாள்.
இவர்களை (வேசிகளை) எல்லாம் மனதிலே எண்ணிய போதுதான் விலைமாதர் போக்கை நியாயப்படுத்த எனக்குத் தோன்றிற்று.
விளக்குமட்டுமா சிவப்பு? அதிலே தான் பிறந்தது. வெறும் காமத்தை மட்டுமே மூலமாகக் கொண்டு, விலை மாதரை நான் நெருங்கியதில்லை. அவர்களிடம் இருந்து நிறைய அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன்.
(பார்க்க: கவிஞர் கண்ணதாசன், எனது வசந்தகாலங்கள் 1997 பக்கம்: 49-50)

கவிஞர் கண்ணதாசனின் “விளக்கு மட்டுமா சிவப்பு” “நடந்த கதை” என்ற இரு நாவல்களும் இன்னும் சில அவரது நூல்களும் விபச்சாரத்தை ஒரு தொழிலாக அங்கீகரிப்பதோடு நியாயப்படுத்தவும் முனைகின்றன.

வைரமுத்துவின் “வில்லோடு வா நிலவே” என்ற நாவல், வரலாற்றோடு காதலையும் தற்கொலையையும் நியாயப்படுத்துகிறது.
“காவி நிறத்தில் ஒரு காதல்”,
“வானம் தொட்டுவிடும் தூரம் தான்”,
“ஒரு போர்க்களமும் இரண்டு பு+க்களும்”,
“மீண்டும் என் தொட்டிலுக்கு”
போன்ற வைரமுத்துவின் அனைத்து நாவல்களும் காம விரசத்தோட கலந்த காதல் கதைகளாகவே நகர்த்தப்படுகிறது. அதில், ‘வானம் தொட்டுவிடும் தூரம் தான்’ என்ற நாவலில் பள்ளிப் பருவ பாலிய காதலை வலியுறுத்துவதாகவும் ஆசான்களின் அனுமதி மறைமுகமாகக் கிடைப்பதாகவும் கதை நகர்த்தப்படுகிறது. காவி நிறத்தில் ஒரு காதல், என்ற நாவல், காதல் கைக்கூடாதபோது, காடேகி, காவி அணிந்து, சாமியாகி அப்போதும் காதல் உணர்வை விட முடியாது, பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் காதலியைத் தேடிப் பயணிப்பதையும், காதலியின் தங்கை விபச்சாரியாக மாறி இருப்பதையும் சித்திரிக்கிறது.

இதே போல், ஆணாதிக்கத்தை சமூகத்தளத்தில் நின்று, அணுகி, விமர்சிக்க முனைந்த ஜானகிராமனின் “மோக முள்” என்ற நாவல், தீவிர பெண்நிலைவாத சிந்தனையை பிரஸ்தாபித்து, பெண்ணை மையமாகக்கொண்டு, ஆண் வாழ்வதை எடுத்துக்காட்ட முற்படுகிறது.

இவ்வாறு, இங்கு நாம் சிலவற்றையே நாவல் இலக்கிய சமுத்திரத்திலிருந்து அடையாளப்படுத்தினோம். அவற்றுள் சில சமூக வாழ்வின் அவலங்களையும், பொருளாதார அவதிகளால் புதைந்து போன உறவுகளையும், அவசர யுகத்தில் அல்லாடும் தாய்மையினையும், நவீன இயந்திர வாழ்க்கையில் துருப்பிடித்துப் போன நட்பையும், கால வேகத்தில் மியு+சியத்திற்கு அனுப்பப்பட்ட மனிதத்தையும் படம் பிடித்துக்காட்ட முற்பட்டாலும், சில கொடிய, சமூகத் தீமைகளை தவிர்க்க முடியாத ஒன்றாகக் காட்டி, நியாயப்படுத்த பகீரதப்பிரயத்தனப்படுகின்றன.
இதேபோன்று, ஆயிரமாயிரம் நாவல்களும், சிறுகதைகளும், கவிதைகளும், இஸ்லாத்திற்கு முரணான, எதிரான கருப்பொருள்களில் அமைந்துள்ளன. இவை, அந்நிய இலக்கியங்களில் மலிந்தும் நிறைந்தும் கிடக்கும் நச்சுத் துளிகளில் சில, பிற காவியங்களுக்குள் இழையோடும், அவற்றின் கலாசார, பாரம்பரிய சமூக மரபுகளையும் உணர்வுகளையும் புட்டுபுட்டுவைக்க நாம் முனைந்தால், பல ஆயிரம் பக்கங்களில் பல நூல்கள் எழுத நேரிடும். எனவே, நாம் சிலவற்றை அடையாளப்படுத்தியுள்ளோம். அவை, வாசிப்போருக்கு மிகத்தெளிவாகும். நாம் குறிப்பிட்ட உதாரணங்கள் எவ்வளவு மோசமானவை, எவ்வாறு இஸ்லாமிய சிந்தனைக்கு முரணானவை என்பதையும் தெளிவுபடுத்த முனைந்துள்ளோம்.

அதேவேளை, முஸ்லிம் சமூகத்தின் உள்ளே இருந்து கொண்டே இஸ்லத்தை மாசுபடுத்தியும், சிதைத்தும் திரித்தும் எழுதவும், பேசவும் கூடியவர்கள் உருவாகி இருக்கிறார்கள். இத்தகையவர்களிடம் நாம் மிக அவதானமாக இருக்க வேண்டும். நான் அண்மையில் வாசித்த, இஸ்லாத்திற்கு எதிராக எழுதப்பட்ட இரண்டு நாவல்கள் பற்றி இங்கே குறிப்பிட விளைகின்றேன்.
அவை:
1. சாய்வு நாற்காலி
2. சந்திரகிரி ஆற்றங்கரையில் (மொழிபெயர்ப்பு நாவல்)
இஸ்லத்திற்கு எதிரான, முரணான சிந்தனைப் போக்குள்ள தீவிரப் பெண்ணிய வாதியான, தோப்பில் முஹம்மது மீரானின் ‘சாய்வு நாற்காலி’ (1995) என்ற அவரது ஐந்தாவது நாவல், சல்மான் ருஷ்தியின் ‘சாத்தானியக் கவிதைகள்’ தஸ்லீமா நஸ்ரினின் ‘லஜ்ஜ’ கவிக்கோவின் “பசி எந்தச் சாதி? போன்றவைகளின் பின்னணியில் வைத்து நோக்கத்தக்கது.

சாய்வு நாற்காலியில் இஸ்லாத்தையும் இஸ்லாமிய கலாசாரத்தையும் எள்ளி நகையாடி எழுதியதற்காக - தோப்பில் முஹம்மது மீரானுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டது. இந்த நாவல் தமிழோடு, அதிகமான மலையாள சொல்லாடல் கையாளப்பட்டுள்ளமையால், சாமானியர்கள் அதை விளங்கிக்கொள்ள, ஒரு முறைக்குப் பலமுறை படிக்க நேரிடலாம். எனினும், இந்த நாவல் இஸ்லாமிய சிந்தனைக்குப் புறம்பான, எதிரான கருத்தியல் சார்ந்தது என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியும்.

அதேபோல், அண்மையில் நான் படித்த, தோப்பில் முஹம்மது மீரானின் முன்னுரையுடன் வெளிவந்த பிறிதொரு நாவல், இஸ்லாத்திற்கு விரோதமான, கன்டை மொழியில் சாரா அபு+பக்கர் எழுதிய ‘சந்திரகிரிய தீரதல்லி ’ என்பதாகும். இதில் இஸ்லாமிய சமூகத்தின் பெண்களின் நிலைமையையும் இஸ்லாமிய குடும்பவியலையும் நகைப்புக்கிடமாக்கியுள்ளதால், தி.சு. சதாசிவம் என்பவர் உடனே தமிழில் ‘சந்திரகிரி ஆற்றங்கரையில்’ என்று சுடச்சுட மொழிபெயர்த்துத் தள்ளிவிட்டார். ரஷீத், முஹம்மத்கான் உட்பட பல பாத்திரங்களுடன், முஸ்லிம் பெண்கள் தொடர்பான முற்றிலும் இஸ்லாத்திற்கு முரணான, விரோதமான, வித்தியாசமான கருவை, சாரா அபு+பக்கர் கையாண்டுள்ளார்.

நாம் முன்னர் குறிப்பிட்ட அதிதீவிரப் பெண்ணியவாதியான, தோப்பில் முஹம்மது மீரான், இந்நாவலுக்கான தனது முன்னுரையில் “நான் வாசித்த வரையில் தமிழிழோ மலையாளத்திலோ இதுவரையிலும் யாராலும் கையாளப்படாத ஒரு புதிய விசயம் இது. இந்தக் கன்னட நாவலின் மொழிபெயர்ப்பு, தமிழ் வாசகர்களுக்கு முஸ்லிம் பெண்களின் மணவாழ்க்கையில் காணப்படும் பின்னல்களை அப்பட்டமாகவே காட்டுகிறது. இந்தப் பின்னல்கள் கன்னடப் பகுதிய முஸ்லிம் பெண்களின் வாழ்வில் காணப்படும் பின்னல்தான்” என்று இஸ்லாமிய குடும்ப அமைப்பையும் அதில் பெண்களின் நிலையையும் போலியாகக் கற்பனை செய்து, பின்னல் உள்ளதாக நஞ்சைக் கக்குகிறார்.
இந்த நாவலின் கருவானது மருமகன் மீதுகொண்ட பகையினால், மகளுடைய வாழ்வையே சீர் குலைத்து, பரிதவிக்க விட்டு, பின்னர் பரிகாரந்தேட முனையும் தந்தையின் போக்கும், மத (இஸ்லா)த்தின் பெயரால் ஆணாதிக்கத்தைச் செயற்படுத்தும் (முஸ்லிம்) சமூகத்தின் நிலையையும் சித்தரிக்கிறது. உண்மைக்குப் புறம்பான பல்வேறு போலில் புனைவுகளை இந்நாவல் சுமந்துள்ளது விமர்சிக்கவும், கண்டிக்கவும் படவேண்டியது.

அதேபோன்று, எகிப்து நாட்டைச் சேர்ந்த அவசர இலக்கியவாதியான நஜீப் மஹ்பு+ழ் என்பான் முஸ்லிம்களது மார்க்க (இஸ்லாமிய) உணர்வைக் கொச்சைப்படுத்தியும்ஈ எகிப்திய முஸ்லிம்கள் மத்தியில் பாலியல் துறை சம்பந்தப்பட்ட பிரள்வுகள் அதிகம் (?) என்பதையும் போலியாக விபரித்து, அவனால் எழுதப்பட்ட அரபு நாவலுக்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. இது அரபிலக்கியத்திற்கான நோபல் பரிசின் வரலாற்றிலேயே முதன் முதலாக வழங்கப்பட்டது. அதேபோல் யு+த நிறுவனங்களான மாஸோனியா, ரோட்டரிக் கழகம் (குசநந ஆயளழசெலஇ சுழவயசல ஊடரடி) என்பன, நஜீப் மஹ்பு+ழ் என்ற நரகல் நடை எழுத்தாளனுக்குப் பரிசு வழங்கி முஸ்லிம் சமூகத்தின் தூய்மையான உணர்வுகளை அவமதித்துக் கொச்சைப்படுத்தின. ஏனெனில், யு+தர்களின் இஸ்லாத்திற்கு எதிரான சதி முயற்சிகளுக்கு நஜீப் மஹ்பு+ழ் ஆதரவுக்கரம் நீட்டிவரும் கோடரிக்காம்பு.
இவ்வாறான முஸ்லிம் பெயர்தாங்கி, நரகல் நடை எழுத்தாளர்களைப் பணம் கொடுத்து, பரிசு வழங்கி, இஸ்லாத்திற்கு எதிராக எழுதவைத்து, முஸ்லிம் சமூகத்தின் உயர்ந்த ஒழுக்கக் கட்டுக்கோப்பை உடைத்தெரியும் முயற்சிகளில் மேலைத்தேயவாதிகளும் அதன் அடிவருடிகளும் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு உதாரணமாக சல்மான் ருஷ்தியின் ‘சாத்தானியக் கவிதைகள்’ என்ற நூலுக்கு மேற்குலகின் பிரசார சாதனங்கள் கொடுத்த இலவச விளம்பரத்தைக் குறிப்பிடலாம்.

உலகு எங்கும் பரந்து வாழும் முஸ்லிம்கள் மட்டுமன்றி, சத்தியத்தையும், உண்மையையும் நேசிக்கும், மததூற்றலையும் கொச்சைப்படுத்தலையும் வெறுக்கும் அனைத்து நெஞ்சங்களும் ‘சாத்தானியக் கவிதை’ என்ற நூலுக்கெதிராக ஆர்த்தெழுந்து, தடை செய்யக் குரல் எழுப்பின. அந்த எதிர்ப்புகளைக் கண்டுகொள்ளாமல் 1989 மார்ச் 12ம் திகதி இஸ்ரேலில் திறந்து வைக்கப்பட்ட, ஓர் இலட்சத்திற்கும் அதிகமான நூல்களைக்கொண்ட, சர்வ தேசிய புத்தகக்கண்காட்சியில் (நுஒhiடிவைழைn) ‘சாத்ததானியக் கவிதைகள்’ முக்கியத்துவமளிக்கப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டதானது. இந்நூலின் பின்னால் மறைந்துள்ள ‘ஸியோனிஸ’ சதிகளை மிகத் தெளிவாகப் புலப்படுத்தியது. இது ‘ஓர் ஒழுக்கக்கேடான நூல்’ என வர்ணித்து, இது இஸ்ரேலில் தடைசெய்யப்பட வேண்டும் எனக் கூறிய யு+த மதகுருவான யுரசாயஅ ளுhயிசைழ என்பாரின் வேண்டுகோளைக் கூட அப்போது இஸ்ரேல் புரக்கணித்தது. இவ்வாறு இஸ்லாமிய ஒழுக்க நியமங்களை துச்சமாக மதித்து எழுதவும், இறைத் தூதரின் புனிதமான ஆளுமைகளுக்கு மாசு கற்பிக்கவும் தூண்டி வருகின்றனர்.தமிழ் உலகில் ‘சாத்தானியக் கவிதை’ நுhலின் அபத்தங்களுக்கு ஆணித்தரமான பதில் அறிஞர; Pது அவர;களால் அளிக்கப்பட்டது.
அதேபோல் இஸ்லாமிய சமூகத்தினுல் தோன்றிய உட்பிரிவுகளும், வழிகெட்ட கொள்கைப் பிரிவுகளும் இலக்கியத்தினூடாக பிரசாரப் போர்தொடுத்து, நஞ்சு கலந்துள்ளன ‘கனகாபிஷேக மாலை’ யின் ஆசிரியரான கனகவிராயர் ‘ஷீஆ’க் கொள்கையில் ஊறித் திளைத்தவர் போல் எண்ணத்தோன்றுகிறது. அவரது எழுத்துக்களைப் படிக்கும் போது, அவர் கட்டவிழ்த்துள்ள மிதமிஞ்சிய வர்ணனைகளிலே அத்தகைய கருத்தியல்கள் மலிந்திருக்கக் காணலாம்.

“தோகாந்துருக்கி ” வாயிலாக ‘ஷிஆக்’ கருத்தொன்றை ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகிறார் “உலகிலே வாழ்ந்த ‘அமீருல் முஃமினீன்’ என அழைக்கப்பட்டவர் அலி  அவர்கள் ஒருவர் மாத்திரமேயாகும். அந்த மொழி பெறக்கூடியவர் மற்றொருவர் உளரேல், அது அவர்கள் தம் புதல்வரேயாம்.”
இதேபோல், கற்பனையில் கற்பிதம் செய்ய முடியாதவற்றையெல்லாம் உளறிவைத்த உமறுப் புலவரின் சீராப்புராணமும், அஞ்ஞான குணங்குடி மஸ்தானின் ஞானப்பாடல்களும் இஸ்லாத்திற்கு முரணானது என்பதை அறிய முடிகிறது. இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் என்ற தனது நுhலில் ஹஸ்;ஸான் அவர;கள் உமறுப் புலவரின் சீராப்புராணத்தை இவ்வாறு விமர;சிக்கின்றார;.
உளறுகிறார் உமறுப் புலவர;
இஸ்லாத்துக்கு முரணான கவிதைகள் நாற்றம் பிடித்த சீழை விட அசிங்கமானவை; அருவருக்கத் தக்கவை. சீழினால் ஏற்படுகின்ற புரைநோயைவிட இஸ்லாமிய இலக்கியம் என்னும் பெயரால் இஸ்லாத்துக்கு முரணான கருத்துக்களைப் பாடுவது பெருங்கேடு விளைவிப்பதாகும்.

திருக்குர்ஆன், நபிமொழிகளில் ஆகியவற்றின் வன்மையான எச்சரிக்கைகளையும் மீறிக்கொண்டு இஸ்லாத்துக்கு முரணான கருத்துக்களைக் கொண்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் எப்படித்தான் தலையெடுத்தன?
பிறசமய இலக்கியங்களைப் பார்த்து அவைபோலத் தாமும் செய்யவேண்டும் என்ற இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களின் பேரார்வமே இதற்குக் காரணமாகும்.
இன்றுகூட புதிதாக இஸ்லாத்தை ஏற்கும் சகோதரர்கள் தங்களுடைய முந்தைய மதச்சடங்கு சம்பிரதாயங்களில் இருந்து எடுத்த எடுப்பிலேயே முற்றிலும் விடுபடவியலாத நிலையில் இருப்பதை நாம் காணுகின்றோம். இன்றைய நிலையே இதுவெனில், நானூறு, ஐநூறு, ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களுடைய நிலை எப்படி இருந்திருக்க வேண்டும்?
அக்காலத் தமிழ் முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் புதிதாக ஏற்றுக்கொண்டவர்கள் என்பதை நினைவிருத்தியே இதை அணுக வேண்டும். அந்தப் புதிய முஸ்லிம்கள் தங்களுடைய முந்தைய சமய வழிபாட்டு முறைகளிலும் பழக்கவழக்கங்களிலும் தலைமுறை தலைமுறையாக ஊறிப்போயிருந்த நிலையில் அதைவிட்டு விலகி இஸ்லாமிய ஒழுக்கங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆரம்ப நிலையிலிருந்தனர். ஒரு சமயப் பண்பாட்டிற்கு மாறுகின்ற கட்டத்தில் (வுசயளெவைழையெட pநசழைன) அவர்களுடைய நிலை இருந்தது.
பழக்கதோஷம் காரணமாகப் புதிய முஸ்லிம்கள் கோவிலுக்குச் சென்றனர்; கதாகாலகட்சேபம் கேட்டனர்; மூர்த்திகளின் உற்சவங்கள், தேராட்டம், ஆனை குதிரைகளின் அணிவகுப்போடு உண்டியல்-கொடி ஊர்வலங்கள், கொடியேற்றம், பாலாபிஷேகம் முதலிய பிற சமயச் சடங்குகளில் பங்கேற்றனர். இதைக்கண்ட அக்காலத்துப் புத்தம் புதிய இஸ்லாமியத் தமிழ் ‘அறிஞர்கள்’ முஸ்லிம்களுடைய இந்த வரம்பு கடந்த நடவடிக்கையிலிருந்து அவர்களைத் திசை திருப்புவது எப்படி என யோசித்தனர். இதன் விளைவாக மாற்றுச் சமயத்தவரைப் போல இவர்களும் சில சடங்குகளைத் தன்மயமாக்கிக் கொண்டு அவற்றுக்கு இஸ்லாமிய வேஷம் பு+சினர்.
மூர்த்தி உற்சவங்கள் தர்கா உரூஸ்களாயின; தேரோட்டம் சந்தனக் கூடாக - கப்பல் ஊர்வலமாக உருமாறியது. கொடியேற்றம், ஆனை குதிரையுடன் உண்டியல் ஊர்வலங்கள் ஆகியவை அப்படியே இங்கேயும் இடம் பெற்றன. சிலைகளுக்குச் செய்யும் பாலாபிஷேகம் கப்ருகளுக்கு பு+சும் அபிஷேகமாக ‘அட்ஜஸ்ட்’ செய்யப்பட்டது.
இந்தப் ‘போலச் செய்தல்’ (வுழ iஅவையவந) என்னும் மனித இயல்பு இஸ்லாமிய தமிழ் மக்களின் வாழ்க்கைத் துறைகள் பலவற்றுள்ளும் ஊடுருவியது போலவே இலக்கியத்துறையிலும் ஊடுருவலாயிற்று. அக்காலத்து முஸ்லிம் தமிழ்ப் புலவர்களும் இதிலிருந்து விதிவிலக்குப் பெறவில்லை.
எனவே புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தமிழ் முஸ்லிம்களின் புராண-இதிகாச தாகத்திற்கு இப்புலவர்களும் கற்பனை நீர் வார்த்து மாற்றுமத இலக்கியங்களைப் போல இயற்றத் தொடங்கினார்கள்.
இங்கு இன்னொரு போக்கையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்லாத்திற்கு ஆதாரமாக அமைந்த குர்ஆன், ஹதீஸ்களின் பொருளைத் தமிழில் மொழிபெயர்த்துப் புதிய தமிழ் முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டியது பற்றி யாருமே அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, திருக்குர்ஆனின் மொழியாகிய அரபி மொழியின் மீது அக்காலத் தமிழ் மக்களுக்கு ஒரு தெய்வீக பக்தி ஊட்டப்பட்டது. தெய்வத்தை எப்படி யாராலும் கண்ணால் காணவியலாதோ அதுபோல அரபிமொழியமைந்த குர்ஆன், ஹதீஸ்களின் பொருளையும் தமிழில் மொழிபெயர்க்கவோ, மொழிபெயர்ப்பைப் படித்துப் புரிந்து கொள்ளவோ இயலாது என்னும் மாயை நிலவிய காலம் அது. இன்னும் சொல்லப்போனால், தமிழ்மொழியானது தமிழர்களுடைய (‘தம்மளன்’ என்பது கொச்சையான பேச்சு வழக்கு) பாஷை;
அது காஃபிரானவனுடைய பாஷை;
அந்த பாஷையில் புனிதம் மிக்க அரபி குர்ஆனை மொழிபெயர்த்து எழுதுவது ஒரு மகாபாவமான காரியமாகும் எனவும் ஒரு நம்பிக்கை நிலவியிருந்தது. ஆகவே, குர்ஆன் ஹதீஸைக் கொண்டு மெய்யான இஸ்லாத்தைத் தமிழ் மக்களுக்கு அவர்கள் புரிந்து கொள்ளுகின்ற தாய்மொழியில் எடுத்துரைக்கும் வாய்ப்புப் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

இது தொடர்பாக இன்னொரு நிலையையும் நாம் காணமுடிகின்றது. தமிழ் மொழியில் தூய மார்க்கக் கருத்துக்களை எடுத்தெழுவதைத் தவறாகக் கருதிய அக்காலத்தில் அரபி மொழி வடிவத்தில் எதை எழுதினாலும் அதை உச்சிமேல் வைத்து மெச்சுகின்ற மனப்போக்கும் ஓங்கி வளர்ந்திருந்தது.

மக்களுடைய இந்த மனநிலையையும் நன்கு உணர்ந்து கொண்ட சிலர் தமிழ்ச் சொற்களையும் தொடர்களையும் அப்படியே அப்படியே அரபி எழுத்து வடிவத்தில் எழுதி வெளியிடானர். ‘அவன் வந்தான்’ என்பதையே “யுஎயn ஏயவொயn” என ஆங்கில எழுத்து வடிவத்தில் எப்படி எழுதுகிறோமோ இது போல் அரபி மொழி வடிவத்தில் தமிழை எழுதியமையால் ‘அரபுத் தமிழ்’ என ஒழு புதுநடை உருவெடுத்தது. இந்த அரபுத்தமிழ் நடையில் பல இலக்கியங்கள் எழுதப்பட்டன. இருந்தும் இந்த அரபுத் தமிழ் வடிவத்தில் கூட குர்ஆன், ஹதீஸ்களுக்குரிய மொழி பெயர்ப்புகள் வெளிவரவில்லை.
தமிழிலோ, அரபுத் தமிழிலோ குர்ஆனை மொழிபெயர்த்துவிடாத அளவுக்கு திருக்குர்ஆனின் மீது ஒரு எட்டாத உயர்தனி மதிப்பு உலவிய காரணத்தினால் குர்ஆன், ஹதீஸ் உண்மைகளைத் தமிழறிந்தோர் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் தமிழ் தெரிந்த முஸ்லிம்களுக்கு, அவர்கள் படித்துப் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு எதைக் கொடுப்பது? மாற்று மதங்களில் இருப்பதுபோல் புராணங்களையும் காவியங்களையுமாவது தமிழில் கொடுக்கலாமே என எண்ணினர் இஸ்லாமியப் புலவர்கள். இந்த இஸ்லாமியப் புலவர்கள் அரபி மொழியில் தேர்ச்சி பெற்றிருந்த தமிழகத்து ஆலிம்களை அணுகி இஸ்லாம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கினர். உமறுப்புலவர், ஆலிப்புலவர் ஆகியோர் முறையே சதக்கத்துல்லா அப்பா, காஸி மக்தூம் ஷேக் அலாவுத்தீன் ஆகியோரைச் சந்தித்து, தத்தம் நூல்களுக்கு உரை வாங்கியதாக அறிகிறோம்.

இப்புலவர்கள் இவ்வாறாக ‘உரை’ பெற்றதை அடிப்படையாக வைத்துக் கொண்டு, தமிழ் இலக்கிய மரபைப் பின்பற்றி இயற்கையும் (உண்மையும்) செயற்கையும் (பொய்யும்) கலந்த புராணங்களைப் படைக்கலாயினர்.
இவர்கள், படிப்பவர்களுக்குச் சுவையு+ட்டுவதற்காக உண்மைக்கு அப்பாற்பட்ட கற்பனைப் புனைவுகளையும் தத்தம் நூல்களில் பொருத்தமுற இணைத்துப் பாடினர். புலவர்கள் தங்களுடைய நூல்களில் பாடிய முரணான கருத்துக்கள் ஒருபுறமிருக்க, அந்த நூல்களையுப் பிற்காலத்தில் பதிப்பித்தவர்கள் முன்னுரை என்ற பெயரில் அந்தப் புலவர்களைப் பற்றி அவிழ்த்துவிட்ட புருடாக்கள் அதைவிட மேலாக மறுபுறம் துருத்திக் கொண்டு நின்றன.

உமறுப்புலவருக்கு வருவோம். உமறுப்புலவர் நபி (ஸல்) அவர்களின் வரலாற்றைக் காவியமாகப் பாட எண்ணி சதக்கத்துல்லா அப்பா அவர்களிடம் சென்று உரை (அது தொடர்பான செய்தி) கேட்டாராம். சதக்கதுல்லா அப்பா உமறுப்புலவரின் முஸ்லிமல்லாத தோற்றத்தைக் கண்டு அவரைப் புறக்கணித்துவிடவே உமறுப்புலவர் கவலையில் நொந்து உறங்கிக்கொண்டிருக்கும்போது, நபி (ஸல்) அவர்கள் புலவருடைய கனவில் தோன்றினார்களாம். “உமறே! நீர் கவலைப்படாதீர் சதக்கத்துல்லாவுடைய கனவில் தோன்றி நான் உம்மைப் பற்றிச் சொல்லியுள்ளேன். எனவே நீர் சதக்கத்துல்லாவை மீண்டும் சந்தித்து உரை வாங்கிக் கொண்டு எம் வரலாற்றைப் பாடுவீராக” என நபி (ஸல்) அவர்கள் உமறுப்புலவரின் கனவில் தோன்றிக் கூறினார்களாம்.

இதுபோல சதக்கத்துல்லா அப்பாவின் கனவிலும் நபி (ஸல்) அவர்கள் தோன்றி உமறுப் புலவருக்காக அப்பாவிடம் சிபாரிசு செய்தார்களாம். பின்னர்தான் சதக்கதுல்லா அப்பா உமறுப்புலவருக்கு உரை வழங்கினாராம். நபி (ஸல்) அவர்களைச் சம்பந்தப்படுத்தி சீறாப்புராணம் தொடர்பாகக் கட்டப்பட்ட இந்தக் கதை பலரும் அறிந்ததே.
வேறு சிலர் அளக்கும் கதையானது இதையும் தாண்டி இன்னும் கொஞ்சம் விரிந்து செல்கிறது. சதக்கத்துல்லா அப்பாவிடம் உரை வாங்கிய உமறுப்புலவர் மேலும் செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காகப் பரங்கிப்பேட்டை (மஹ்மூது பந்த)க்கு வருகிறார். அங்குள்ள காஸி மஹ்மூது முஹம்மது நெய்னா லெப்பையைச் சந்தித்து சீறாப்புராணத்துக்கு தேவையான செய்திகளை கேட்க, நெய்னா லெப்பை உமறுவின் தோற்றத்தைக் கண்டு வெகுண்டெழுந்து அவருக்கு உரை கொடுக்க மறுத்து விடுகிறாராம். இதனால் உள்ளம் உடைந்த உமறுப்புலவர் நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகத்தின் பாதமடைந்து, “ஷாகுல் ஹமீது நாயகமே! நான் பாடவிருக்கும், சீறாப்புராணத்துக்கு நீங்கள் தான் தலைப்பெடுத்துத் தர வேண்டும் இல்லையேல் விடிந்ததும் நான் செத்து மடிந்து விடுவேன்” எனச் சபதமுரைத்து அங்கேயே தூங்கி விட்டாராம். அன்றிரவே நாகூர் ஆண்டவர்? “திருவினுந் திருவாய், பொருளினும் பொருளாய்” எனத் தலைப்பெடுத்துக் கொடுத்த அசரீரி ஒலி கேட்டு உமறுப்புலவர் ஆனந்தக் கடலில் மூழ்கி அதைத் தொடர்ந்து மடை திறந்த வௌ;ளம்போல் பாடலானாராம். இதன் பின்னர் உமறு, நெய்னா லெப்பை, “நபி பெருமானார் அவர்களின் சரித்திரத்தைப் புராணமாய்ச் செய்தற்கு ஒலிகள் பிரான் அவர்களுக்குப் பொருத்தமேயாகலின் நமக்கும் மிக்கப் பொருத்தமே” எனக்கூறி, புலவருக்கு உரை கொடுத்தாராம். இந்தக் கதை காதிரசனா மரைக்காயரின் ‘சீறா நபியவதாரப் படலம்’ (காதிரசனா மரைக்காயர், சீறா நபியவதாரப் படலம், சென்னை, முதற்பதிப்பு ஜுலை 1890, முகவுரை, பக்கம் 5-8) என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

இஸ்லாத்துக்கு முரணான போக்கினைக் கொண்டு இயற்றப்பட்ட இலக்கியங்கள் ஒரு புறமாகவும்; அந்த இலக்கியங்களின் தோற்றத்திற்குப் புனிதப் பின்னணிகளைக் கதையாகக் கட்டி உருவாக்கிய தன்மை மறுபுறமாகவும் - இப்படியாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களின் உள்ளும் புறமும் காணப்படக்கூடிய முரண்கள் ஏராளம்… ஏராளம்!
தன்னுடைய வரலாற்றைப் பாடுவதற்காக, உமறுப்புலவருடைய கனவில் நபி (ஸல்) அவர்கள் தோன்றி அதனை ஆமோதித்து ஆசி வழங்கினார்களாம். நபி (ஸல்) அவர்கள் உண்மையாகவே ஆசி வழங்கியிருப்பார்களானால், அத்தகைய கவிதைகளில் ஒருபோதும் பொய்யும் கற்பனையும் இடம் பெறவே இயலாது.

ஆனால் உமறுவின் சீறாப்புராணத்தில் பொய்யும் புனைவுகளும் கூடிய இஸ்லாத்துக்கு முரணான செய்திகள் மலிந்து காணப்படுகின்றன தமிழ்க்காப்பிய மரபுக்கேற்ப நாட்டுப்படலம், நகரப்படலம் போன்ற பகுதிகளை அமைத்துக் கொண்டு புலவர் கற்பனை நயம் படப் பாடிச் செல்லுகிறார் என இவற்றை ஒருவாறு ஒத்துக் கொள்வர் சிலர். இதுபோன்ற காப்பிய அலங்காரங்களை நீக்கி விட்டு நபி (ஸல்) அவர்களுடைய ‘பதிவு செய்யப்பட்ட’ வரலாற்றைக் கூறும் பகுதிகளுக்கு வருவோம். மெய்யான இந்த வரலாற்றைப் பாடும் போது கூட புலவருடைய பொய்யான கற்பனை எந்த அளவுக்கு விபரீதமாகச் செல்லுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
பெருமானாருடைய பிறப்பைப் பாடுவதிலிருந்து காப்பியம் நெடுகிலும் இந்த விபரீதக் கற்பனைகள் ஆங்காங்கே வீங்கிப்புடைத்துக் கொண்டு நிற்கின்றன நபி (ஸல்) அவர்கள் பிறந்தமையை ‘நபியவதாரப்படலம்’ என்னும் பகுதியில் பாடுகிறார் உமறுப்புலவர். அன்னை ஆமினா அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பெற்றெடுத்த போது என்ன நிகழ்ந்தது என்பதை விளக்குகின்றது பின்வரும் இப்பாடல்:
பானலங் கடந்து சேலெனப் பிறழ்ந்து
பரந்து செவ் வரிக்கொடி யோடி
மான்மருள் விழியா ராமினா விருந்த
வளமினைத் திசையினை நோக்கி
நானிலம் புகலுங் ககுபத்துல்லாவி
னாலுமூ லையுமொரு நெறியாய்த்
தூநறை கமழ வொளிதிகழ் தரவே
சுஜுதுசெய் தெழுந்தன வன்றே
(நபியவதாரப் படலம், பாடல் 105)

நபி (ஸல்) அவர்களைப் பெற்றெடுத்த அன்னை ஆமினா இருந்த வீட்டை நோக்கி நானிலம் புகலும் கஃபதுல்லாஹ்வின் நாலு மூலையிலும் ஒரு சேர சுஜுது செய்து எழுந்தனவாம்.

அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சுஜுது செய்வதற்காக இவ்வுலகில் முதன் முதலில் நிறுவப்பட்ட இறைவனுடைய வீடே கஃபதுல்லாஹ் இத்தகைய உயர் தனிச் சிறப்புகளையுடைய கஃபதுல்லாஹ்வானது நபி (ஸல்) அவர்கள் பிறந்தவுடன் ஆமினாவுடைய வீட்டை நோக்கி சுஜுது செய்து வணங்கியது எனப் புலவர் பாடுகின்றார்.
சீறாப்புராணத்தை மட்டுமே படித்து நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய முனைகின்ற ஒருவர் இதனையும் உண்மைச் சம்பவமாகக் கருதிக் கொள்ள மாட்டாரா? இவ்வாறு நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையோடு நேரடியாக முரண்படுகின்ற கவிதை வரிகள் இந்நூல் அனேகம் உள்ளன.
கஃபதுல்லாஹ் இருக்கும் திசையை நோக்கி உலக மாந்தர் அனைவரும் சுஜுது செய்ய வேண்டியது கடமையாயிருக்க, உமறுப்புலவரோ ஆமினாவுடைய வீடு இருந்த திசையை நோக்கி கஃபதுல்லாஹ்வே சுஜுது செய்தது எனக் கற்பனை செய்கிறார்.
புலவருடைய கற்பனைக் கரங்கள் மேலும் நீண்டு செல்லுகின்றன. ஆமினா அன்னையின் வீட்டை நோக்கி சுஜுது செய்த கஃபதுல்லாஹ் வாய்திறந்து பின்வருமாறு கூறியதாம்.
குறைபடா வடிவும் பெருமையும் பெற்ற
கோற்றவ னென்றனை யின்றே
நிறைதரப் புனித மாக்கினா னென்ன
நிகழ்த்திய தொருமொழி யன்றே
(நபியவதாரப் படலம், பாடல் 105)

“பெருமானாரைப் பெற்றெடுத்த ஆமினாவின் வீட்டை நோக்கி சுஜுது செய்த இன்று தான் இறைவன் என்னைப் புனிதமாக்கினான்” என கஃபதுல்லாஹ் வாய்திறந்து ஓதியதாம்.
‘கஃபா’ என்னும் சொல், “புகழ் பெற்றுச் சிறந்துள்ளது” என்னும் கருத்துக் கொண்டுள்ள மூலச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். “புனித ஆலயமாகிய கஃபாவை அல்லாஹ் ‘கியாமன் லின்னாஸ்’ ஆக - ஜனங்களுக்கு ஆதாரஸ்தலமாக - நிலைப்பாடாக - அபயமளிக்கக்கூடியதாக - ஆக்கியிருக்கிறான்.” (குர்ஆன் 5:97)

“மனிதர்களுக்கு அபயமளிக்கக்கூடிய ஸ்தலமாக கஃபாவை நான் ஆக்கியிருக்கிறேன்” என அல்லாஹ் சொல்லுகின்றான். ஆனால் கஃபாவோ, தனக்கு அபயம் தேடக்கூடிய இடமாக ஆமினா அவர்களுடைய வீட்டை ஆக்கிக் கொண்டு, அந்த வீடிருந்த திசை நோக்கி சுஜுது செய்ததாகக் பாடுகிறார் உமறுப்புலவர்.
கஃபா என்றாலே சிறப்புடையது எனப் பொருளிருக்க, நபி (ஸல்) அவர்கள் பிறந்த அன்றுதான் கஃபா சிறப்பு பெற்றது என்பதாகவும் முரண்படக் கவிமை இயற்றியுள்ளார் புலவர்.

(மனிதர்களாகிய) அவர்கள் (கஃபாவாகிய) இவ்வீட்டின் இரட்சகனை வணங்குவார்களாக. (குர்ஆன் 106:03)
என இறைமறை இயம்புகிறது. மனிதர்கள் வாழும் வீட்டை நோக்கி இரட்சகனுடைய வீடாகிய கஃபா சுஜுது செய்ததாகப் பிதற்றுகிறது சீறாப்புராணம்.
இவ்வாறு அல்லாஹ்வுடைய வீடு அவனுடைய தூதருடைய வீட்டுக்கு சுஜுது செய்துப் புனிதமைந்ததாகப் பாடியுள்ளதன் மூலம் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் வரம்பு கடந்து பொய்யுரைத்துள்ளார் சீறாப்புலவர்.
பெருமானாரின் புகழை நிமிர்த்திப்பாடுவதாகக் கருதிக் கொண்டு அல்லாஹ்வின் கஃபாவிற்குத் தலைகுனிவை உண்டாக்குகின்ற உமறுடைய இந்த அடாத கற்பனையை அல்லாஹ் எங்ஙனம் சகித்துக் கொள்ளுவான்? அவனுடைய அடியாரும் தூதருமாகிய அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அதனை எப்படி அங்கீகரித்துக் கொள்வார்கள்?

அல்லாஹ்வின் மீது பொய்யுரைப்பவனை விட அநியாயக்காரன் வேறு யார் இருக்க முடியும் என அடுக்கிக் கூறுகிறது அருமறை குர்ஆன்.
எவர் என் மீது வேண்டுமென்று தெரிந்தே பொய் சொன்னாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகில் தேடிக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அபு+ஹுரைரா (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம் அபு+தாவு+த், நஸயீ.
எனக் கடுமையாக எச்சரிக்கின்றார்கள் நபி (ஸல்) அவர்கள். இப்படியிருக்க இந்தச் சீறாப்புராணத்துக்காரருடைய கனவில் நபி (ஸல்) அவர்கள் தோன்றி அவருடைய கற்பனை வண்ட வாளங்களைக் காப்பியத் தண்டவாளமேற்றுவதற்குப் பச்சைக் கொடி காட்டினார்கள் எனக் கொள்ளுவது எங்ஙனம் பொருந்தும்?” (ஹஸ்;ஸான்-1999 ப:21-31)

இஸ்லாமும் இலக்கியமும்
எழுதுகோல் இல்லாத 1422 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தின் மகிமை பற்றிப் பேசியதோடு, இலக்கியப் புருஷர்களால் என்றென்றும் வழங்க, வரைய முடியாத முக்கியத்துவத்தை இஸ்லாம் இலக்கியத்துக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளது. இதனால், அன்று ஹஸ்ஸான் (ரழி) போன்ற பெரும் பெரும் இஸ்லாமிய இலக்கியவாதிகள் உருவானார்கள்.

இஸ்லாம், வணக்கத் தலங்களில் மட்டுமன்றி, மனித வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் அவனை நெறிப்படுத்துகிறது. ஆன்மிகம், அரசியல், கல்வி, விஞ்ஞானம், பொருளாதாரம், இலக்கியம், இல்லறம், விளையாட்டு என்ற எல்லாத் தளங்களிலும் பரந்துபட்ட அடிப்படைகளைக் கொண்ட தெளிவான, வலுவான வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
எனினும், இஸ்லாத்தைப் பற்றிய புரிதலில் தவறிழைத்துக் கொண்டவர்களைப் போலவே, இஸ்லாமிய இலக்கியப் பார்வை குறித்த புரிதலிலும் தவறிழைத்து விட்டனர். இஸ்லாமிய இலக்கியத்தின் களம் விரிந்து பரந்து பட்ட அளவிற்கு இலக்கியம் குறித்த இஸ்லாமியர்களின் பார்வையோ விரியவில்லை. இஸ்லாமியப் பல்கலைக்கழகங்களில், மத்ரஸாக்களில், இஸ்லாமிய கற்கைத் துறை சார்ந்த கணிசமான தொகையினரிடத்தில் கூட அது குறித்த விரிந்த, ஆழமான பார்வை இல்லை என துணிந்து கூறலாம்.
இலக்கிய வடிவத்தினூடாக பல்வேறு கொள்கைகள், இஸ்லாமியர்களின் சிந்தனையில் ஊடுருவும் இன்றைய காலகட்டத்தில் கூட, அதைத் தடுத்துவிட, இஸ்லாமிய மதிப்பீடுகளின் அடிப்படையிலான இலக்கியங்கள் உருவாகவில்லை. மாறாக, சில தனி மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக, ஷிர்க் கலந்த கவிதைகளுக்கு பொது நிதியில் உதவி புரிகின்றமை வேதனைக்கும் விசனத்திற்குமுரிய விஷயமாகும். அல்லாஹ்வின் வார்த்தைகளையும், அவனது இறுதித் தூதரின் பொன்மொழிகளையும் தாங்கி வரும் தூய்மையான நூல்களுக்கு இல்லாத பெறுமானம், சீழ் நிறைந்த சிந்தனையாளர்களின் கவிதை நூல்களுக்குள்ளமை சத்தியத்தை நேசிக்கும் எந்த ஈமானிய உள்ளத்தையும் வேதனைப்படுத்தாமல் இருக்க முடியாது. அத்தகைய அயோக்கியத் தனங்களை எதிர்த்தே நமது எழுதுகோல்கள் சீறிப் பாய்கின்றன. இதனைப் பொறுக்க முடியாத வக்கிர புத்தி உள்ளங்கள் வன்முறை வழிகளை திரைமறைவில் தூண்டிவிடுகின்றன.

இருளைச் சகித்துக் கொண்டிருப்பதை விட ஒளி விளக்கொன்றை சுயமாக ஏற்றிக் கொள்ள வேண்டிய காலம் கனிந்து விட்டது. சத்தியத்திற்காக பல்துறைச் சமர் புரியவும் உண்மைக்கு உயிர் கொடுக்கவும் ஆர்த்தெழ வேண்டிய தகுந்த தருணம் இது. நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை பிறர் தீர்மானிக்காது, அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் முற்று முழுதாகத் தீர்மானிக்க வேண்டும்.

அறபு நாட்டுக் கரண்சிக்காக சுய மரியாதையை அடகுவைத்த கனவுலகத் தலைவர்களால் நிஜத்தை உணரவே முடியாது. முஸ்லிம்களிடையே ஆத்மீக உணர்வு அருகிச் சென்று, பள்ளிகளை விட்டு அவர்கள் அப்புறமாக, அவர்களே அரைவாசிக் காரணம். இன்று குறுகிய உணர்வுகளின் அடிப்படையில் முஸ்லிம்களிடையே பிரிவுகள் தோற்றம் பெற்று விட்டன. கருத்து வேறுபாடுகளின் போது, சுய கௌரவமும், தான் தோன்றித் தனமும், மனோ இச்சைகளுமே கடவுளாகி விடுகின்றன. எனவே, நியாயத்தை உணர முடியாது, மனசு மரித்துப் போனவர்களின் பின்னால் நின்று எதையும் செயல்படுத்திக் கொள்ள முடியாது. இதை, இளைய தலைமுறை நன்கு புரிந்து கொண்டு செயல்பட முன்வர வேண்டும்.

தற்போதைய நவீன இஸ்லாமிய சிந்தனை வற்றிவிடக் கூடாது. உதய காலத்தை நமது இளைஞர்கள் இரவாக்கி விடக் கூடாது. இரவில் விழுந்த குழியில், பகலிலும் விழுந்து விடக் கூடாது. பழம்பெருமை பேசிப் பேசியே காலங்கடத்துவதும் முழுக்க முழுக்க பணம் சம்பாதிக்கும் சடத்துவ இலக்கும், அசத்தியத்தோடு சமரசம் செய்து கொண்டு எப்படியும் வாழலாம் என்பதுமே நமது சமூகத்தின் மாறா விதியாகிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.
இஸ்லாமிய இலக்கியவாதி நிஜ உலகை மறக்க மாட்டான். சத்தியத்தோடுள்ள உறவைத் துண்டித்துக் கொள்ள மாட்டான். ஆனால், இன்று நம்மில் பலர் போலிகளை உலாவவிடும் போலிகளாகவே மாறி, அழைப்புப் பணிக்குரிய பலமான பாலத்தைப் பயன்படுத்தாமல், இலக்கியத்திற்கும் இஸ்லாமியர்களுக்கு மிடையில் பெரும் சுவரொன்றை எழுப்பிக் கொண்டுள்ளார்கள். இந்தச் சுவர் தகர்க்கப்பட்டு, இலக்கிய உணர்வுகளை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில், விரிந்தளவில் மதிப்பீடு செய்தல் வேண்டும். அதனால், முஸ்லிம்களின் அழகியல் உணர்வும் சத்தியத்தாகமும் சரியான செல் நெறியான நிழலில் விரிவுபடல் வேண்டும்.
இஸ்லாமிய சிந்தனையில் ஆழ்ந்து, ஆய்ந்து கற்று, உள்ளத்தில் அதனை உணர்வுப் பு+ர்வமாக ஏற்ற இஸ்லாமியக் கற்கைத் துறை சார்ந்தவர்களால்தான் இலக்கியத்தை முழுமையாக இஸ்லாமிய மயப்படுத்த முடியும். மனித வாழ்வையும், நிகழ்வையும் வரலாற்றையும் இஸ்லாமிய உள்ளத்தோடு, அவர்களால் மட்டுமே முழுமையாகப் பார்க்க முடியும். எனினும், இன்றைய இலக்கியப் பதிவுகளில் இவர்களின் பங்கு எந்தளவில் உள்ளது என்பதை உங்களிடமே விடுகிறோம். இதனால்தான் பத்திரிகைகளில், அல்லது சில கலை இலக்கிய இதழ்களில் தலை காட்டும் இஸ்லாமிய எழுத்தாளர்கள்(?) சிலர் இப்படித் தாம் என்ற வட்டத்துக்குள் நுழையாமலோ, அல்லது வட்டத்தையும் எல்லைக் கோடுகளையும் தாண்டிய வரம்பு மீறிய பாதையிலோ இலக்கியப் பணி செய்கிறார்கள்.

இஸ்லாமிய இலக்கியம் என்று எழுதப்படும் போது, மனிதனின் அழகனுபவத்தைத் தடுத்து, புன்னகையைத் தடுத்து, மனித மகிழ்ச்சிக்குத் தடை போடும் மத வாழ்க்கைக்கு அழைப்பு விடுவதாக சமயச் சார்பற்ற புத்தி ஜீவிகள்(?) விசனப்படுவதுண்டு. சமயச் சார்பற்றோர், எழுத்தாளர்களுக்கு மதம் என்ற முகவரி தேவையில்லை என்ற வரட்டு வாதத்தையும் முன் வைப்பர்.

எனினும், எழுத்தாளனுக்கும், எழுத்துக்கும் ஒரு அழகான அளவு கோலைக் கொடுத்து, இஸ்லாம் நெறிப்படுத்துகிறது. முஸ்லிம்கள் எழுதுவதெல்லாம் இஸ்லாமிய இலக்கியங்களாகிவிடமாட்டாது. இங்கே, அவர்கள் எல்லாம் இஸ்லாமிய இலக்கிய வாதி என்று அடைமொழி பெற்றிடவும் முடியாது. எழுதுபவரின் இலக்கு, பாடுபொருள், அவரது ஒழுக்கவியல் என்பன போன்ற இன்னோரன்ன வரைமுறைகளை நிர்ணயிப்பதன் மூலமே, அது உள்வாங்கப்படும்.

வீண் கற்பனைகளுக்கோ, தனிமனித புகழ்பாட்டிற்கோ, வழிபாட்டிற்கோ, ஆபாச களியாட்ட லீலைகளுக்கோ வன்முறைத் தூண்டல்களுக்கோ, வெறியாட்டங்களுக்கோ, ஒரு சமூகத்தின் மீது அபாண்டமான போலிச் சித்திரத்தை புனைந்து கூறவோ, தாக்குதலுக்கோ, சொல்லம்புகளால் குத்திக் குதறுவதற்கோ, கிழிப்பதற்கோ இஸ்லாத்தில் அனுமதியில்லை.

“கவிதைக்குப் பொய்யழகு” என வைரமுத்து கூறுவது கவிஞர்களின் நிலையை எவ்வளவு தெளிவாக உணர்த்தி விடுகிறது. எனவே, நபியவர்கள் இத்தகைய கவிஞர்களை வன்மையாகக் கண்டித்துள்ளார்கள்.

“ஒருவரது வயிற்றில் கவிதை நிரம்பியிருப்பதை விடச் சீழ் நிரம்பியிருப்பது சிறந்ததாகும்.”
அறிவிப்பவர்: அபு+ஹுரைரா (ரழி)
நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபு+தாவு+த்.
காம உணர்வுகளைத் தூண்டக் கூடிய விரசமான கவிதைகளை, பாடல்களை உள்ளத்தில் மனனமிட்டு வைப்பதை விட, சீழ் சிறந்தது தான் என்பதை நபியவர்களின் பொன்மொழி உணர்த்துகிறது. கீழான வார்த்தைகளில் கவிதை-பாடல் இயற்றுபவர்கள் ஷைத்தான்கள் எனவும் எச்சரித்துள்ளார்கள்.

“அர்ஜ் எனுமிடத்தில் ஒரு கவிஞன் கவிதை புனைந்து கொண்டிருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இந்த ஷைத்தானைப் பிடியுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபு+ஸயீத் (ரழி)
நூல்: முஸ்லிம்.

நபியவர்கள் பொய், மது, மாது, ஆபாசம் என்பன பற்றிய விரசமான வர்ணனைகள் கொண்ட கவிதைகளைத்தான் கண்டித்துள்ளார்கள். நல்ல கவிதைகளை அனுமதித்துள்ளார்கள்.
“நிச்சியமாக கவிதையில் தத்துவம் இருக்கிறது.”
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வு+த் (ரழி)
நூல்: திர்மிதி.

“கவிஞர்கள் கூறியதில் மிக உண்மையானது” அல்லாஹ்வைத் தவிர அனைத்தும் அழியக் கூடியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபு+ஹுரைரா (ரழி)
நூல்: புகாரி, முஸ்லிம்.

இஸ்லாம் வரம்புக்குட்பட்ட, எல்லைக் கோடுகளைத் தாண்டாத கவிதைகளைத் தடுக்கவில்லை என்பது புலனாகிறது. இஸ்லாமிய இலக்கியம், மனித உணர்வுகளின் வெளிப்பாட்டுக்கு மிக விரிந்த அளவில் களம் அமைத்துக் கொடுக்கின்றது. ஏனெனில், உயிர்த்தன்மையுள்ள இலக்கியம் உணர்ச்சியுடையதாக இருத்தல் அவசியம். எனவே இஸ்லாமிய இலக்கியம் என்பது தத்துவரீதியாக இஸ்லாமியக் கோட்பாடுகளை விளக்கும் இலக்கியமன்று. அல்லது அது சில உபதேசங்கள், அறிவுரைகள், போதனைகளின் கூட்டுக் கலவையன்று. அது, அவற்றை விட பன்மடங்கு விரிந்த பொருட்களை உள்ளடக்குகின்றது. இந்த முழுப் பிரபஞ்சத்தையும் அதிலுள்ள பொருட்களையும் இஸ்லாமியக் கோட்பாட்டின் நிலைக்கலனில், அழகுணர்ச்சியின் அடிப்படையில் நோக்கி விளக்குவதாகும். இஸ்லாமிய இலக்கியம் அதன் கோட்பாடுகள் உண்மை நிகழ்ச்சிகள், அதனோடு தொடர்புடைய தனி மனிதர்களையும் தழுவி நிற்பதோடு, முழுப் பிரபஞ்சத்தையும் அது உள்ளடக்கி நிற்கும்.
இந்த வகையில், தென்றலில் அசைந்தாடும் மலர்கள், காலையிளங்கதிரவன், வானத்தில் கண்சிமிட்டும் தாரகைகள், தெளிந்த நீரோடைகள், நீர் வீழ்ச்சிகள், வசந்தத்தின் வரவு, மனிதனின் வாழ்க்கைப் போராட்டங்கள், ஒழுக்கப் பெறுமானங்கள், அரசியல் எழுச்சி, வீழ்ச்சிகள், சமூகப்புரட்சிகள் ஆகிய அனைத்தும் இஸ்லாமிய இலக்கியப் பார்வைக்குள் கருப்பொருளாக அமையலாம்.

“ஒருவர், நபி (ஸல்) அவர்களை மிக உன்னத உயர்ந்த பண்புகளைக் கொண்ட ஒரு சத்தியப் புருஷர் என வர்ணித்து, விளக்குவது இஸ்லாமிய இலக்கியமன்று. ஆனால், அவர் நபி (ஸல்) அவர்களை இறைவனின் பேரொளிச் சுடரின் ஓர் ஒளிப்பிழம்பாகவும், அந்த ஒளிப்பிழம்பின் வெளிச்சம் உலகின் நான்கு மூலைகளையும் ஒளிமயமாக்கியதாகவும் நோக்கி விளக்கினால், இந்த விளக்கமும், வர்ணனையும் இஸ்லாமிய இலக்கியமாகும். அதே போன்று, பத்ர் யுத்தத்தை உலகில் நன்மைக்கும் தீமைக்குமிடையில் நடந்த போராட்டமாகவும், அப்போரில் சத்தியத்திற்காக போராடியோர், அசத்தியத்திற்காகப் போராடியோரைத் தமது இறை நம்பிக்கையின் சக்தியால் தோற்கடித்தனர் எனவும் விளக்கினால், அது இஸ்லாமிய இலக்கியமன்று. ஆனால், அவர் ஒளியை இருள் விரட்டுவதாகவும், ஒளிக்கும் இருளுக்குமிடையில் நடந்த போரில், இருளை ஒளி வெற்றி கொண்டதாகவும் விளக்கும் பொழுது, அது இஸ்லாமிய இலக்கியமாகிறது. எனவே, இலக்கியம் எந்தப் பொருளையும் கருவாகக் கொள்ளலாம். ஆனால், அப்பொருளைக் கையாளும் வகையையும் முறையையும் பொறுத்தே, அது இலக்கியம் என்ற அந்தஸ்த்தையும் அடைகிறது.”

(மின்ஹாஜ் அல்பன்னுல் இஸ்லாமி (1980) பக்கம்:130)
இந்த வகையில், இஸ்லாமிய இலக்கியத்தின் களம் மிகவும் விரிந்தது என்பதை சமயச் சார்பற்றோரும், இஸ்லாமிய இலக்கியக் கண்ணோட்டம் குறித்து விசனப்படுவோரும் மற்றவர்களும் புரிந்து கொள்ளல் வேண்டும்.
அனைத்தையும் விட அல்லாஹ்வின் தூதரை அன்பு கொள்வது, ஈமானின் பு+ரணத்துவ வெளிப்பாடு. இந்த நிலை உபதேசங்களாலும், வகுப்புக்களாலும், பிரதேசங்களாலும் சாத்தியமாக்கலாம். ஆனால், அதைவிட வேகமாகவும் ஆழமாகவும் ஒரு நாவல், கவிதை, கதை என்பன அதனை ஏற்படுத்திவிட முடியும். அது மாத்திரமின்றி, இறை நம்பிக்கை, மறுமை நம்பிக்கை, ஷஹாதத் வேட்கை என்று இஸ்லாமிய வாழ்வின் பல்வேறு அம்சங்கள்… இவற்றையெல்லாம் இலக்கியத்தினூடாக மிகுந்த வெற்றிகரமாகச் சாதிக்க முடியும். எனவே, மனித வாழ்வின் பல்வேறு பகுதிகள் பற்றிய இஸ்லாமியத் தீர்வுகளையும் சிந்தனைகளையும் ஆழ்ந்து படித்தவனே சமூக ஏற்றத்தாழ்வு, சாக்கடையாகிப் போய்விட்ட அரசியல் நிலை போன்றவற்றைக் கருப்பொருளாகக் கொண்ட இஸ்லாமியம் நிறைந்த ஆக்கங்கள் ஆக்க முடியும்.
உண்மையில் இஸ்லாம் இலக்கியத்திற்கு ஓர் ஆழமான அழுத்தத்தை வழங்குகிறது. அதன் அழகியல் உணர்வை அசிங்கப் படுத்துவதைக் கண்டிக்கிறது. உண்மையான கலை ஈடுபாடு கொண்ட இஸ்லாமியப் படைப்பாளி, தன் படைப்பினூடாக அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்ய விழைகிறான். உலக நடப்புகளில் தான் பெற்ற தரிசனங்களை இஸ்லாத்தின் நிழலில் ஆத்ம விசாரனைக்கு உட்படுத்தி, ஆத்ம விசாரம் செய்து, தனக்கே லாவகமான வடிவமொன்றில் இலக்கியமாக வெளிப்படுத்த முனைகிறான். எனினும், நம்மில் பலர் உள்ளங்களை ஊடறுத்து, வேகமாகச் சென்றடைந்து, தாக்கம் ஏற்படுத்தும் இலக்கிய வரத்தினை அற்பமாக்கி வருவது கவலைக்குரிய விஷயமாகும்.
இஸ்லாமிய இலக்கிய வரத்தினை மலினப்படுத்தும் குறிக்கோளற்ற கவிஞர்களை அல்லாஹ்வே கண்டிக்கிறான்.

“கவிஞர்களை வழிகெட்டவர்கள் தாம் பின்பற்றுவார்கள். நிச்சியமாக, அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் திரிகின்றனர். நிச்சியமாக அவர்கள் (செய்யாததைக்) கூறுகின்றனர்.” (அல்குர்ஆன் 26:224-226)

(இக்கட்டுரை ஆசிரியரின் மேலும் பல கட்டுரைகளை படிப்பதற்கு
www.kadayanallur aqsa.com எனும் பகுதிக்குள் பிரவேசியுங்கள்).

Short Bursts of High Intensity Exercise More Effective, Study Finds

Need changes - taste 19

Short Bursts of High Intensity Exercise More Effective, Study Finds

Filed under: Fitness


Less really can be more when it comes to exercise, scientists have discovered.


A new study found that about 20 minutes of high-interval training provided the same benefits of longer exercise sessions that focused on endurance training, and that the body can get as much benefit from a short but intensive burst of exercise than it can from ten hours of moderate training. [1]

This means that exercising does not have to be time consuming and can involve much less physical effort.
Study Details


Scientists from McMaster University in Canada studied the benefits of "high intensity interval training", known as HIT. This technique involves running or cycling at almost maximum effort for a minute and then resting for a minute before repeating the process around 10 times.

HIT is "a time-efficient but safe alternative to traditional types of moderate long term exercise," they discovered.
In experiments, volunteers rode an exercise bike in stints lasting just 60 seconds while peddling hard enough to get close to their maximum heart rate.
Tests afterwards showed that their muscles had improved as much as if they had been involved in endurance training.


The study authors said it was not clear why HIT was so effective but it appeared to "stimulate many of the same cellular pathways" as traditional training regimes.


These men received the same benefits as they would have had they exercised at a lower intensity for one hour or more, leading researchers to say interval training "may represent an alternative to endurance training to improve metabolic health and reduce the risk for chronic diseases."
The findings also meant that a lack of free time was no longer an excuse for refusing to exercise, the author said.


Burn More Fat With Less Effort


Several studies have confirmed that exercising in shorter bursts with rest periods in between burns more fat than exercising continuously for an entire session. This has been shown to be the case even when the session is not done at an extremely high intensity.


In one study, those who cycled for 40 minutes, alternating four-minute bursts at 90 percent effort with two minutes of rest, improved their cardiovascular fitness by 13 percent, and were able to burn 36 percent more fat than during a later hour-long moderate cycling session. [2]


Another study found that you can burn more fat exercising for just 20 minutes. [3]


In the trial, women either exercised for 20 minutes, alternating 8 seconds of sprinting on a bike with 12 seconds of exercising lightly, or exercised at a regular pace for 40 minutes. After exercising three times a week for 15 weeks, those who did the 20-minute, alternating routine lost three times as much fat as the other women.
The researchers believe this type of exercise works because it produces a unique metabolic response. Sprinting at intervals produces high levels of chemical compounds called catecholamines, which allow more fat to be burned from under your skin and within your muscles. The resulting increase in fat oxidation is thought to drive the increased weight loss.


Another benefit of interval training is that it cuts down on the amount of time needed to exercise, so an hour-long cardiovascular exercise can be replaced by 20-40 minutes of high-intensity interval training.


Exercise For Optimal Health


Exercise is one of the most powerful ways to gain optimal health. Regular physical activity helps to helps to combat the ongoing damage done to cells, tissues and organs that underlies many chronic conditions, and also boosts the immune system, helping to fight off colds and flu. Exercise also keeps insulin levels down, and elevated insulin levels are one of the primary reasons for many illnesses and for weight gain.

**************************************************************************
Research Paper Details:


[1] Little JP, et al. A practical model of low-volume high-intensity interval training induces mitochondrial biogenesis in human skeletal muscle: potential mechanisms. March 15, 2010 The Journal of Physiology, 588, 1011-1022.


[2] Talanian JL, et al. Two weeks of high-intensity aerobic interval training increases the capacity for fat oxidation during exercise in women. J Appl Physiol 102: 1439-1447, 2007.


[3] Trapp G, Chisholm DJ, Boutcher SH. Metabolic response of trained and untrained women during high-intensity intermittent cycle exercise. Am J Physiol Regul Integr Comp Physiol 293: R2370 R2375, 2007.


for more get insite: www.healthymuslim.com

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

போர்முனையிலிருந்துகொண்டு .........

போர்முனையிலிருந்து கொண்டு உங்களுடன் தொடர்புகொள்வது -இஸ்ஸதீன் றிழ்வான்,


அன்பின் கல்விமான்களே, கடமையுணர்வு படைத்தவர்களே, அனுபவசாலிகளே, மார்க்க அறிஜர்களே,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுலில்லாஹி வபரஹாதுஹு,

இன்று அனைவருடைய கையிலும் Internet, Magazines, News papers, Radio and TV channels,  என்று பலவகையான ஆயுதங்களை தாங்கிய ஆயுத தாரிகளாகவே இன்று அனைவரும் உளாவருகின்றார்கள்.

குறிப்பாக எல்லோருக்கும் மிக அதிகமாக கிடைக்கும் பலமான ஒன்றுதான் internet

இதற்கு முஸ்லிம், இந்து அல்லது கிறிஸ்தவர்கள் என்றில்லாமல் சிறியவர் பெரியவர் அல்லது படித்தவர் படிக்காதவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரும் இந்த ஆயுதங்களில் ஒன்றை அல்லது அனைத்தையும் சுமந்திருக்கின்றார்கள்.

ஆனால் அண்மைக்காலமாக நான் கண்ட அனுபவத்தில் முஸ்லிம்கள் தாங்கள் வைத்திருக்கும் Internet, Magazines, News papers,  Radio and Tv channels ஆயுதங்களை சரியாக, உரிய நேரத்தில் உரிய விதத்தில் பயன்படுத்த தவரிவிடுகின்றார்கள்.


அன்பின் நண்பர்களே !!

சில இணையத்தள பக்கங்களுக்குள் நுழைந்தால் கவலையாக இருக்கின்றது.

முஸ்லிம்களையும் இஸ்லாமிய சட்டங்களையும் கொச்சைப்படுத்துவதிலும் முக்கியமான அகீதாக்களில் சந்தேகம் ஏற்படுத்தும் விதத்தில் முஸ்லிம் பெயர்தாங்கிகளும் முஸ்லிமல்லாதவர்களும் தங்களுடைய இந்த இணையத்தளம் என்கின்ற ஆயுத வசதிகளை ப்பயன்படுத்தி தாக்குவதை என்னால் பார்க்கமுடிகின்றது.

நாம் facebook, skype, yahoo massager, gmail, hotmail chat என்று சாட்டையடிப்பதிலேயே எங்களது நேரங்களை கடத்துகின்றோம், எங்கு, என்ன நடக்கின்றது என்பது குறித்து, எமது சமூகத்தை எப்படி ஒரு சமூகம் திட்டமிட்டு தாக்குகின்றது என்பதை தேடிப்பார்க்க, அவர்களை இணங்கண்டு உரியவிததில் பதிலளீக்கும் கடமையுணர்வும் பொருப்புணர்வையும் புரிந்துகொள்ளாமல் காலம் கடத்துகின்றோம்.

இஸ்லாத்திற்கு வெளியே நின்றுகொண்டு www.sengodiwordpress.com என்ற ஒரு பக்கம்,

அது போல்

முஸ்லிம் பெயர்தாங்கியாக இருந்துகொண்டு

www.azeezahmedwordpress.com

www.nagoreflesh.blogspot.com என்று பல பக்கங்களை அறிமுகப்படுத்தாலாம்.

இவர்கள் தவிற ஆரம்பகாலங்களில் கொள்கை பேசுகின்றோம் என்று தெளஹீத்வாதிகளாக தங்களை விளம்பரப்படுத்திய சிலர் மார்க்கத்திற்கு மாற்றமான அகீதாவை முழுமையான செயல்களை செய்யும் சில அமைப்புக்களுடன் வால் பிடித்துச் செல்வதையும்,

இன்னும் சிலர் மார்க்கம் பேசுவதற்காக அரசியல் கட்சிகளை தேர்ந்தெடுத்துக்கொண்டு இலாபம் தேடுவதையும் பார்க்க முடிகின்றது.

அன்பின் சாகோதர்களே !!

இவைகளை பட்டியலிட்டு பார்க்கின்ற போது இவர்கள் அனைவரும் இஸ்லாத்தை மாசுபடுத்துவதற்கு வெளிவந்த சிந்தனை ரீதியான ஆயுத தாரிகளாகும்.

இவர்களுடைய பக்கங்களை திறந்து பார்க்கின்ற போது,

இவர்களுடைய நடத்தைகளை கவனிக்கின்ற போது நாம் மிகப்பெரிய யுத்தத்தை சந்திப்பதாக பார்க்க நேரிடும்.

வாருங்கள்

ஒன்று சேருவோம்.


வேசம்போடும் மோசமானவர்களை முதலில் களைவோம்.

சமூகத்திற்கு அடையாளப்படுத்துவோம்.

சிந்தனை ரீதியாக இவைர்களை விரட்டியடிப்போம்.

உங்களை அழைத்து உங்கள் அழைப்புக்காக காத்திருக்கின்றேம்.

உங்கள் சகோதரன்.

 
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

சத்தியத்தை இணங்காட்டும் விவாதங்கள்

எமது மொழியில் இஸ்லாத்தை பரப்புவதில், சரியான முறையில் எடுத்துச் சொல்லுவதில், மற்றும் இஸ்லாத்தை அதன் சட்டதிட்டங்களை இஸ்லாத்திற்குள்ளிருந்துகொண்டும் வெளியிலிருந்துகொண்டும் விமர்சிப்பவர்களுடனும்


இஸ்லாத்தை பின்பற்றுகின்றோம், போதிக்கின்றோம் என்ற பெயரில் இஸ்லாமிய சட்டங்களுக்கப்பாற் நின்று கொண்டு பரப்புவர்கலுடனும்,

பகிரங்கமாக முன்நின்று அந்த பட்டியல்காரர்களை அழைத்து விவாதங்கள் மூலம் சத்தியத்தை எடுத்துரைத்து

உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லுவதில் இன்று எம்மால் இணங்காணப்பட்ட தழிழ் கூறும் உலகின் பேரஞர் பீ. ஜே அவர்கள் இதுவரை நடாத்திய விவாதங்களில் சிலவற்றை இங்கு கண்டு பயன்பெறலாம்.

விவாதங்களுக்குள் செல்வதற்கு தலைப்பை click செய்யவும்.

அல்லாஹ் அவரின் அறிவை மென்மேலும் அதிகரிக்கச்செய்வானாக.



எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

அஹமது ஹுசைன் தீதாத் அவர்கள் பற்றி ஒர் அறிமுகம்

மாற்றங்கள் தேவை - சுவை 18


இவரது முழு பெயர் – அஹமது ஹுசைன் தீதாத்

பிறப்பு - ஜுலை 1, 1918

பிறந்த ஊர் - குஜராத், (இந்தியா)

தொடர்ந்தும் படிக்க தலைப்பை click செய்யவும்.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
அல்லாஹ்வின் திருப்பெயரைக்கொண்டு...





அல்ஹம்துலில்லாஹ், ”மாற்றங்கள் தேவை” எனற தொனியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பக்கம் மிக அமைதியாக வெற்றிநடைபெருகின்றது.





இங்கு வெளியிடப்படும் கட்டுரைகள் தொடர்பாக,

அல்லது உங்கள் கருத்துக்களை இங்கு பதிவது தொடர்பாக,

உங்கள் சந்தேகங்கள் தொடர்பாக,
உங்கள் ஆக்கங்களை வெளியிடுவது தொடர்பாக,


இணைந்துகொள்ளுங்கள் எம்முடன்;

rila27@gmail.com
ridha27@hotmail.com
www.changesdo.blogspot.com


இந்தச் சிறியவனின் முயற்சி பாரிய மாற்றங்களை கொண்டுவர ஒத்துழைப்பு வேண்டியவனாக.

வஸ்ஸலாம்.

"மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்களின் வாழ்க்கை வரலாறு!!!"

 தொடர் 2                                                                                                         மாற்றங்கள் தேவை - சுவை 16 ல் கடந்த 21 April, 2010 அன்று "மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்களின் வாழ்க்கை வரலாறு!!!"
என்ற கட்டுரையை அறிமுகப்படுத்தியிருந்தேன்.
இந்த ஆக்கத்தை சமர்ப்பித்த தொப்பியுடன் காட்சிதரும் இந்த சகோதரிடன் சில சந்தேகங்களை கேட்டுத்தெரிந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.


1. ”உமரின் நாவில் அல்லாஹ் பேசுகின்றான்” என்கின்ற கூற்றை ஏற்றுக்கொள்ள முடியுமா?

2. “முஹம்மதை யாராவது வணங்கினால் தெரிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக முஹம்மது மரணித்துவிட்டார், யார் அல்லாஹ்வை வணங்குகின்றார்லோ அவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்,
அல்லாஹ் உயிருடன் இருக்கின்றான், அவன் மரணிக்கமாட்டான்” இது உண்மையான வார்த்தைகளா?

3. சீயாக்கள் அலி ரலி அவர்கலுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நியாயமானதா?

4. ”முஹையதீன் ஆண்டவர்” என்று சொல்லுவதற்கு பதிலாக முஹையதீன் என்று சொல்லுவது அல்லாஹ்விடத்தில் குற்றமாக கருதப்படுமா?

5. முஹையதீன் ஆண்டவருக்கு”முஹையதீன்” என்று பெயர் வைத்தது அல்லாஹ் இல்லை என்று சிலர் வாதிடுகின்றனர், இதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

6. முஹையதீன் ஆண்டவருக்கு பின்னால் அவரை விட ஒரு சிறந்த மனிதர் வருவதற்கு சந்தர்ப்பம் இருக்கின்றனவா?

அன்பின் சகோதரர் அஸீஸ் அஹ்மத் அவர்களுக்கு,

முஹையதீன் ஆண்டவர் குறித்து பலரது பல விமர்சன கருத்துக்களை பார்க்க முடிகின்றது, இந்த வகையான விமர்வனங்களிலும் கருத்துக்களிலும் எது சரி எது பிழை என்பதை தீர்மானிக்கமுடியாத நிலையில் நான் இருக்கின்றேன்.

அதனால் எனது மேலுள்ள சந்தேகங்களுக்கு வெகுவிரைவில் விடையளிப்பீர்கள் என அவாவடைகின்றேன்.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

BIOGRAPHY OF IBN KATHEER

 BIOGRAPHY OF IBN KATHEER (May Allah bless his soul)  (700 -774 A.H.)

`Imad Ad-Deen Isma`il Ibn `Umar IbnKatheer Al-Basri Ad-Dimashqi was born in

700 A.H., or shortly afterwards. After the decease of his father, Ibn Katheer,

aged seven then, headed for Damascus, accompanied by his elder brother. He

owed much of his learning to Ibn Ashginah, Al-Amadi, Ibn `Asakir and others,

may Allah be pleased with them all. He immensely revered Ibn Taimiyah, may

Allah bless his soul, whose views he believed, defended and mostly abided by,

particularly as regards divorce. It was on account of this that he went through an

ordeal and was made to suffer a lot.

Ibn Katheer was widely acclaimed for the sublime degree of learning that he

so admirably attained. Scholars have unanimously attested to his wellversedness,

particularly in the fields of the exegesis of the Glorious Qur'an,

Hadith and history. Ibn Habeeb describes him as "the leader of all men engaged

in the exegesis (of the Qur'an). He amassed and categorized all (the knowledge)

he heard. People marveled at his fatwas and benefited from his teachings. His

fatwas grew widely popular all across the country. He was renowned for his

precision and was proclaimed as the beacon of history, Hadith and exegesis (of

the Qur'an)." Ibn Hijji, one of his students, owed: "Of all our contemporaries, he

(Ibn Katheer) was the best at memorizing authentic Hadiths and the most

knowledgeable as to assessing the degree of reliability and honesty of Hadithnarrators

as well as authentic and non-authentic Hadiths. His comrades and

mentors acknowledge every word of the above. I would frequently visit him, and

every time I was in his company I benefited from him."

Ibn Katheer lost his eyesight shortly before he died in 774 A. H. He was buried at

the Sufis cemetery along with his mentor Ibn Taimiyah. Among his best-known

works is his masterpiece in history Al-Bidayah wan-Nihayah (The Beginning and

the End) .He also interpreted part of Al Bukhari's Sahih (book of authentic

Hadiths). By and large, Ibn Katheer's admirable knowledge and well-versedness

are best manifested to whoever reads his two best celebrated masterpieces; his

interpretation and his book of history.

-Thanks a lot to Ali As-Sayed Al- Halawani, Stories



Of The Quran -
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

List of Universities of the Saudi Arabia

அன்பின் உங்கள் கவனத்திற்கு,

சவுதியில படிக்க விரும்பினால் இந்த பட்டியலில் ஒன்றை தீர்வு செய்து விண்ணப்பியுங்கள்.
முயற்ச்சி  பயனளிக்கும், இன்சா அல்லாஹ். 

Saudi Arabia has a few number of major universities, Colleges, and Institutes.

King Fahd University of Petroleum and Minerals (KFUPM) in Dhahran, given university status in 1975

King Saud University in Riyadh, founded in 1957

King Faisal University in Dammam and Hofuf, founded in 1975

King Abdulaziz University in Jeddah, founded in 1967

Jubail Industrial College in Jubail, founded in 1978

Jubail Technical College in Jubail

University College of Jubail in Jubail, founded in 2006

Yanbu Industrial College in Yanbu, founded in 1975

Islamic University of Medina, founded in 1961

King Khalid bin Abdul Aziz University in Abha, founded in May 1998

Prince Mohammad Bin Fahd University in Khobar
Imam Muhammad bin Saud Islamic University in Riyadh, given university status in 1974

Umm Al-Qura University in Mecca, founded in 1979

Taibah University in Madina, founded in 2005

University of Ha'il in Ha'il City, founded in 2006
Qasim University in Qasim

Taif University in Taif

Arab Open University in Jeddah and Riyadh

Effat College in Jeddah

Dar Al-Hekma College in Jeddah

CBA College in Jeddah

Prince Sultan Aviation Academy in Jeddah

Prince Sultan University in Riyadh

Institute of Public Administration in Dammam, Riyadh, Jeddah, and Mecca

Dammam Technical College in Dammam

Najran University in Najran, founded in 2006

Jizan University in Jizan, founded in 2005

Al Jawf University in Al Jawf, founded in 2005

Al Bahah University in Al-Bahah, founded in 2006

Al Faisal University in Riyadh, founded in 2005

Al Yamamah University in Riyadh, founded in 2006 it is college later

King Saud Bin Abdulaziz Health Science University in Riyadh,founded in 2005 it is Academic Health later.

Girl's University in Riyadh

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

இஸ்லாமிய பார்வைக்குள் படைப்பிலக்கியம் - 1

மாற்றங்கள் தேவை - சுவை 15
அபூ அனூத்,இலங்கை.

பீடிகை;
மனித இனத்தின் படிப்படியான வளர்ச்சிப் படியில் மொழியின் பயன்பாடு மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. மனிதன் விலங்குகளை விட உயர்ந்த, உன்னத நிலையை அடைந்திருப்பதற்கும், வளர்ச்சியின் உச்சியைத் தொட்டு நிற்பதற்கும், மொழியே முக்கிய பங்காற்றி வருகிறது. கருத்துப் பரிமாற்றம் நடைபெறுவதற்கு இன்றியமையாத அடிப்படைச் சாதனம் மொழியாகும்.
மனித இனத்தை மிக அழகாக சிருஷ்டித்த அல்லாஹ், அவனது உணர்வுகளையும் கருத்துக்களையும் வெளிப்படுத்தவும் வழியமைத்துக் கொடுத்தான். அவன் மனிதனுக்கு வழங்கிய எண்ணிலடங்காத அருள்களில் சிறப்பானதும் முதன்மையானதும் மொழியாகும். இது தொடர்பாக அல்குர்ஆன் இவ்வாறு பேசுகிறது.

“மனிதனைப் படைத்தான் விளக்கும் திறனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்” (55:3,4)
மிக அழகாகவும் அற்புதமாகவும் மனிதனைப் படைத்த அவன், மனிதனுடைய உணர்வுகளையும் கருத்துக்களையும் அவன் தடைகளின்றி மிக இலகுவில் அவன் வெளிப்படுத்த வேண்டும் என்ற கருணையில் ஒரு நாவையும் இரண்டு உதடுகளையும் வழங்கியுள்ளான். தன்னை அளவற்ற அருளாளனாக அடையாளப்படுத்தி, அருள்களையும் பட்டியலிட்டுக் காண்பிக்கின்றான், அல்லாஹ்.

“அவனுக்கு இரண்டு கண்களையும், நாவையும், இரு உதடுகளையும் நாம் ஆக்கவில்லையா?” (90:8,9)

“பார்ப்பதற்கு கண் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமுடையதாக நாவும், இரண்டு உதடுகளும் பேசுவதற்குத் துணை புரிகின்றன. நாவும் இரண்டு உதடுகளும் மனிதனது மொழியும் ஆற்றலுக்கு எவ்வளவு துணைபுரிகின்றன என்பதை நாம் எமது வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் உணர்கின்றோம். மொழியும் ஆற்றல் மட்டும் இல்லாது இருந்தால் இன்றைய, ஒரு மேம்பட்ட வாழ்க்கையினை மனிதன் அடைந்திருக்க இயலாது.”

மொழியின் முக்கியத்துவத்தில் பிரதானமான பின்வரும் இரண்டைக் குறிப்பிடலாம்.
1. மொழி, சமூக உள்நிகழ்ச்சிகளுக்கும் தொடர்புகளுக்கும் அடிப்படைக் கருவியாக அமைகிறது. மொழியின்றி மனித இனத்திற்குச் சமூக வாழ்க்கை என்ற ஒன்று தோன்றியிருக்க முடியாது.

2. சமூக நடத்தைக்கு உயிர்கொடுக்கும் காரணங்களான மதம், கலாசாரம், ஒழுக்க நீதி, விழுமிய பண்பாட்டுப் போதனைக் கருத்துக்கள் போன்றவை ஒரு சந்ததியிடமிருந்து மற்றொரு சந்ததிக்கு மொழி மூலமாகத்தான் கடத்தப்படுகின்றன.
எனவே, மொழி மட்டும் இத்தகைய ஓர் இடைப்பட்ட பொருளாக நின்று செயற்பட்டிருக்காவிட்டால், எமது வாழ்வியல் மேம்பாடும் கேள்வின் குறியாகியிருக்கும். எனவேதான் அல்லாஹ், மனிதனைப் படைத்து, அவனுக்குப் பேச்சுக் கலையையும் கற்றுக் கொடுத்தான் என அல்குர்ஆன் பிரஸ்தாபிக்கின்றது.
இந்த வகையில் பேச்சுக்கலை எப்படி முக்கிய அருளோ அதற்கு அடுத்த மிக முக்கிய அருளாக எழுத்தும் அமைகிறது.

“ எழுதுகோல் மீதும் அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக” (68:01)
இங்கு, எழுதுகோல் மீது அல்லாஹ் சத்தியம் செய்வது, எழுதுகோலுக்குள்ள சக்தியையும் அதன் தாக்கத்தினையும் மதிப்பிடப் போதுமாகின்றது.

“அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுக் கொடுத்தான்” (96:04,05)

எழுத்தும் - பேச்சும் அல்லாஹ்வின் மகத்தான இரு அருள்கள். எழுதுகோலை வைத்தே அவன், மனிதனுக்கு எழுதக் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு மொழி வளத்தினை வழங்கி, அதனூடாக எழுத்துக் கலையைக் கற்றுக் கொடுத்தான்.
மனிதனது மொழியினடியாக வளர்ந்த எழுத்துக் கலையினூடாக இலக்கியம் தோன்றி, வளர்ந்தது என மனித இன வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். இலக்கியம் சமுதாயத்தின் இணைபிரியதா அங்கமாக இருப்பதால், அது பற்றிய ஆய்வும் விமர்சமும் சமுதாயத்தோடு இணைந்ததாக இருந்தால் வேண்டும் என்ற கருத்தும் வலுவாகப் பதியப்படுகிறது. எனவே, சமுதாயக் களத்தில் விளைந்த இலக்கியத்தை அதன் விளைநிலத்தில் இருந்து அப்புறப்படுத்தி, தனியாக ஆய்வதற்கு முயலும் எந்த விமர்சன ஆய்வு முயற்சியும் முழுமைத்துவமான பண்புக் கூறு உடையதாக இருக்க முடியாது.
எனினும், சமூகவியல் நோக்கும், வரலாற்று உணர்வும், தத்துவங்கள் பற்றிய ஆய்வும், கண்ணோட்டமும், ஒப்பியல் பார்வையும், அழுத்தமான முருகியல் உணர்வும் நடுநிலையோடு நோக்கும் திறனாய்வுப் பார்வையும், இவை அனைத்துக்கும் மேலாய், ஆழமான இஸ்லாமிய அறிவும் இருந்து, அந்த அறிவுப் பின்னணி இலக்கியப் பார்வையில் அழுத்தமானகப் பதியும் போது மட்டுமே, சிறந்த திறனாய்வு மலர முடியும். இத்தகைய தளத்தில் நின்று மேற்கொள்ளப்படும் திறனாய்வு மலரும் போது மட்டுமே சிறந்த படைப்புக்களும் தோன்ற முடியும். இல்லாவிட்டால்,கீழே காணப்படுவது போன்ற இஸ்லாமிய அகீதாவை சிதைத்த, சடத்துவக் கவிதை (?) களையே நாம் தரிசிக்கும் பரிதாபாத்திற்கு உள்ளாகுவோம்.

இலங்கையில் உண்மை உதயம் என்ற மாத இதழை வெளியிடும் து.யு.ளு.ஆ. என்ற வெளிநாட்டு நிதி நிறுவனம் சில வருடங்களுக்கு முன்னர், புள்ளிகளில் சில புள்ளிகள் என்ற கவிதை நூலை வெளியிட்டுக் கொடுத்தது. அதில் 89ம் பக்கம் பஞ்சம் என்ற தலைப்பில் இறைமறுப்புக் கவிதை ஒன்று இவ்வாறு இடம்பெற்றுள்ளது.
"இங்கே வறுமைகள் தாண்டவமாடும்
தெருவிலே மனிதர்கள்
கார்ல் மாக்ஸே! நீ எழுந்து வா!



கார்ல் மார்க்ஸ் இறைவனை மறுத்தவன். பஞ்சம் நீக்க அவனைக் கதறி அழைப்பது எவ்வளவு பெரிய ஷிர்க். வறுமையை நீக்கி, உணவளிப்பது அல்லாஹ்வினால் மாத்திரமே முடியுமானது என்பதுதான் உண்மையான கொள்கைவாதியின் உறுதியான நம்பிக்கை. பிரார்த்தனை ஒரு வணக்கம்! அதை அல்லாஹ்விடம் மட்டும்தான் உண்மையான கொள்கைவாதி வேண்டுவான். இக்கவிதையில் வறுமையை நீக்கும்படி கார்ல் மார்க்ஸை கடவுளாக அழைத்து பிரார்த்திக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வுடன் அவன் இணையாக்கப்பட்டுள்ளான்.

எழுத்தின் மகிமை பற்றிப் பேசிய திருமறை, இலட்சியமற்ற, சந்தர்ப்பவாத, சினிமாச் சிங்கார கவர்ச்சி, ஆண்-பெண் அந்தரங்கச் சதைவிவகார வெறியாட்டங்கள் என்பன பற்றி, வெட்கத்தை விற்றுவிட்டு எழுதும், அல்லது அவற்றுக்கு வெண்சாமரம் வீசும், சகதியில் எழுந்த, சடவாத சிந்தனைக்கு ஆட்பட்ட, நரகல் நடை - மஞ்சள் எழுத்தாளர்களைக் கடுமையாகக் கண்டித்து, ஓர் அத்தியாயத்தையே தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது

இஸ்லாமிய பெயர; தாங்கிய நிறுவனங்களுக்குள்ளே ஊழிய ஊதியம் புரிவோரிடமிருந்து நிர்வாகி (சுயநலமி)களின் ஆசிர்வாதத்துடன், பொது நிதி உதவியில் வெளிவருபவையே இந்த இலட்சணத்தில் இருக்குமானால், இந்து மதச் சித்தாந்தத்தின் பிரதியான குணங்குடி மஸ்தானின் பாடல்கள், சீறாப்புராணம், ஜெதிபு யேகம், புலவறாற்றுப்படை, நாகையாந்தாதி, நபியவதார அம்மானை, மக்காக் கலம்பகம், நபிகள் நாயம் பிள்ளைத் தமிழ், இடத்திற்கேற்றவாறு பதவி பட்டத்திற்காக கொள்கையை மாற்றும் கவிக்கோ அப்துல் ரஹ்மானின் கவிதை நுhல்கள் போன்றவற்றின் நிலை என்ன என்பதை யு+கிக்க முடிகின்றதல்லவா?

முஸ்லிம் பெயர்தாங்கிகளால் படைக்கப்பட்ட இலக்கியங்கள், இஸ்லாமிய நெறிமுறைகள் விசுவாசக் கோட்பாடுகள், அகீதா வரம்புகளை மீறியதாகக் காணப்படுகின்றன. இன்னொரு பக்கத்தில் கவிதை, சினிமா, நாடகம் போன்றவற்றால் இஸ்லாத்தைப் பிரசாரம் செய்து விடலாம். முஸ்லிம் பெண்கள் நடிக்கலாம் என்ற யு+சுப் அல்கர;ளாவியின் சாக்கடை “பத்வாக்கள்” கூட பரப்பப்பட்டுகின்றன. ஈரானியத் திரைப்படங்களுக்கு ஆதரவுக் கட்டுரைகள் கூட பல பத்திரிகைகளில் பிரசுரமாகின்றன. இன்று பயானின் தாக்கத்தை விட, இவற்றின் தாக்கம் வலுவானது என்ற கருத்துக்கள் கூட முன்வைக்கப்பட்டு வரப்படுகிறது.

இவற்றால் உணர்ச்சியு+ட்டலாம்; அறிவு+ட்ட முடியுமா? என்பதை, நபியின் பிரச்சாரத்தில் கவிதையின் நிலையை ஆராயும் ஒருவர் உண்மையை உணர்ந்து கொள்வார்.
எனவே, முஸ்லிம் பெயரைச் சுமந்தவர்களால் உருவாக்கப்பட்ட, சமகாலத்தில் உருவாக்கப்படுகின்ற தமிழ் மொழியில் உள்ள ஆக்கங்களை, இஸ்லாமிய நோக்கில் அணுகி ஆராய்ந்து, விமர்சிக்கப்படல் வேண்டும் என்ற காலத்தின் தேவை எம்மை நிர்பந்தித்தது. இஸ்லாமியப் பின்னணி இல்லாத இவர்களின் ஆக்கங்களில் காணப்படும், இஸ்லாத்திற்கு முரணான-எதிரான கருத்துக்களை இனங்காட்ட வேண்டும். ஏனெனில், இவர்களைக் காப்பதிலேயே பலரும் கவனம் செலுத்துகின்றனர். இவர்களை விட இஸ்லாமிய அகீதாவையே நாம் பாதுகாக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், ரசனையோடு படிக்கும் அனைவரும் கருத்துக் குழப்பத்திற்கு உட்படுவர். இஸ்லாத்தை தவறாகப் புரியும் நிலையைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த ஆய்வுத் தொடர் எழுதப்படுகிறதே தவிர, யாரையும் சாடும் நோக்கம் எமக்கில்லை.

இலக்கியம், சமுதாயத்தின் இணைபிரியாத அங்கமாக இன்று இருந்து கொண்டிருப்பதால், அது சமுதாய சிந்தனை மாற்றத்திற்கு ஒரளவு பங்காற்றுவதால், எமது சமூகத்திற்கு அதுபற்றிய தெளிவினை வழங்க வேண்டிய காலத்தின் தேவை ஏற்பட்டுள்ளது. இலக்கியம் மனிதனது அழகுணர்வைச் செம்மைப்படுத்தி, அல்லாஹ்வின் வல்லமையையும அகிலத்தில் பரந்துபட்டுக் கிடக்கும் முருகியலையும் (யுநளவாநவiஉள) தரிசிக்கின்ற நுண்ணிய உணர்வுகளையும் அவனில் ஏற்படுத்தி, வளர்த்து விரித்தியடையச் செய்வதற்குப் பதிலாக, அவனது கீழான விரச உணர்வுகளைத் தூண்டி, மிருகமாக்கி, வெறியாட்டமாட வைக்கிறது. நம்பிக்கையையும் முற்போக்கு சிந்தனையையும் அவனில் அதிகமாக்குவதற்குப் பதிலாக, நம்பிக்கையீனத்தையும், விரக்தியையும் வளர்த்து, அவனை நடைப்பிணமாக்குகிறது. இந்த இழிநிலை மாற்றியமைக்கப்பட்டு, இளைஞர்களின் குணமொழுக்கங்கள் நெறிப்படுத்தப்பட வேண்டுமாயின், சிறந்த இஸ்லாமிய இலக்கியங்கள் தோன்ற வேண்டும்.
மொழியின் வரலாற்றுக்கு இன்றியமையாத சான்று இலக்கியமாகும். மொழியினடியாய் இலக்கியம் தோன்றி மனிதனின் கொள்கை, கலாசார, சிந்தனை, உணர்வு போன்றவற்றில் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது என்பதை ஆழ்ந்து நோக்கும் எவரிடமிருந்தும் மாறுபட்ட கருத்தியல் எதிரொலிக்க முடியாது.

இலக்கியம் மிகச் சக்திவாய்ந்த ஆயுதம். அது மனித வாழ்க்கையின் கண்ணாடி மட்டுமல்ல, சமூக வாழ்வை புரட்சி ரீதியாக மாற்றியமைப்பதில் அதற்குப் பாரியதொரு பங்குண்டு என்பதை, வரலாற்றைப் படிப்போரால் அறிந்து கொள்ள முடியும். ஒரு சமூகத்தின் உணர்வுகளினதும் கலாசார, சிந்தனை மரபுகளினதும் படிமங்களாக இலக்கியம் அமைவதால், கலாசார, சிந்தனைத் தாக்கங்களை ஏற்படுத்த இலக்கியத்தைச் சாதனமாகப் பயன்படுத்தும் நவீன உத்திகள் சமகாலத்தில் மிகத்தந்திரமாகவும், நுட்பமாகவும் கையாளப்பட்டு வருகின்றன. இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்துவதற்கு, இஸ்லாத்தின் எதிரிகள் இலக்கியத்தை ஒரு சக்திமிக்க ஆயுதமாகப் பயன்படுத்துவதைக் காண முடிகிறது. இத்தகைய சவாலையும் நாம் இதில் இனங்காட்ட எத்தனிக்கின்றோம்.
ஒரு சமூகத்திற்குச் சொந்தமான கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களிலிருந்தும் கொள்கை உறுதியிலிருந்தும் ஒழுக்கப் பெறுமங்களிலிருந்தும் அச்சமூகத்தை அந்நியப்படுத்தும் முயற்சியில் அதற்கு உன்னத இடமுண்டு என்பதை நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்த வகையில் நோக்கும்போது இலக்கியத்திற்கும் மனித சமுதாயத்திற்குமிடையிலான தொடர்பு இறுக்கமானதும், நெருக்கமானதும் ஆகும். அது சமுதாயத்தினடியாகத் தோன்றி, மனிதனின் மகிழ்ச்சியையும், உள்ளக் கிடக்கையையும், சோகத்தையும் கவலையையும், களிப்பையும், நம்பிக்கையும், ஆசைகளையும், ஆவல்களையும், அவலத்தையும், கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பிரதிபலித்துச் செல்கிறது.
இதற்கு அண்மைய உதாரணமாக கார்ல் மார்க்ஸும் அவருடைய நண்பர் எங்கல்சும் இணைந்து நடத்திய சமுதாய, பொருளாதார ஆய்வுகளில் இலக்கியம் 20ம் நூற்றாண்டுடைய வாழ்வியலையும் சிந்தனைப் போக்குகளையும் பெருமளவில் மாற்றியமைத்ததோடு, தற்கால இலக்கிய படைப்புக்கள் மீதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின.

“உலக இயக்கத்திற்கும், வரலாறு, கலை போன்றவற்றின் செயற்பாட்டிற்கும் தூண்டுகோலாக, அடித்தளமாக இருப்பது பொருளாதாரப் பிரச்சினைகளே! என்பதைக் கார்ல் மார்க்ஸும் அவரது சிந்தனைகளை அடித்தளமாகக் கொண்டு சமூகவியல் ஆய்வைத் தொடர்ந்த மாக்ஸிய அறிஞர்களும் சமூகவியல் ஆய்வைத் தொடர்ந்த மாக்ஸிய அறிஞர்களும் விளக்கிடப் பகிரதப் பிரயத்தனப்பட்டுள்ளனர்.
“இலக்கியவாதிகள், மனித சமுதாயத்தை நிர்மாணிக்கும் கட்டடக் கலைஞர்கள்” எனப் பொதுவுடைமைவாதியான ஸ்டாலின் கூறி, மனித சமூக நிர்மாணத்தை நெறிப்படுத்தும் இலக்கியத்தின் வல்லமையை விளக்கினார். அதேபோன்று, சிறந்த கட்டக் கலைஞன் நன்றாக கட்டடத்திற்கு ஓர் அமைப்புத் தோற்றம், ஒழுங்கு என்பவற்றைக் கொடுப்பது போன்று, அதற்கு மாற்றமான கட்டடக் கலைஞன் இருப்பான் என்பதை மறுதலிக்க முடியாது. எனினும், ஸ்டாலினின் கருத்து இலக்கியத்தின் சக்தியையும் பலத்தையும் நமக்கு உணர்த்தி நிற்கிறது.

இனி இலக்கியம் என்றால் என்ன?
அது பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம் யாது?
அது எந்த வகையில் மற்றைய கோட்பாடுகளிலிருந்து வேறுபடுகிறது?
இலக்கிய வாதிகளது ஆக்கங்களை இஸ்லாமிய அடைமொழிகளோடு நோக்க முடியுமா? என்பன போன்ற தெளிவைப் பெற்று, இஸ்லாமிய இலக்கியத்தின் செயல்நெறியைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

பல்வேறு கொள்கைகள் மிகச் சாதாரணமாகவே மனிதச் சிந்தனையில் ஊடுருவி, ஆதிக்கம் செலுத்தும் இன்றைய காலகட்டத்தில் இஸ்லாத்தையும், அதன் இலக்கியக் கோட்பாட்டையும் புரிவதில் தவறிழைத்துக் கொண்ட சில முஸ்லிம் பெயர் தாங்கிகள், மேற்கின் இஸ்லாமிய விரோதப் போக்கை இனாமாகப் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே, இஸ்லாத்திற்குப் புறம்பான சிந்தனைத் தளத்தில் நின்று கொண்டு, “இலக்கியம் என்பது, அழகுணர்வுத் தேவை வெளிப்பாடு, கலை கலைக்காகவே என்ற நோக்கில் அணுகப்படல் வேண்டும். அதனை இரசனை உணர்வுடன் அனுபவித்துச் சுவைத்து, இன்புறல் வேண்டும். அதை மதம் என்ற குறுகிய வேலிக்குள் சிறையிட முயற்சித்தல் எவ்வகையிலும் அறிவுடைமையாகாது. இஸ்லாமிய நோக்கில் முஸ்லிம் கவிஞர்கள்-புலவர்களின் ஆக்கங்களையும் அணுகி ஆராய்தல் என்பதும் அர்த்தமற்ற ஒரு வீண் முயற்சியாகும் என சில விமர்சனக் குரல்கள் எழுந்துள்ளன. அதற்கோர; உதாரணத்தைக் கீழே தருகின்றோம்.
“எஸ்.ஜே.வி.யை என் இறக்கைகளில் காணுங்கள்” எனும் கவிதை பிரசுரமான போது, சிலர் மத நிலை நின்று அதனை விமர்சித்தனர். அவர்கள் கவிஞனின் பாஷையைப் புரிந்து கொள்ளாதவர்கள். அல்லாமா இக்பாலின் ஜாவீது நாமாவை படித்துப் பார்க்க வேண்டும்.”
என்று கலாநிதி எம்.ஏ. நுஃமான் அவர்கள், எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் “நான் எனும் நீ” எனும் நூலுக்கான தனது அணிந்துரையில் கூறும் இக்கருத்து, நாம் மேலே குறிப்பிட்டதற்கோர் அண்மைய உதாரணமாக உள்ளது. எஸ்.ஜே.வி. என்பவர் மாற்று மதத்தவர். (காபிர்) அவர் சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகர முடியாது என்பது இஸ்லாத்தின் நிலை. ஆனால், அமைச்சர் அஷ்ரஃப் அவர்கள் “எஸ்.ஜே.வியை என் இறக்கைகளில் காணுங்கள்” என்ற கவிதையில் அவரை, தான் சுவனத்துக் கன்னிகளிடமிருந்து பறித்துக்கொண்டு, பு+மிக்கு வருவதாக வர்ணிக்கிறார். இவரின் கருத்து பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டது. மரணித்தவர் மீள உலகிற்கு வரமாட்டார் என்பது நாமறிந்த ஒன்று. அப்படியிருந்தும் இதற்கு வக்காலத்து வாங்குவது என்பது எம்மை அதிர்ச்சிக்குள் வீழ்த்துகிறது. இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்ப்பதாகவும் பகுத்தறிவுக்கு முரணாகவும், புகழ்ச்சி வரம்பைக் கடந்து சென்றதாலுமே, பலர் அதனை மதநிலை நின்று விமர்சித்தனர் என்பதை நடுநிலையோடு நோக்கியிருந்தால், அவ்விமர்சனம் பிறந்திருக்காது என்பதே எமது பணிவான கருத்து.
எனவே, முஸ்லிம்களால் ஆக்கப்படும் இலக்கியங்கள் அனைத்தும் அவை, இஸ்லாமிய நெறிமுறைகள் விசுவாசக் கோட்பாடுகள், அதன் வரம்புகள், கண்ணோட்டங்கள் அனைத்தையும் மீறி, இஸ்லாமிய அகீதாவுக்கு முரணான, எதிரான எந்தக் கருத்துக்களை உள்ளடக்கியிருந்தாலும் சரியே! அவை, இஸ்லாமிய இலக்கியமெனக் கொள்ளப்படல் வேண்டும். அவற்றை விமர்சினத்திற்கு உட்படுத்துதல் பொருத்தமற்றது என்ற “கருத்து மயக்கம்” நிலவும் இன்றைய காலகட்டத்தில், அது பற்றிய சிந்தனைத் தெளிவை வழங்குவது இஸ்லாமியக் கற்கைத் துறை சார்ந்தோரின் கடமையாகும்.
இஸ்லாத்தின் சர்வ வியாபகத்தன்மை, அதன் ஆழமான பல்வேறு பரிமாணங்கள், பிரபஞ்சம், அதில் மனிதனது வாழ்வு தொடர்பான விரிந்த, ஆன்மீக, உலகியல் நோக்கு, இஸ்லாத்தின் தெய்வீகத் தன்மை என்பன பற்றிய அறிவையும் சிந்தனைத் தெளிவையும் பெற்றோர் இதன் அவசியத்தை உணர்ந்து, நமது விமர்சன அணுகுதலை ஜீரணித்துக்கொள்வர்.

எமது சமகால இலட்சிய வாதங்களான முதலாளித்துவமும், கம்யு+னிச-பொதுவுடமை வாதமும் இலக்கியத்தினூடாகவே அதிகமதிகம் பிரசாரப்படுத்தப்படுகிறது. இச்சித்தாந்தத்திற்குள் சிறைப்பட்டவர்கள், அக்கொள்கையின் பிரசார சாதனமாக, இலக்கியத்தையே எடுத்துக் கொள்கிறார்கள். மக்களின் உணர்வுகளைத் தூண்டி அவர்களது சிந்தனை கருத்துக்களில் இலக்கியத்தினூடாக ஊடுருவி, ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதேபோல், இஸ்லாத்திற்கு எதிரான சக்திகள், இஸ்லாத்தின் தூய்மையான ஏகத்துவக் கருத்துக்களை மாசுபடுத்தியும், அதன் பகுத்தறிவு பு+ர்வமான போதனைகளைத் திரித்தும், சிதைத்தும் பிரசாரம் செய்வதிலும், முஸ்லிம் உலகிற்கு எதிராக ஏனைய மக்களை அணிதிரளச் செய்வதற்கும், நாம் உயிரிலும் மேலாக மதிக்கும் திருத்தூதர் முஹம்மத் நபி  அவர்களின் புனிதமான, அப்பழுக்கற்ற அளுமைக்கு மாசு கற்பிக்கும் பிரயத்தனங்களிலும், இலக்கியத்தினூடாக சதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் பிரதிபலிப்பு இன்று பிரத்தியட்சமாகத் தெண்படுகிறது. மேற்கத்தேய சடவாத சிந்தனையால் ஆகர்ஷிக்கப்பட்ட, இஸ்லாம் தெரியாத, இஸ்லாமிய, உம்மத்தில் தோன்றிய, இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைப் போக்குள்ள, நவீனத்துவ வாதிகளான, மேற்கின் சாக்கடைகளுக்கு கூஜா தூக்கி வயிற்றைக் கழுவும் ஸல்மான் ருஷ்தி, தஸ்லீமா நஸ்ரீன்,தாஹா ஹூஸைன், நஜீப் மஹ்பு+ழ், தோப்பில் முஹம்மது மீரான், சாரா அபு+பக்கர் போன்ற இன்னும பலர், தமது கீழான இஸ்லாமிய விரோதப் போக்குச் சிந்தனையை மக்கள் மன்றத்தில் ஜனரஞ்சகப்படுத்துவதற்கு இலக்கியத்தையே ஊடகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இலக்கியப் பரிமாணங்களான பாட்டும், கவிதையும், நாடகமும், சிறுகதையும், நாவலும், சினிமாவும் சத்தியதை அசத்தியமாகவும், அசத்தியத்தை சத்தியமாகவும், மெய்யை, பொய்யாகவும், பொய்யை மெய்யாகவும், உண்மையை உளரலாகவும், உளரலை உண்மையாகவும், திரிவுபடுத்தி, அழகூட்டி, கவர்ச்சியாக்கி, கை, கால், மூக்கு வைத்து, உயிர்கொடுத்து உணர்ச்சியூட்டிச் சொல்ல வல்லன.
இலக்கியம்
இலக்கியம் குறித்து, இலக்கிய வாதிகளால் பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை, அனைத்தையும் ஒருங்கிணைத்து இரத்தினச் சுருக்கமாக நோக்கின், “சொல்லில் அழகைப் புலப்படுத்தி வாழ்க்கைக்குரிய உண்மை இலக்கினை இயம்புவது இலக்கியமாகும் என வரைவிலக்கணப்படுத்தலாம். எப்படி கல்லில் அழகை வெளிப்படுத்தி, ஒரு பொருளை வடித்தெடுப்பதை சிற்பக்கலை என்கிறோமோ, அதுபோல, சொல்லின் அழகை வெளிப்படுத்தி, வாழ்க்கை இலட்சியத்தைச் சுட்டுவது இலக்கிக் கலையாகும்.
உண்மைகளை அழகுபடப் பாடிய இலக்கியங்கள் தமிழில் ஏராளமாகவும் தாராளமாகவும் உள்ளன. அதேவேளை, அழகுபடக்கூற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, உண்மைகளைப் பலிபீடத்திற்கு அனுப்பிவிட்டு, அழகையே ஆராதித்துக் கொண்டிருக்கிற இலக்கியங்கள் பல இன்று நம்மிடையே உலா வருகின்றன.
எதார்த்தத்திற்கும், உண்மைக்கும், மனசாட்சிக்கும் எதிரான பொய்யும், புனை சுருட்டும், கற்பனையும், செவிவழிச் செய்திகளும், கண், காது, மூக்கு என்பன வைத்துப் புனையப்பட்ட கதைகளும், அழகியல் பெயர் தாங்கி இலக்கியத்தின் பாடுபொருளாகப் பவனி வரலாயிற்று.
உண்மைகளை உலவவிட வேண்டும் என்ற நிலை பின்னுக்குத் தள்ளப்பட்டு, போலிகளை உலாவவிடும் போலிகள் அதிகரித்து, பொய்யாயினும், புழுகு மூட்டைகளாயினும் கவர்ச்சியோடு கூறினால் அது இலக்கியமாகிவிடும் எனும் எண்ணம் படைப்பவனிடமும் (இலக்கியலாதிகளிடமும்) படிப்பவனிடமும் (இலக்கியப் பிரியர்களிடமும்) பரவி, சமுதாயம் அறியாமைக்குள் அஸ்தமனமாகிக் கொண்டிருக்கின்றது.
அல்குர்ஆன் அருளப்பட்ட காலத்திலும், இந்த இழிநிலை தான் உலக இலக்கியங்கள் அனைத்திலும் மேலோங்கி இருந்தது. எனவே, அத்தகைய போலிகளை தோலுரித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்பட்டது. அதனால், அல்குர்ஆனின் பின்வரும் வசனங்கள் இலக்கியம் பற்றிய இஸ்லாத்தின் அணுகுமுறையைத் தெளிவாக எடுத்துரைத்து, இலக்கிய வாதிகளை நெறிப்படுத்துகிறது.

“ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.
அவர்கள் ஒட்டுக் கேட்கின்றனர். அவர்களில் அதிகமானோர் பொய்யர்கள், கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள். அவர்கள், ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் தட்டழிந்து திரிவiதை நீர் அறியவில்லையா? அவர்கள் செய்யாததைக் கூறுகின்றனர்.” (26:221-226)

உண்மையை யதார்த்தத்தை அழகுறப்பாடி வாழ்க்கையின் இலட்சியத்தை, இஸ்லாத்தின் நெறிக்குட்பட்டு, சத்தியத்தை எடுத்தியம்பும் இலக்கியங்களை அது எதிர்க்கவில்லை. மாறாக, அதை ஆதரவுக் கரம் நீட்டி வரவேற்கிறது. ஆனால், உண்மையை மொட்டையடித்துவிட்டு, அதன் தலையில் பொய்யை அல்லது அசத்தியமான, உண்மைக்குப் புறம்பான, அளவுக்குமீறிய கற்பனைகளை உலாவவிடும் நச்சிலக்கியங்களையே அது கடுமையாகக் கண்டிக்கிறது. அத்தகைய நச்சிலக்கியம் படைக்கும் பொய்யர்களை அல்குர்ஆன் ஷைத்தான்கள் என்றே அடையாளப்படுத்திகிறது.

அல்லாஹ்வின் சட்டங்களை விமர்சிக்கும் இன்னொருவரை இங்கு விமர்சிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், புகாரி மொழிபெயர்ப்புக் குழுவில் கூட அங்கம் வகிக்கும் கவிகோ அப்துர் ரஹ்மான் ஒரு மாக்ஸிய சிந்தனை அடிவருடி. ஏனெனில், தனது “பசி எந்தச் சாதி? என்ற நூலில் குர்ஆன் கூறும் குற்றவியல் சட்டங்களை கடுமையாக விமர்சித்து, குப்ரியத்திற்கு கும்மாளமிட்டுள்ளார். சமநிலைச் சமுதாய சிந்தனையை வரித்துக்கொண்ட அவரின் வரிகள் சற்று அவதானித்துப் பாடுங்கள்.

மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள் அல்லர்
அவர்களில் தீயவர்களும் இருக்கிறார்கள்.
தீயவர்கள் நமக்குத் தீங்கு செய்யும்போது அதற்குப்
பழி வாங்க வேண்டும் என்ற உணர்வு எழுவது
இயற்கை.
ஆனால், ஒவ்வொருவரும் கண்ணுக்குக்
கண், பல்லுக்குப் பல் என்று பழிவாங்கத்
தொடங்கிவிட்டால் உலகத்தில் ஊனமுடையவர்கள்
மட்டுமே இருப்பார்கள்.
பொறுமை இல்லாதவர்களால்தான் உலகத்தில்
பிரச்சினைகள் உண்டாகின்றன.
பொறுமை உடையவர்களோ சாந்தியின் தூதுவர்களாக
இருக்கிறார்கள்.
உலகம் அத்தகையவர்களால்தான் வாழ்ந்து
கொண்டிருக்கிறது.
ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் குடும்ப வாழ்க்கை
பொறுமைக்குப் பயிற்சிக் களமாக அமைந்திருக்கிறது.
குடும்பம் சமூகத்தின் அடிப்படை அலகு.
குடும்பத்தில் பொறுமையைக் கற்றுக் கொண்டவன்
சமூக வாழ்க்கைக்குத் தகுதியுடையவனாகிறான்.
பொறுமை என்ற உயர்ந்த ஒழுக்கத்தைக் காலந்
தோறும் சான்றோர்கள் போதித்து வருகிறார்கள்.
ஒருவன் உன்னை வலது கன்னத்தில்
அறைந்தால் அவனுக்கு
மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு (மத்தேயு 5.39)
என்கிறார் இயேசு பெருமான்.
தன்னை அறைந்தவனைத் திருப்பி அறைய வேண்டும்
என்று நினைப்பதுதான் உலக இயற்கை.
அறைந்ததைப் பொறுத்துக் கொள்தே பெரிய விஷயம்.
இயேசு பெருமானோ ‘நீ திருப்பி அறையாதே.
அறைந்தவன் திருப்பி உன்னையே அறைய உன்
மறு கன்னத்தையும் காட்டு’ என்கிறார்.
இதென்ன பைத்தியக்காரத்தனம் என்று தோன்றலாம்.
ஆனால், இதில் சாந்தியின் வித்து இருக்கிறது.
அறைந்தவனைத் திருப்பி அறைந்தால் அவனும்
திருப்பி அடிப்பான். சண்டை முற்றும். பிறகு
இதில் சாதி, மதம், இனம் எல்லாம் சேர்ந்து
கொள்ளும்.
தனிப்பட்ட இருவருடைய சண்டை பெரிய
கலவரமாகிவிடும்.
அறைந்ததைப் பொறுத்துக் கொள்கிறவன் ஒரு
பெரிய கலவரம் நிகழாமல் தடுத்துவிடுகின்றான்.
அதுமட்டுமல்ல அறைந்தவனுக்கு மறு கன்னம்
காட்டினால், அறைந்தவன் திடுக்கிடுவான்.
“இத்தகைய நல்லவனையா அறைந்தோம்?” என்று
வருந்துவான். அதனால் திருந்துவான்.
எனவே பொறுத்துக்கொண்டவன் ஒரு தீயவனை
நல்லவனாக்கி விடுகிறான். பகைமைக்கு முற்றுப்
புள்ளி வைத்துவிடுகிறான்.
இயேசு பெருமானின் இந்தப் பொன்மொழியைப்
பொறுமையின் உச்சம் என்று உலகம்
போற்றிக் கொண்டாடுகிறது.
ஆனால், திருவள்ளுவரோ இதற்கும் மேலே
போகிறார்.
‘ஒருவன் உனக்குத் தீமை செய்தால்
அதற்கு மாறாக நீ
அவனுக்கு நன்மையைச் செய்’
என்கிறார்.
இன்னா செய்தாரை ஒறுத்தல்
அவர் நாண
நன்னயம் செய்து விடல் (குறள் 314)
இயேசு பெருமானின் வார்த்தைகளை வைத்தே
இதை விளக்குவதாக இருந்தால், ஒருவன்
உன்னை அறைந்தால் நீ அறைந்த கைக்கு
மோதிரம் போட்டு விடு என்று அர்த்தம்
தண்டிக்க நினைப்பதுதான் மனித இயற்கை எனவே
இந்த இயற்கைப்படியே ‘உனக்குத் தீங்கு செய்தவனைத்
தண்டிக்கத்தானே விரும்புகிறாய்? இதோ இதுதான்
தண்டனை. அவனுக்கு நீ நன்மையைச் செய்’
என்கிறார் வள்ளுவர்.
இது எப்படி தண்டனை ஆகும் என்று கேட்கலாம்.
உண்மையில் இதுதான் கொடிய தண்டனை.
அடித்தவனைத் திருப்பி அடித்தால் அவனுக்குக்
கொஞ்ச நேரம் வலிக்கலாம். பிறகு வலி
போய்விடும்.
காயம் ஏற்பட்டால் கூட ஆறிவிடும்.
ஆனால், தீமை செய்தவனுக்கு நன்மை செய்வது
என்பது அவனுடைய இதயத்தில் அடிப்பதாகும்
இந்த அடியின் வலி தீராது. அவன் நினைக்கும்
போதெல்லாம் வலிக்கும்.
இத்தகையவனுக்கா தீங்கு செய்தோம் என்று
நினைத்து வருந்துவான்.
இந்தக் காயம் ஆறாது
பரிமேலழகர் உரைப்படி இந்தக் குறளில்
இன்னொரு கருத்தும் இருக்கிறது.
தீமை செய்தவனுக்கு நன்மை செய்வதோடு,
அவன் செய்த தீமையையும், நீ செய்த நன்மை
யையும் மறந்து விடு என்பது பரிமேலழகர்
கருத்து.

இக்கவிதையைப் படிக்கும் போதே கவிக்கோ யார் என்று தெரிந்து விடும்.


தொடரும் .................